Tuesday, December 3, 2013

வெங்கட்பிரபுவுடன் இணையும் சூர்யா!



'மங்காத்தா' படம் முடிந்ததும் சூர்யாவிடம் கதை சொன்னார் வெங்கட்பிரபு.


ஆனால், அப்போது சூர்யாவால் வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க முடியவில்லை.


'மாற்றான்', 'சிங்கம் 2', படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா.


அதற்குப் பிறகே, கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் 'பிரியாணி' யை உருவாக்கினார்.


இப்போது மீண்டும் சூர்யாவை சந்தித்து ஒன்லைன் சொன்னாராம், வெங்கட்பிரபு.


அந்த ஒன்லைன் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.


''முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. ஏப்ரல்ல ஷூட்டிங் தொடங்கிடலாம்'' என்று சூர்யா உறுதியாக சொன்னதால், உற்சாகத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு.


சூர்யா புதியதாக ஆரம்பித்துள்ள டி2 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. 

அறுசுவை உணவு...!



காரம்: 

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு: 

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு: 

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு:

 இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு:

 இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


உப்பு: 

ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"


கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.


நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா? நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எதிர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக? உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா? இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீதை உருவாக்கப்பட்ட காலச்சூழலோடு புரிந்து கொள்வது அவசியம்.


இந்துக்களுக்கு புனித நூல் என புகுத்தப்படுகிற பகவத்கீதை எல்லாருக்கும் பொதுவான கருத்தை சொல்கிறதா? கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை திராவிட மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது? ஆரியர்கள் படயெடுத்து வந்து சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களை துரத்தி, அவர்களது நாகரீகத்தை, வாழ்க்கைமுறையை சிதைத்து தங்களுக்கு சாதகமான விதிகளை, கதைகளை உருவாக்கினர். அவை வேதங்கள், உபநிடங்கள், சாத்திரங்கள் என பல வழிவங்களில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திலும் பிராமணீயம் வெளிப்படுவதை காணலாம். பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஆதரவான கருத்துக்களை வேதங்களும் சாத்திரங்களும் உள்ளடக்கியது. மகாபாரதம் என்கிற கதையை உருவாக்கியதும் அந்த விதத்தில் தான்.


பகவத்கீதை என்பது குருஷேத்திர யுத்தத்தில் தேரோட்டும் சாரதியான கண்ணன் அர்சுனனுக்கு அருளிய உபதேசங்கள். மகாபாரத கதையில் நடந்ததாக சொல்லப்படுகிற ஒரு பகுதியை தொகுத்த நூல் தான் பகவத்கீதை. நமது மக்களுக்கு அறவழியை, அன்பை, மனிதநேயத்தை, ஒழுக்கமான வாழ்வை போதிக்கிறதா கீதை? போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பவர்களில் தனது உறவினர்களை, சித்தப்பாமார்களை....காண்பதாகவும். அவர்களை கொன்றுகுவித்து தான் நாட்டைப் பிடிப்பது தேவையில்லை என்கிறான். அவனது மனிதத்தன்மையை பாருங்கள். அப்படிப்பட்ட குணத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு எதிரில் நிற்பது யாரென பார்க்காமல் தாக்கி கொலைகள் செய்ய கண்ணன் வழங்கிய அறிவிரை தான் கீதை. கொடுத்த வாக்குறுதிகளையும் போர்க்கள விதிகளையும் மீறி தந்திரங்களால் எதிரியை கொலை செய்தவன் கண்ணன். கிருஷ்ணனுக்கு 16022 மனைவிமார்கள் இருந்ததாக மகாபாரதக் கதை கூறுகிறது. ஒழுக்கத்தில் உயர்ந்தவனா கண்ணன்? கோபியர்கள் குளத்தில் குளித்த போது கரையில் இருந்த அவர்களது உடைகளை எடுத்து சென்றவன் கண்ணன். கரயேற முடியாத தவிப்பில் தங்களது உடைகளை திரும்ப தருமாறு கோபியர்கள் கெஞ்சிய வேளை; கரைக்கு வந்தால் உடைகளை தருவதாக சொன்னவன் கோகுலக் கண்ணன். பெண்களிடம் ஒழுக்கம் மற்றும் எல்லைகளை கடந்து நடந்த ஒருவனை கடவுள் என்று பாராட்டி போற்றுவது மக்களுக்கு எந்த முன்மாதிரியை கற்றுத்தருகிறது?


கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியத்தை நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன ஆனது? மேல்சாதி அடிமைத்தனத்திற்கும், பணக்கார வர்க்க அடக்குமுறைக்கும் சந்ததிகளை இழந்து கூனி குறிகி கை கட்டி வாய் பொத்தி நிற்பது மட்டும் தான் மிஞ்சியது. நிலச்சுவாந்தாராக இருக்கிற மேல் சாதிப் பண்ணையாரின் பெல்ட் அடி, செருப்படி, சித்திரவதைகள் அனைத்தையும் அனுபவித்தாலும் வாய்பேசக்கூடாத விதி. அந்த வேதனையிலும் "இது என் தலைவிதி, அவுக செய்துப்போடலாம் என்ன இருந்தாலும் அவாளை நம்பி நாம பொழைக்கணும். நாம நம்ம வேலையை செய்வோம் கடவுள் பாத்துப்பார்" என்ற முனகல்களும், எண்ணக்குமுறல்களும் எத்தனை சந்ததிகளின் வாழ்வை
தொலைத்திருக்கிறது?


சூத்திரர்களும், பஞ்சமர்களும் நாள் முழுவதும் உழைத்து அதன் பலனை வணிகம் செய்பவன், அரசன், பூசை செய்பவன் அனுபவிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது காடுகளில் ஒழிந்து வாழ்வது தான் கடமையா? கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை? இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையா?கடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்ல! வர்க்க பேதத்தையும் வர்ணபேதத்தையும் கட்டிக்காக்கிற முதன்மையானவன்.


அடக்குமுறையிலிருந்து விடுதலையை தருவது தான் நல்ல நெறியாக இருக்கமுடியும். கட்டுகளிலிருந்து கட்டற்ற தன்மைக்கும். விலங்குகள் பூட்டிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த மனிதர்களாகவும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களிலிருந்து முழு உரிமையுள்ள சமமான மனிதர்கள் என்பதுவும் தான் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அணுகுமுறை.


கீதை "கடமையை செய்! பலனை எதிர்பாராதே" என்பதை திருத்தி படியுங்கள்! கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்!


 வர்ண, வர்க்கபேதமற்ற மனிதர்களாக நடைபயில்வோம்!


கிருஷ்ணனின் இந்த மாயாஜாலம் இனி அவசியமில்லை!!

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:


சுருக்கமாக: அகிம்சை முறையில்
 போராடி கொண்டு இருந்த
 காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.

அகிம்சை முறையில் போராடினால்
 பல ஆண்டுகளாக இந்த போராட்டம்
 இழுத்து கொண்டே போகும்.
கோடிகணக்கான
 இந்தியர்களை வெறும் இருபதாயிரம்
 வெள்ளையனைக் கொண்ட ராணுவம்
 அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.

ஏன் அந்த
 ராணுவத்தை அடித்து விரட்ட
 கூடாது. அவர்களை நான் ஆயுத
 ரீதியாக எதிர்கொள்ள திட்ட
 மிட்டு இருக்கிறேன். உங்களின்
 கருத்து என்ன என்று காந்தியிடம்
 கேட்ட
 போது அகிம்சையை போதிக்கும் நான்
 இதை ஒருநாளும் ஏற்று கொள்ள
 மாட்டேன் என்று சொன்னார்.
இருவருக்கும் நிறைய கருத்து மோதல்
 வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள்
 தனித்து போராட தயாராகினார்.
முதல் கட்டமாக
 தமிழ்நாடுக்கு வந்தார்.

வந்து துடிப்பான
 இளைஞ்சர்களை சந்தித்து.
வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக
 தான் எதிர்கொள்ள வேண்டும்
 அதற்காக நாம் ராணுவ
 கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்
 செய்தார்.
பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில்
 மற்ற மாநிலங்களுக்கும்
 சென்று இளைஞ்சர்களின்
 ஆதரவை திரட்டினார்.

ஆனால்
 அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும்
 ஆயுதம் எடுத்து போராட முன்
 வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த
 போது தமிழகத்தில் உள்ள ஆயிர
 கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர
 போஸ் அவர்களின்
 போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள்.

அந்த இளைஞர்களுக் கெல்லாம்
 மறைமுகமாக
 பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் காந்தியின்
 ஆதரவாளர்கள்
 எண்ணிக்கை நாளுக்குநாள்
 குறைந்து கொண்டே போனது.
தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின்
 போராட்டத்தில்
 நம்பிக்கை கொண்டு ராணுவத்தில்
 இணைய ஆரம்பித்தார்கள்.
அப்போது சுபாஷ் சந்திரபோஸ்
 தலைமையில் ஆயுத
 புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள்
 என்று வெள்ளையர்களுக்கு தெரியவர,
இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
 வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.


சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும்
 தமிழ் இளைஞர்கள்
 இணைந்து கொண்டதை அறிந்த
 காந்தியின் ஆதரவாளர்கள். சுபாஷ்
 சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
 ஆரம்பித்தார்கள். அதனால் அவரால்
 இந்தியாவில்
 இருந்துகொண்டு செயல்பட
 முடியாமல் போனது.
வெள்ளையர்களிடம்
 இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
 வெளிநாடுக்கு சென்றார்.
சில
 வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின்
 ஆதரவை திரட்டினார்.

ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான
 ஆயுத தளவாடங்களை ஹிட்லர்
 மூலம் சேகரித்தார். எல்லாம் தாயாரான
 பின்பு இந்தியாவில் இருக்கும்
 வெள்ளையர்களின் ராணுவ
 முகாம்களின்
 எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர்
 இருக்கிறார்கள்
 என்று உளவு பார்த்து தகவல்
 அறிந்து கொண்ட பின்னர்.

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின்
 ஆதரவாளர்களுக்கு தகவல்
 அனுப்பினார். நான் வெளிநாட்டில்
 மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன்.
இந்த ராணுவத்தில்
 இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக
 ஆயுதம் எடுத்து போராட
 விரும்புபவர்கள். என்னுடன்
 இணைந்து கொள்ளலாம் என்று தகவல்
 அனுப்பி இருந்தார்.


இந்தியா முழுவதும் இந்த தகவல்
 பரவியது. இதை அறிந்த தமிழக தேச
 பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான
 இளைஞர்கள் படகு மூலம்
 வெளிநாட்டுக்கு செல்ல
 ஆரம்பிதார்கள்.
அங்கே எல்லோருக்கும் போர்ப்
 பயற்சி அளிக்கப்பட்டது.
அப்போது போராளிகளிடம்
 சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் .
எமது தேசத்தில் வெறும்
 இருபது ஆயிரம் வெள்ளையனின்
 ராணுவம் இருக்கிறது. நாம்
 இங்கு மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.


அவர்களை நாம் கப்பல் மூலம்
 சென்று டெல்லி வரை தாக்க
 போகிறோம் டெல்லியில் தான்
 வெள்ளையனின் முழு பலமும்
 இருக்கிறது எனவே டெல்லி வரை நாம்
 சென்று தாக்க போகிறோம்
 என்று சொன்னார். ஆனால் இந்த
 ராணுவத்தில் பெரும்பாலானோர்
 தமிழர்கள் என்பது குறிப்பிட
 தக்கது .


ஒரு பக்கம் காந்தியின்
 அகிம்சை போராட்டம்
 நடந்து கொண்டிருந்தது.
சுபாஷ்சந்திரபோஸ்
 திட்டமிட்டபடி யுத்த ஆயுத
 கப்பல்கள் மூலம்
 சென்று டெல்லி வரை வெள்ளையர்களின்
 ராணுவத்தை அடித்தார்கள்.
அப்போது வெள்ளையர்கள் பாரிய
 உயிரிழப்புக்களை சந்தித்தார்கள்.
வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில்
 இருந்து வரும் ஆயுத
 உதவிகளை தடுத்தார்கள்
 முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ்
 சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள்
 வந்தது. அதனால்
 தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம்
 செய்யஇயலாமல் ஆயுத
 பற்றாகுறை வந்தது.

பொருளாதார
 பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது.
தொடர்ந்து அவர்கள் இந்தியாவில்
 இருப்பது பற்றி கேள்விகுறியானது.
சுபாஷ்சந்திரபோஸ்
 ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும்
 சண்டையில் வெள்ளையர்கள்
 தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள்.
இந்த தோல்வியை அவர்களால்
 ஒப்பு கொள்ள முடியவில்லை.
அதனால் வெள்ளையர்கள்
 இந்தியாவை விட்டு வெளியேற
 முடிவு செய்தார்கள்.

ஆனால்
 இந்தியா முழுவதும்
 சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின்
 ராணுவ போராட்டம் தெரியவந்தது .
அதனால் காந்தி வழியில்
 போராடி கொண்டிருந்தவர்களுள்
 பெரும்பாலானோர் சந்திரபோஸ்
 அவர்களின் பின்னால் செல்ல
 ஆரம்பித்தார்கள். இதனால்
 வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க
 முடியாத நிலைமை ஏற்ப்பட்டது.
ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள்
 கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ்
 சந்திர போஸ் மக்களை தவறான
 வழியில் கொண்டு செல்கிறார்
 என்றும் கூறி வந்தார்.


காந்தியின் ஆதரவாளர்களால்
 சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க
 பட்டார்.
அவரை கைது செய்து சிறையில்
 அடைத்தார்கள் வெள்ளையர்கள்.
ஆனால் சிறையில்
 வேலை செய்தவர்களின் உதவியுடன்
 சுபாஷ் சந்திர போஸ்
 தப்பித்து வந்தார். அதன்
 பிறகு ஆயுத போராட்டம் கடும்
 தீவிரம்
 அடைந்து வந்தது வெள்ளையர்கள்
 வெளியேறும் நிலைமையும் வந்தது.
ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக
 தோற்கடித்து இந்தியாவில்
 விரட்டியடிக்க பட்டோம்
 என்று வந்து விடக்
 கூடாது என்பதற்காக.

அப்படி ஒரு அவமானம் வந்து விட
 கூடாது என்பதற்காக
 காந்தியை நாடினார்கள்
 வெள்ளையர்கள்.
வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக
 போராடும்
 காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள்
 அகிம்சை போராட்டத்தால்
 உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க
 போகிறோம் நாங்கள்
 இந்தியாவை விட்டு போக
 போகிறோம் என்று சொன்னார்கள்.
காந்தியின்
 அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
 இந்தியாவிற்கு சுதந்திரம்
 கொடுத்து விட்டு வெளியேறினான்.
ஆனால் தற்போது இந்திய
 அரசாங்கமும் இந்திய மக்களும்
 சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள்.

அவரின்
 மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட
 மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம்
 காந்தியின் அகிம்சை போராட்டம்
 பாதித்து விடும் இந்த
 வரலாறு மறைந்து விடும்
 என்பதற்காக.