Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, January 27, 2014

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட்..! - சோனி அறிமுகம்!




சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும்.

மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

எக்ஸ் பெரிய இசட் அல்ட்ரா டேப்லெட்டின் மற்ற குறிப்புகள் 16GB ஆண்போர்டு சேமிப்பு, 2GB ரேம், 64GB வரை microSD அட்டை ஆதரவு, NFC, microUSB 2.0, ப்ளூடூத் 4.0 மற்றும் 3,050 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை அடங்கும். சோனியின் புதிய டேப்லெட்ல் 8MP கேமரா தக்க வைத்து கொண்டுள்ளது, இந்த மாடலில் இருந்து எல்இடி ப்ளாஷ் நீக்கப்பட்டது.

பெருமளவில் உற்பத்தி செய்யும் 7 இன்ச் திரை அளவு கீழ் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டேப்லெட்டில் 7 மற்றும் 8 இன்ச் திரை அளவுகள் தேர்ந்தெடுக்கின்றனர். நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்க்கான உலகின் முதல் யுஎஸ்பி டிரைவ்களை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால்..! லாபமா..? நஷ்ட‍மா..?





அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப் போது பணம் கிடைக்கும் என்று தான் காத்திருப்போம். அதே கட னை திரும்பக்கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திரு ப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந் த இ.எம்.ஐ. யை கட்டி முடிப்பத ற்குள் உயிர் போகிறது என்று புல ம்புகிற வர்கள்தான் அதிகம்.

இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பண ம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்து விடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் என

சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப் பில் இருந்தவர்களும் கல ங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூ ட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந் தியன் ஓவர்சீஸ் வங்கியி ன் முன்னாள் பொதுமேலா ளர் (ஓய்வு) டாக்டர் எஸ். இளங்கோவனிடம் கேட்டோம்.

”வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச்செ லுத்தும்விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆ ண்டுக்குள் கடனை திரு ம்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற் படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பல ரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.

ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெ ருந்தொகை கிடைத் திருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வெளியி லிருந்து வர வேண்டிய பணம் வந் திருக்கும். இது போன்ற   சமயங்களி ல் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்க ள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறை வான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டிவிகிதம் அ திகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நி னைப்பார்கள்.

இப்படி செய்வதால் சிபில் பட்டியலி ல் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படா து. மாறாக, நீங்கள் கடனை விரை வாகச் செலுத் துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிரு ந்தாலே போதும்.

ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒருவங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினா ல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங் கள் மீதான மதி ப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய் ப்பு உள்ளது.

சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட் டும் திறனை கணக்கிடும் அள வுகோல்தான். பெரும்பாலா ன வங்கிகள் வாடிக்கையாள ர்களுக்கு கடன்தரும்முன்   இந்த அளவுகோலை அவசிய ம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கட ன் தரப்படுவதில்லை என்றா லும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது

ஒரே குடும்பத்தில்..!

ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெ யர் சிபில் பட்டியலில் இருந்தா ல் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடை ப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறா ர்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணு குவதாகவும் சிலர் சொல்கிறார் கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.

அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல் லும் சூழ்நிலையில் மனை வி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன் களை வாங்கி, அதை சரி யாகக் கட்டாமல் செட்டில் மென்ட் செய்துள்ளார் என் று வைத்துக் கொள் வோம். பின்னாளில் மகனுக்கு கல் விக் கடன் கேட்டு விண்ண ப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜ ர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.

அதேபோல, அதிக தொகை கட னாக கிடைக்கும்என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் கு றைவாக இருந்தா ல் அந்த கடன் நிகாரிக்கப்படும்.

ஒருவருக்கு கடன் வழங்கும்போ து கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறு வனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவரு டைய எதிர்கால வளர்ச்சி என்பதை எ ல்லாம் அடிப்படையாக வைத்து தான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்மு றையாக கடன் வாங்குபவருக் கும்இதைப்பின்பற்ற வேண்டும்.


 
அடமானக் கடன்..!

வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமா னமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமா ளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அட மானமாக வைத்து கடன் வாங்கும்போது மா தத் தவணை கட்டும்படி இருக்கும்.

தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறை யும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணை யில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல் லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலா ம். ஆனால், வட்டியை சரியா க கட்டுவது அவசியம். வட்டி க்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலா ம். 

எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய் யுங்கள்” என்று முடித்தார் இளங்கோவன்.

லோன் செட்டில்மென்ட்..!


கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட் டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.

”திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தி னால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரி வர கட்ட முடியவில்லை என் ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத் தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கட னாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வ ராது என்ற சூழ்நிலையி ல்தான் வங்கி செட்டில் மென்டிற்கு போகும்.

செட்டில்மென்ட் முடிவு க்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக் கிவிடும். கொடுத்த கட ன்தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும் போ துதான் செட்டில்மென் டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங் கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்ட வேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும்.

 இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவ ரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்து விடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்கு கூட  சென்ட்டில் மென்ட் செய்ய வங்கி ஒப்புக் கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கி யவரும் பெ ருமையாக வாங்கிய கடனை விட குறைவா ன தொகையே கட்டினேன் என்று பெருமை ப்பட்டுக்கொள்ளலாம்.

செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில் மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்ப டும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்தி சாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வா ங்கிய கடன் தொகையை விட குறைவான தொகையே திரு ம்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும்.

 இந்த தகவல் அப்ப டியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகி விடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவி டும். பிற்பாடு வீட்டுக்கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ண ப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வா ய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி வி கிதம் சற்று அதிகமாக இருக் கும். அதோடுகடனுக்குஒருவ ர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன் ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபா சிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, மீதமுள்ள கடனுக்கான வட் டி அதிகம் என்றாலும் பரவாயில்லை . வங்கி கேட்கும் தொகை முழுவதை யும் செலுத்த முயற்சி செய்யுங்கள். சில ஆயிரங்களை மிச்சப் படுத்துவ தாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்க ள்” என்றார். ஆக கடன் வாங்குபவர் கள் கவனமாக இருப்பது அவசியம்!

உண்மையான பார்வை..!



உண்மையான பார்வை..!
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஹீரோயின் இல்லாத படம்..!



ஹீரோயின் இல்லாமல் தயாராகிறது மொழிவது யாதெனில்...

 இதுபற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இப்படத்துக்கு இலக்கிய தமிழில் பெயர் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமும், இப்படத்துக்கு அப்படியொரு தலைப்பு தேவைப்பட்டதாலும் வைத்தோம்.

சொல்வது என்னவென்றால் என்ற பொருளில் இதன் தலைப்பு அமைந்துள்ளது. நட்பை பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது நட்பை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் படம். உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது. பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் மகன் விராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் சென்னை 28 படத்தில் சிவா கோஷ்டியிடம் பந்தயம்கட்டி கிரிக்கெட் பேட்டை ஜெயித்து எடுத்துச்செல்லும் சிறுவனாக நடித்தவர். இக்கதைக்கு ஹீரோயின் அவசியப்படவில்லை என்பதால் தேர்வு செய்யவில்லை. ராஜன், ரியாஷ், தேஜ், மீனுகார்த்திகா, லஷ்யா, பாலு ஆனந்த் உள்பட பலர் நடிக்கின்றனர், நித்யன் கார்த்திக் இசை அமைக்கிறார்.

ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஆர்.மாணிக்கவாசகம், பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி தயாரிக்கின்றனர். ஈரோடு, சென்னை, புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துள்ளது.

பெருமாளே கிரிவலம் வரும் தலம்..!



தன்னை நம்பி வருவோர்க்கு நற்கதி நல்குவான் நாராயணன். அவன் கோயில் கொண்டருளும் தலங்களுள் ஒன்று, துத்திப்பட்டு. ஒருசமயம் ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் கானகத்தில் தவம் புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அந்த அரக்கனை 'புலியாகக் கடவது' என்று சாபமிட்டார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன், முனிவர்களை முன்பைவிட இன்னும் அதிகமாக துன்புறுத்தி வந்தான். வேறு வழியின்றி முனிவர்கள் இந்திரனை சரணடைந்தனர்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திரன் தானும் புலியாக உருமாறி பிரதூர்த்தனுடன்  போரிட்டான். இறுதியில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அரக்கனை அழிக்க முற்பட்டபோது, சாகும் தருவாயில் அரக்கன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அவனை மன்னிக்க விரும்பிய இந்திரனும், தேவர்களும் அந்த அரக்கன் நற்கதி பெற வேண்டுமென்று திரு மாலை வழிபட்டனர். திருமாலும் சங்கு, சக்ரதாரியாக தேவியருடன் காட்சி கொடுத்து, அரக்கனுக்கு நற்கதி அளித்தனர்!

அரக்கனுக்கு அருள்புரிந்த அதே கோலத்தில் அங்கேயே எழுந்தருளுமாறு ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் திருமாலிடம் வேண்டிக் கொள்ள முனிவர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று திருமால் இங்கேயே கோயில் கொண்டார். பிரதூர்த்தன் நற்கதியடைந்த தலமாதலால் 'பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'துத்திப்பட்டு' ஆகிவிட்டது. இக்கோயிலை 'வரதராஜ பெருமாள் கோயில்' என்றே தற்சமயம் அழைக்கிறார்கள்! நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக அமைந்துள்ளது. கோயில் ஒரே பிராகாரம் கொண்டது. அதில் மூன்று சந்நதிகள் உள்ளன.

மகா மண்டபமும், ஒருமுக மண்டபமும் உள்ளன. கொடிமரத்தைக் கடந்து கருடாழ்வாரை தரிசித்து, மகாமண்டபத்தை கடந்து, மூல ஸ்தானத்தை அடைந்ததும், பிந்து மாதவராய் பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஒருபுறம் பெருந்தேவியும் மறுபுறம் குமுதவல்லி நாச்சியாரும் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றனர். பெருமாள் சதுர்புஜங்களில் மேலே சங்கு, சக்கரம் தரித்தும், கீழ்கரங்களில் கதை, அபய முத்திரையுடனும் காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

மூலவர் சந்நதிக்கு மேலே 'தேஜோ விமானம்' அணி செய்கின்றது. பெருந்தேவி  தாயாரும், ஆண்டாளும் தனித்தனி சந்நதிகளில் கோயில் கொண்டுள்ளனர். திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் தனியே தரிசனம் தருகிறார். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் உடையவர் திருவுருவங்களும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மண்டபச் சுவரில் இத்தல த்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தனின் திருவுருவம் உள்ளது. இந்த புண்ணிய பதியில் விஷ்ணு புராணத்தை பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு எடுத்துரைத்ததாக கூறப்படுகின்றது.

தை மாதம் காணும் பொங்கலன்று அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உத்ஸவ மூர்த்தி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த மலையில் 'ரோமச ரிஷி' இன்றும் தவம் இருப்பதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதீகம். உற்சவ காலங்களில் இவ்வூரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கும் பெருமாள் செல்வது இப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது! வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் துத்திப்பட்டு அமைந்துள்ளது.

மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்..!



அதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோ..!

அந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.

வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.

வெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள்? கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது?

பெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான  வெற்றிப் பெற்ற  மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை
இப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.

அதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இது. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.

இந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.

போலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.

பல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.

மண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்
ரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.

ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.

எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

எப்படி  சாப்பிட வேண்டும் தெரியுமா..?

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

பெப்சி, கோககோலா - அப்படி என்ன நச்சு பொருள்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!




பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே..!



நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.

ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.

இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன.

 இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

 உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

Sunday, January 26, 2014

பேஸ்புக் அடுத்த 3 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி அடையும்..?



உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 80 கோடிகள் கொண்ட ஒரே இணைய தளம் பேஸ்புக் தான்!

 இன்று கூகுளேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!…மேலும் மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்துள்ள பேஸ்புக் வலைத்தளமானது மக்களிடையே ஒரு தொற்று போல வேகமாக பரவி வருகிறது.

ஆன்னல் சமீபகால்மாக பேஸ்புக் மீதான ஆர்வத்தை மக்கள் மெதுவாக கை விட ஆரம்பித்திருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் அது தன் பயனர்களை பெரும் அளவில் இழக்கும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய சமுக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியுடன் பேஸ்புக் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொள்ளை நோயைப் போல் பேஸ்புக் சமூக வலைத்தளமும் முடிவுக்கு வரும் என்று வாதிடுகின்றனர்.

பிப்ரவரி 4-ஆம் தேதி தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது, மற்ற சமூக வலைதளங்களை விட அதிக நாட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வளர்ச்சியானது குறையத் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தனது 80 சதவீத பயனர்களை பேஸ்புக் இழக்கும் நிலை வரும் என்று பிரின்ஸ்டன் ஆராய்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஒரே தினத்தில் பிறந்தநாளைக் கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள்…. நம்பமுடியாத ஆச்சரியம்..!



பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணப்பட்டால் அவர்களில் பிறந்தநானை நினைவில் வைப்பது என்பது சற்று கடினமே.

ஆனால் பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த பீற்றர் டன் (24) எமிலி சக்றுஹாம்(22) என்ற தம்பதிகளுக்கு அக்கவலையே இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு பிறந்த 4 குழந்தைகளுமே ஒரு திகதியில் தனது பிறந்த நாளைக் கொண்டுகின்றனர்.

இத்தம்பதிகளின் மூத்த மகனான சாம்(5), மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக்(2) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி மாதம் 12ஆம் திகதியே தமது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இவர்களின் நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிறந்துள்ளான். இவ்வாறு ஒரு தாய்க்கு பிறந்த 4 பிள்ளைகளும் ஒரே நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது 133225 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

இந்தத் தம்பதிகளுள் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒரே தினத்தில் பிறக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?



மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?: அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

ஸ்கைப்பில் பேச இனிமேல் தனி அக்கவுண்ட் தேவையில்லை.....




இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.

இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.

பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது.

இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது. இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

 இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.

மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.

அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்..!




புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம்.

அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் கொள்வது நல்லது. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்ற நிலையில், நிச்சயமாய் கம்ப்யூட்டரில் இடம் பெற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.

1. பிரவுசர்:

சாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்திட, இணையத்தை நாட வேண்டி வரலாம். அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு பிரவுசர். விண்டோஸ் தொகுப்புடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் உங்களுக்கு உதவலாம். இல்லை, நான் ஏற்கனவே பழகிய ஷூ தான் என் காலுக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை அமைத்து இயக்குங்கள்.

2. ஆண்ட்டி வைரஸ்:


 இணையத்துடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை இணைத்து பைல் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குத் தேவை மால்வேர்களையும் வைரஸ்களையும் கண்டறிந்து எச்சரித்து பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்னும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், மாறா நிலையில் தானாகவே பதிந்து கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும்.

ஆனால், இது வைரஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. எனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Avast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கக் கூடாது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைப் பதிந்து வைத்து, ஒன்றை நிறுத்தி இன்னொன்றை இயக்கி நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இவற்றைப் பெற avast.en.softonic.com/download?// free.avg.com/inen/download என்ற முகவரிகளில் உள்ள இணைய தளங்களை நாடவும்.

3. தேவையற்ற சாப்ட்வேர் நீக்கி (PC Decrapifier):

 நம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர். இவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது? இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம்.

4. வழி திறக்கும் Unlocker:

 புரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு ""உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம். அந்நிலையில் என்ன செய்வது? இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் Unlocker.. இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம். இதனைப் பெற pcdecrapifier.com/download என்ற இணைய தளம் செல்லவும்.

5. மீட்டெடுக்கும் ரெகுவா (Recuva):

சில வேளைகளில் நமக்குத் தேவைப்படும் பைல்கள் அல்லது புரோகிராம்களை, அவசரப்பட்டு நீக்கிவிடுவோம். அதன் பின்னர், கைகளைப் பிசைந்து கொண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைப்போம். இந்தச் சூழ்நிலையில் நமக்கு உதவும் புரோகிராம் ரெகுவா. அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம். இதனை இயக்கினால், அழித்த புரோகிராம்களில் எவற்றை மீட்டெடுக்கலாம் எனப் பட்டியல் தந்து நம் விருப்பப்படி அவற்றை மீட்டுத் தரும். ஆனால், "file shredder” போன்ற டூல்களால், பைல்கள் அழிக்கப்பட்டிருந்தால், ரெகுவா மீட்டெடுக்காது. Piriform நிறுவனம் இதனை இலவசமாக வழங்குகிறது. இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் recuva.en.softonic.com

6. சிகிளீனர் (CCleaner):


 Piriform நிறுவனம் வழங்கும் இன்னொரு இணையற்ற உதவிடும் புரோகிராம் சிகிளீனர். நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் சேரும் குப்பைகளை நீக்கி, மிக அழகாக வைத்திடும் புரோகிராம். தற்காலிக பைல்கள், தேவையற்ற குக்கீகள், ஹிஸ்டரி பைல்கள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் குறியீடு வரிகள் என அனைத்தையும் நீக்கும். புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதிலும் இது உதவும். எந்தவிதமான மிச்சம் மீதி துணை பைல்கள் எதுவும் தங்கவிடாமல், புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடும். இதுவும் இலவசமே. கூடுதல் வசதிகளுடன் கூடிய சிகிளீனர், புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த புரோகிராமினை http://www.piriform.com/ என்ற இணைய தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

7. சாப்ட்வேர் இன்ஸ்பெக்டர் (Secunia PSI Personal Software Inspector):

எந்த காவல் துறை புரோகிராம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டும். இல்லையேல், இடையே கிடைக்கும் இடைவெளியில், மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் புகுந்து, உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொண்டு சென்றுவிடும். உங்களின் புரோகிராம்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றனவா என்ற கண்காணிப்பை மேற்கொள்ளும் பணியினை செகுனியா பி.எஸ்.ஐ. புரோகிராம் மேற்கொள்கிறது. இது கம்ப்யூட்டர் இயங்கும்போது, அமைதியாக பின்னணியில் இயங்கும். உங்கள் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பேட்ச் பைல்களைப் பெற்று, அவற்றை அப்டேட் செய்திடும். இயலவில்லை என்றால், இது போல பேட்ச் பைல் உள்ளது, நீங்களாக அப்டேட் செய்திடுங்கள் என்று எச்சரிக்கை செய்தி தரும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை என்றைக்கும் அப்டேட்டாக வைத்திருக்க இந்த இன்ஸ்பெக்டர் உதவும். secunia.com/products/consumer/ psi/? என்ற தளம் சென்றால், இதனைப் பெறலாம்.

காமராசர் - வாழ்க்கை வரலாறு



காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடக்ககால வாழ்க்கை

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார்.

 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.

அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு

அமைச்சரவை

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்


ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

  •     பாரத மிகு மின் நிறுவனம்
  •     நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  •     மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய              பெயர் CPCL)
  •     இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
  •     நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  •     கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  •     மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.

 இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.

தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்


2004-ஆம் ஆண்டு காமராசு என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராசர் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்

    “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி

    "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு

    “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.

    “காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி

    "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்

    "காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்

    "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி

    "காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

இந்திய தபால் துறை நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களை அமைக்கிறது..!



இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளதையடுத்து பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுமார் 1,54,700 அலுவலகங்களை கொண்டுள்ள இந்திய தபால் துறை உலகிலேயே மிகப் பெரியது. 2012, மார்ச் மாத நிலவரப்படி, 24,969 நிர்வாக அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவை ரூ.1,877 கோடி செலவில் வங்கி கிளைகளாக மேம்படுத்தப்பட இருக்கிறது.இந்த இந்திய தபால் துறையில் தபால் சேவை மட்டும் இன்றி சிறு சேமிப்பு, தங்கம் விற்பனை, இட்டுவைப்பு பத்திரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.

இதற்கிடையில் தலைமை தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைக்கு அலுவலகத்திலிருந்து பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம். சேவை வசதியை ஏற்படுத்த மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளதால் தலைமை தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம். சேவை திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களிலும் ஏ.டி.எம். சேவை வசதி தொடங்குப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை” – கமல்ஹாசன்



பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.” என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,””நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த விருதை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்கு தகுதியுள்ளவனாக நான் என்னையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.”


பாரத ரத்னா விருது எப்போது வாங்கப் போகிறீர்கள்..?

“நான் எப்போதுமே மெதுவாகத்தான் போவேன். பள்ளிப் படிப்பில்கூட அப்படித்தான். இந்த நாட்டில் மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் விருதுகள். நீங்கள் சொல்வது போன்று அதுதான் அடுத்த கட்டம் என்று நினைத்தால், அதுவும் சாத்தியம்தான்.”

கிரிக்கெட்டில் 25 ஆண்டுகள் சாதனைபடைத்த சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளார்கள். ஆனால், நீங்கள் 50 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கிறீர்களே. உங்களுக்கு கிடைக்காதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“கண்டிப்பாக எதுவும் நினைக்கவில்லை. சுதந்திரப் போராட்டம் மாதிரிதான். கிடைத்தாலும் சரி, மறந்தாலும் சரி எனக்கு ஒ.கே தான். இருப்பதற்கும், பணி செய்வதற்கு தகுதியுடையவனாக இருப்பதே பெரிய பட்டம்.”

பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து கூறினாரா..?


“இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.”

இவ்விருதை யாருக்கு சமர்பிக்க விரும்புகிறீர்கள்..?

“எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கு, குடும்பத்திற்கு இந்த விருதை நான் சமர்ப்பிகிறேன். சம்பளம் வாங்கிக்கொண்டும், சம்பளம் கொடுத்தும் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவருக்குமே இந்த விருதை சமர்ப்பிகிறேன். சண்முகம் அண்ணாச்சியும், பாலசந்தர் அவர்களும் இதில் முதன்மையானவர்கள். அது மறக்க முடியாத நன்றிக்கடன். தீர்க்க முடியாத கடன். எனக்கு இகழ்வுகள் ஏற்படும் போது மட்டுமே, அது என்னுடையதாகிறது. எனக்கு புகழ் வரும் போது எல்லாம் எனக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள்.”

ஆஸ்கர் விருது எப்போது..?


“இந்த ஊர்ல வியாபாரம் பண்றவங்களுக்கு ஐ.எஸ்.ஐ தான் முக்கியம், யு.எஸ்.ஐ எதற்கு? அந்த ஊர்ல வேலை செய்யும்போது யு.எஸ்.ஐ பார்த்துக் கொள்ளலாம். அந்த ஊருக்கு வியாபாரத்திற்கு போகும்போது கண்டிப்பாக அது பெரிய பெயராக இருக்கும். அவங்களுக்கும், எனக்கும் தேவைப்பட்டால் போவேன்.”

எப்போதுதான் மனநிறைவு பெறுவீர்கள்..?

“நிறைவு என்பதே எனக்கு கிடையாது. எனக்கு பசி மாதிரிதான். இன்றைக்கு நிறையுற மாதிரியிருக்கும், நாளைக்கு பசிக்கும். என்னோட தேடல் எல்லாம் பசி. சினிமா நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் ‘போதும்’ என்றால் எப்படி?”

இந்தத் தருணத்தில் உங்களது ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..?


“இந்த விருது, இனிமேல் நான் செய்யப் போகும் வேலைக்கான பாராட்டு. வேலை செய்ததிற்கான பாராட்டு என்று நீங்களும் நினைக்க கூடாது, நானும் நினைக்கவில்லை. என்னை ஊன்றுக்கோளாக வைத்து அவர்கள் உயர்வதற்கும் நான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் பொதுப்பணி செய்வதற்கும் நான் ஒரு ஊக்கியாக இருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் ஊக்கம் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் ஊக்கமாகத்தான் பார்க்கிறேன்.”

கடந்தாண்டு இதே நேரத்தில் விஸ்வரூபம் பிரச்சினை. இந்தாண்டு பத்ம பூஷண் விருது. அதற்கான மருந்தாக நினைக்கிறீர்களா?

“அப்படி நான் எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல் வாங்கலாகிடும். அது அல்ல என்று நான் நினைக்கிறேன்.”

விஸ்வரூபம் தடை செய்யப்பட்டபோது இதே இடத்தில் தான் பேசினீர்கள். விருதுக் கிடைத்தவுடனும் இதே இடத்தில் தான் பேசுகிறீர்கள். உங்களது மனநிலை இப்போது எப்படியிருக்கிறது?

“ஒரே மனநிலைதான். இதே இடத்துலதான் நான் சின்ன பிள்ளையா நடிகனா வருவேனா மாட்டேனா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதே இடத்துலதான் பாலசந்தர் சார் கூப்பிடுறாருன்னு சொன்னப்போது இங்க உட்காந்துதான் யோசிச்சிட்டு இருந்தேன். பல விஷயங்கள் இந்த இடத்துல நடந்துருக்கு. ஒரு பக்குவான மனநிலைக்கு என்னை கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு எல்லாமே படிக்கட்டுதான்.”

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது..?

“ஒரு படத்தைப் பற்றி தனியாக கூற முடியாது. சிவாஜி சாரை எடுத்துக் கொண்டால் ஒரு படத்தைப் பற்றி கூற முடியாது. கப்பலோட்டிய தமிழன், பராசக்தி, பாசமலர் இப்படி எல்லாமே சேர்ந்துதான் சிவாஜி சார் படங்கள் பற்றி பேசும்போது வரும். நான் ஒரு படம் முடிச்சுட்டு அடுத்த படம் போகும் போது எனக்கு அதுதான் முக்கியமான படமாக தோன்றும். வாழ்க்கையின் முக்கியமான படமாகவும் மாறிவிடும்.”

மருதநாயகம் பணிகள் எப்போது தொடங்க இருக்கிறீர்கள்..?


மருதநாயகம் செய்யணும். காசு கொடுங்க பண்ணிடுறேன்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா..?

“எல்லாருமே அரசியல்வாதிகள்தான். 5 வருஷத்திற்கு ஒரு தடவை கைல கறையை போட்டுக் கொள்கிறோம். விரல்ல வைக்குற அந்தக் கறை போதும் கைப்பூறம் எதற்கு.”

இன்று 65-வது குடியரசு தினம். இதையொட்டி நீங்கள் சொல்லும் செய்தி..?

“இதுவரைக்கும் அடையவில்லை என்பதற்கான எல்லாச் சான்றும் இருக்கிறது. அடைந்து விட்டோம் என்பதற்கான அடையாளங்களும் இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் சாய்ச்சுக்கிட்டு வந்துட்டோம்னு சொல்றாங்களே அது இன்னும் இந்தியாவில் அடையவில்லை. இன்னும் பிளவுகள், சாதி ஒழிந்த பாடில்லை. அப்படியிருக்கும் போது நாம் எப்படி பெருமைப்பட்டு கொண்டிருக்க முடியும்..?

பாரதியார் பாடின பாப்பாக்களுக்கு எல்லாம் கொள்ளுப் பேத்திகள் பிறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் அந்த சாதியை விட்டபாடில்லை. சாதிக்காக இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது. 65 ஆண்டுகள் எல்லாம் வேண்டாம். 6.5 என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.”

உங்களோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவும் விருது வாங்க இருக்கிறாரே. பேசினீர்களா..?

“நேற்றே அவருக்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு கிடைக்கும் எல்லா புகழும் எனக்கு கிடைத்த மாதிரி. ஞான பீடம் விருது மாதிரி என்ன விருது வாங்கினாலும், எனக்கு கிடைத்த சந்தோஷம் வருகிறது. அவ்வளவு நெருங்கிய நட்பு எங்களுடையது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதும், என்னை பல விஷயங்களுக்காக அவர் தனிமையில் வந்து பாராட்டுவதும் இப்படி பல நிகழ்வுகள் எங்களுக்குள் நடந்திருக்கின்றன. பெரிய சந்தோஷம் என்னென்னா, அவருடன் சேர்ந்து விருது வாங்க போறேன் என்பது தான்.”

விஸ்வரூபம் 2 படப் பணிகள் எந்தளவில் இருக்கிறது..?

“வேலைகள் முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் இசை, கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது.”

சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா..?


“நான் சுயசரிதை என்ற விஷயத்திற்கு எதிரானவன். பேட்டிகள் என்றால் ஆர்வத்தோடு இருப்பேன். நிறைய சுயசரிதைகள் பொய்யானவை தான். சுயசரிதையை எழுத மாட்டேன். நிஜம் பேசணும். நிஜம் பேசணும் அப்படிங்கிற வீராப்புல பல பேரை புண்படுத்திற கூடாது. என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிட முடியுமானு எனக்கு தெரியல. பேட்டி வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என் மீதிருக்கும் எல்லா சந்தேகங்களும் அப்படியே இருக்கட்டும், அமையட்டும்.”

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்..!


பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Member of faculty – 03

02. Office Assistant – 03

03. Attendant – 02

04. Counsellor (F.L.C.)- 01


வயது வரம்பு:

01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்..

02 . மற்ற அனைத்து பணிகளுக்கும் 30க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி:

01.Member of Faculty பணிக்கு MSW/M.A. in Rural Development/ M.A.in Sociology/ Psychology/ B.Sc. (Ag.)/ B.A. with B.Ed. கற்பிக்கும் திறனுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

02. Office Attendant பணிக்கு BSW/ BA/ B.Com) ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

03. Attendant பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

04. Counsellor பணிக்கு வங்கி துறையின் கிராமப்புற கிளைகளில் கடன் துறை வங்கி அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முக செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Bokaro Zonal Office, E-17,

First floor, City Centre,

Sector – 4, B.S. City, Bokaro,

Pin – 827004 (Jharkhand)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-01-2014

நேர்காணல் நடைபெறும் தேதி: 08-02-2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

'' ஐ '' படத்தில் வில்லன் யார் தெரியுமா..?



சினிமாவை அதிகம் எட்டி பார்க்காத பிரபல நடிகரின் மகன் ஐ படத்தில் வில்லன்:-

விக்ரமை வைத்து ‘ஐ’ என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.  மிகுந்த பிரம்மாண்ட பொருட் செலவில் எடுத்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, உப்பன் படேல் மற்றும் சினிமவை வெகு காலம் எட்டி பார்க்காத நடிகர் திலகத்தின் முத்த மகனான ராம்குமார் இன்னொரு முக்கிய வில்லனாக வலம் வருகிறார்.

இவர்களில் மூவரில் ராம்குமார்க்கு நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாதவர். பலவருடங்களுக்கு முன்பு அறுவடை நாள் என்ற படத்தில் தான் இவருடைய முதல் அறிமுகம், அதற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பாவுக்கு துணையாகவும் மற்றும் சிவாஜி புரோடக்க்ஷன்க்கு முக்கிய பொறுப்பாளர் பணியாற்றி வந்தார்.

ஷங்கர் அவர்கள் இது வரை காணாத ஒரு முகம் இந்த வில்லன் கதாபத்திரத்துக்கு வேண்டும் என யோசித்து வர சமிபத்தில் ராம்குமார் அவர்களை  ஒரு நிகழ்ச்சியில் பார்த்து இவர் கரெக்ட்டாக இருப்பர் என முடிவு செய்து இப்பொழுது நடித்தும் கொண்டு இருக்கிறார்.

சிவாஜி கணேசன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக புதுமுக நடிகர் போல் நடத்தாமல் இவருக்கு ஏக உபசரிப்பாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிபெறவில்லையா..?



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு குடியரசு தினத்தில் வெளியான திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ”ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிசா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் இப்படம் பெரும்வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இணைந்தது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.

தமிழில் இப்படம் வெற்றியடைந்திருந்த போதிலும், இதன் ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியைச்
சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரதிக் பாபர் மற்றும் எமி ஜேக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் கிடைத்த வருமானத்தைத் தன்னுடன் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கிட்டுக் கொள்ளாததால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ஆர்.ஜெயராமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கௌதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கோரும் இவ்வழக்கினை வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.