Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, January 27, 2014

எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

எப்படி  சாப்பிட வேண்டும் தெரியுமா..?

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

Sunday, January 26, 2014

மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?



மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?: அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!



இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

Saturday, January 25, 2014

செல்போன் வெடித்து சிறுவன் படுகாயம்..!



சார்ஜ் போட்டுக்கிட்டே கேம்ஸ் விளையாடியபோது செல்போன் வெடிப்பு:- சிறுவன் படுகாயம

மத்திய பிரதேசத்தில் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே கேம்ஸ் விளையாடியபோது அது வெடித்ததில் 10 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள உதய் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிஹந்த்(10). அவர் நேற்று இரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு அதில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் திடீர் என்று வெடித்ததில் அவரது முகம் மற்றும் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில்,

அரிஹந்த் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். ஆனால் அவரது கையில் உள்ள விரல் ஒன்றில் ரத்த ஓட்டம் நின்றுவிட்டது. மீண்டும் ரத்த ஓட்டம் ஏற்படாவிட்டால் அவரது விரலை வெட்டி எடுக்க வேண்டி இருக்கும் என்றார்.

Friday, January 24, 2014

பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய அதிர்ச்சி தகவல் ..!



”நாட்டிலேயே பல் மருத்துவமனையில் அதிகமாக புறநோயாளிகள் வருவது தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். தினமும் 800 முதல் 1500 புறநோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 2007-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.85 லட்சமாக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 3.53 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கென்று புதிய கட்டடங்கள் திறந்த பின்பு புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல் வலி, ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் பலமிழந்து ஆடுதல், கடினமான பொருட்களை மென்று சாப்பிட முடியாமை, பல்லடிச் சீழ் போன்றவை பல் வலி, சொத்தைப் பல் வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். வாயில் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் வேறு பல நோய்களின் காரணமாகவும் பல் வலி உருவாகலாம்.

மேலும் ஆரம்பகால சொத்தை பற்களை கவனிக்காமல் விட்டால் அது அந்த பற்களின் நரம்பு வரை சென்று நமக்கு வலி கொடுக்கிறது. அதனால் ஆரம்ப கால சொத்தையை அலட்சியப்படுத்தாமல், உடனே அதை டாக்டரிடம் சென்று அடைத்துக் கொள்ளலாம். அப்படி ஆரம்பத்திலேயே அடைத்து சரி செய்து கொண்டால் அந்த சொத்தை மேற்கொண்டு பரவுவதை தவிர்க்கலாம்.

* சரி இப்போது நரம்பு வரை பரவி வலி கொடுக்கிறது என்ன செய்யலாம்?

ஆரம்பகாலத்தில் வலி என்றாலே பற்களை பிடுங்கி விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லை. சொத்தை நரம்பு வரை பரவினால்தான் வலி ஏற்படும் அப்படி பரவிய சொத்தையும் வேர் சிகிச்சை செய்து அந்த பல்லை காப்பாற்றிக் கொள்ளலாம் தயவு செய்து பற்களை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துவிடாதீர்கள் அப்படியும் எடுக்க நேர்ந்தால் எடுத்த பற்களை 15 நாட்களிளோ அல்லது ஒரு மாதத்திலோ புதிய பல் கட்டி விட வேண்டும். இல்லையென்றால், மேல் பல் எடுத்து கட்டாவிட்டால் கீழ் பல் மேலே ஏறி அது இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து அதுவும் உபாதைகளை ஏற்படுத்தும். அதே போல் கீழ் பல் எடுத்து கட்டாமல் விட்டால் மேல் பல் கீழே இற்ங்கி விடும்.

*சொத்தை இல்லாமலும் வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன?


சிலருக்கு சொத்தை இருக்காது. ஆனால் இந்த பல் மட்டும் வலி கொடுக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் வலி உண்டாக்கும். இப்படி இருக்கும் பற்களை அடைத்தோ அல்லது வேர் சிகிச்சை செய்து சரி செய்யலாம். பிரஷ் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். நீண்ட நேரம் துலக்க வேண்டாம். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் தேய்த்தால் போதும், இதைக் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* ஈர்களில் தொந்தரவு இருந்தாலும் வலி வருமா?

நம் ஈர்களில் கேல்குலஸ் என்னும் சுண்ணாம்புப் போல் துகள்கள் சேர்ந்து விடும். இது மிகவும் கடினமாக இருக்கும் இதை பிரஷ் வைத்து தேய்த்தாலும் சுத்தப்படுத்த முடியாது இது அனைவருக்கும் ஏற்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒறுமுறை பல் டாக்டரிடம் சென்று சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்படி சுத்தப்படுத்தாமல் விட்டால் அவை ஈர்களை அரித்து எலும்புவரைச் சென்று பற்களில் வலி ஏற்படுத்தி, பின்னர் பற்கள் ஆடி தானாகவே விழுந்து விடும் அல்லது எடுக்கும்படி ஆகிவிடும். நீண்ட நாள் புண் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

* 19 வயதிலிருந்து 25 வயதிற்குள் மூன்றாவது கடாபல் முளைக்கும். அது வலி தருமா?
19 வயதில் மூன்றாவது கடாபல் முளைக்கும் போது அந்த பல் வருவதற்கான போதுமான இடம் இல்லாததாலும் மிகவும் கஷ்டப்பட்டு முளைப்பதாலும் அந்த இடமே வீங்கி வலி ஏற்படும். அதை டாக்டரிடம் காண்பித்து அந்த பல் சரியான திசையில் இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சரியாக இருக்கிறது பல் வந்து விடும் என்றால் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும். அப்படி சரியாக முளைக்கவில்லை எக்ஸ்ரேவில் பல் சாய்ந்தோ, படுத்தோ இருந்தால் அதை ஒரு சின்ன அறுவை சிகிச்சை மூலமாகத்தான் அந்த பல்லை எடுக்க வேண்டும்.

* ஈரில் கட்டிகள் ஏற்படுவதால் வலி வருமா?

ஈரில் கட்டிகள் ஏற்பட்டு வீங்கி வலி தரும். இது பல்வேறு காரணங்களால் கட்டி வருகிறது முக்கியமான காரணம் முற்பற்கள் எந்த காரணத்தாலோ சிறுவயதில் அடிப்பட்டிருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் பல் வேர்களை சுற்றி இருக்கும் நார் போன்ற தசைகள் கிழிந்து அதன் மூலம் வீக்கம் வலி ஈர்களில் கட்டி வேர் நுனியில் கட்டி ஏற்படும் இதையும் வேர் சிகிச்சை மூலமாக சரி செய்யலாம்.

கைப்பக்குவ மருந்தாக வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். ஓரிரு கற்பூரவல்லி இலைகளையும், துளசியையும் நன்றாக மென்று வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ளலாம். சித்த மருத்துவ மருந்தாக இரண்டு துளி கிராம்பு தைலத்தை பஞ்சில் தோய்த்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். 3 முதல் 5 துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு தம்ளர் வெந்நீரில் 10 துளி சுக்கு தைலத்தை கலந்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும். தினமும் கல்நார் பற்பொடி கொண்டு பல் துலக்கலாம்.

பற்கள் அதிகமாக அரிக்கப்பட்டு இருந்தால் பல் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். பல் வலி ஏற்பட்டால் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினமும் 2 வேளை பல் துலக்கி ஈறுகளை விரல் கொண்டு தேய்த்து விடுவதும், ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதும் மருத்துவ அறிவுரை ஆகும். பல் துலக்குவதற்கு ஆலமரம், அரசு, வேம்பு மரங்களின் குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.

Thursday, January 23, 2014

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?


 சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

 ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

 பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை!

Monday, January 6, 2014

அழகு குறிப்புகள்:மெலிந்த உடல் குண்டாக…



அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.

இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோப்பு இல்லை என்றாலும் அந்த தன்மை உடைய ஷாம்புவோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்றனர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச்சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளித்தால் சருமம் மெருகேறும். அழகு என்றால் அதில் தலைமுடிதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக இப்போதெல்லாம் டை அடிக்கின்றனர் பலர்.

டை அடிப்பதற்கு பதிலாக 100 கிராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்­ர் சேர்த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல்லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.

கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகுக்கு காரணம். சீப்பு, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண்ணை தேய்த்து தலைமுடியை அலசவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.

இன்றைக்கு நடுத்தர வயதுள்ளவர்களில் பெரும்பாலும் டை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண் மையை பயன்படுத்தி முடியை கறுப்பாக்கலாம்.

நிறைய காய்கறிகள் சாப்பிடுவோருக்கு சருமம் பளபளப்பாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள். கேரட், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.

உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.

50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.

குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறுத்து… பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே.

Sunday, December 22, 2013

சிகரட் எனும் நல்ல பழக்கம்...!!!


எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று.

"நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட் பிடிக்காமல் இருந்தால், கல்லூரி கடைசி நாள் அன்று சிகரட் பிடிப்பதாக கூறினான்.

மூன்று வருடமும் நானும் சிகரட் பிடிக்கவில்லை, அவனும் பிடிக்கவில்லை. கடைசி நாள் அன்று அவன் சொன்ன படியே சிகரட் பிடித்தான். என்னையும் பிடிக்கச் சொன்னான். எவ்வளவோ முயன்றும் என்னால் மட்டும் முடியவில்லை.

பிறகு MCOM படித்தபோது, நாங்கள் எல்லோரும் கோவா டூர் சென்றோம். இரயில் திருச்சி ஜங்ஷனை தாண்டியதுமே எல்லோர் கையிலும் சிகரட், என் கையிலும்தான். ஆனால், என்னால் மட்டும் அந்த சுவையை உணரமுடியவில்லை.

இராணிப்பேட்டையில் என் நண்பன் ஒருவன், திடீரென 555 சிகரட் பாக்கெட் வாங்கினான்.

ஏனென்று கேட்டேன். அவன் கூறினான், " மாப்ளே, பையில 555 சிகரட் பாக்கெட் இருந்தா ஒரு ஸ்டேடஸ்டா" என்றான்.

அப்படி விளையாட்டாக ஆரம்பித்த அவன் பழக்கம் இப்போது விடமுடியாத பழக்கமாக மாறிவிட்டது. இன்னொறு வயதான நண்பருக்கு சிகரட்டே சரியாக பிடிக்க தெரியாது. ஆனால், பிடிப்பார். எப்படியென்றால், அவர் புகையை உள்ளே இழுக்க மாட்டார். ஆனாலும் ஒரு ச்செயின் ஸ்மோக்கர் போல் தன்னை காண்பித்துக்கொள்வார்.

ஒரு முறை நான் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது என்னை மிகவும் வற்புறுத்தி என்னை சிகரட் பிடிக்க வைத்தார்கள். நான் மீண்டும் முயற்சித்தேன். ஒரே இருமல் தொடர்ந்து. இரண்டு சிகரட் பிடித்தேன். பிறகு என்னவோ எனக்கு அந்த நல்ல பழக்கம் வாய்க்க வில்லை.

எனது பெரியப்பா ஒருவர் சாகும் வரை சிகரட் பிடித்தார். அவர் சிறு வயதிலிருந்தே சிகரட் பிடித்ததாக என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு சிகரட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு அந்த கால உடம்பு. அதனால், பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது சிகரட்டினால் ஏற்படும் தீமைகளை பார்க்கும்போது, படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளது.

ஏன் சிகரட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்?

01. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரட் பிடிப்பதால் இறக்கிறார்கள்.

02. வாழ்நாள் முழுவதும் சிகரட் பிடிக்கும் இருவரில் ஒருவர், இந்த பழக்கத்தினாலேயே இறக்கிறார். பாதி பேர் மிக குறைந்த வயதிலேயே இறக்கிறார்கள்.

03. நிறைய பேருக்கு புற்று நோய் சிகரட் பிடிப்பதால் வருகிறது.

04. ஹார்ட் அட்டாக் வருவதற்கும், ஸ்ட்ரோக் வருவதற்கும் காரணமாகிறது.

05. உயர்ந்த இரத்த அழுத்தம் வருவதற்கும் காரணமாகிறது.

06. லங்க் கேன்சர் வருவதற்கும் நெக் கேன்சர் வருவதற்கும் காரணமாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்றவாரம் கோலாலம்பூரில் ஒரு மீட்டிங்கில் ஒரு சுவீடன் நாட்டு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. மலேசியாவில் இப்போது ஒவ்வொறு சிகரட் பாக்கெட்டிலும் ஒரு போட்டோ போட்டுள்ளார்கள். அதில் ஒருவருடைய தொண்டையில் கேனசர் உள்ளதை படமாக சிகரட் பாக்கெட்டின் அட்டையில் போட்டுள்ளார்கள்.

அவர் என்னிடம் கேட்டார்,

" உங்கள் நாட்டில் இப்படி சிகரட் பாக்கெட் அட்டையில் போட்டோ உண்டா?" என்று.

" இல்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றேன்.

" என் மனைவிக்கு தெரியாமல் சிகரட் பாக்கெட் மறைப்பது கஷ்டமாக உள்ளது" எனக்கூறினார்.

நான் கேட்டேன், " ஏன் சார், அப்படி மனைவிக்கு பயந்து, கேன்சர் வரும் என்று தெரிந்தும் சிகரட் பிடிக்க வேண்டுமா?"

அதற்கு அவர் கூறிய பதில்:

" SOMETIMES CANCER CURES SMOKING"

நலமான குழந்தை...


கருவில் இருக்கும் குழந்தைக்கு

தாயின் மனநிலையே .. சேயின் மனநிலை”

என்கின்றனர் சித்தர்கள்.

தாயின் சிறிய அதிர்வு கூட குழந்தையைப் பாதிக்கும்.

புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கருவிலே குழந்தையின் மனநிலை வளர்ச்சியடைகிறது என்பதை அறியலாம். அபிமன்யுவின் தாய் கிருஷ்ணனின் உபதேசத்தை நல்ல மனநிலையில் உட்கிரகித்ததால்தான் அபிமன்யு கருவிலே உபதேசம் பெற முடிந்தது.

நல்ல குழந்தைக்கு தாயின் மனநிலையே முக்கிய காரணமாகிறது.

தாய் உறங்கும் வேளையில் கூட கருவில் இருக்கும் குழந்தை வெளியுலக சஞ்சாரங்களை கிரகித்துக்கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் நல்ல வார்த்தைகளையும், மெல்லிய இசையையும் கேட்க வேண்டும் என்றும் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சமீப பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் கருவிலே குழந்தையின் உடல் மட்டுமின்றி, மனநிலையும் வளர்ச்சியடைவதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருப்பதை படித்திருப்பீர்கள்.

கருவிலிருந்து குழந்தைகளை நோயின்றி பாதுகாத்து வருவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். இதனால்தான் சித்தர்கள் கருவுற்ற தாய்க்கு பல கஷாய மருந்துகளைக் கண்டறிந்து சொன்னார்கள். இந்த கஷாயங்களை கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திற்கு எந்த கஷாயம் அருந்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினர். பழங்காலத்துப் பெண்கள் இந்த கஷாயங்களை அருந்தி பல குழந்தைகளை அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்தனர்.

தாயின் மனநிலை உடல் நிலை இரண்டுமே குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். கருவுற்ற பெண்களை இதனால்தான் தாய் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்தப் பெண் ஒரு ராணி போல் தாயாரால் பராமரிக்கப்படுகிறாள். கருவுறும் காலத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலை மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்க முடியும்.

 கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்? இந்த வளைகாப்பின்போது அந்தப் பெண்ணுக்கு அனைவரும் வளையல் அணிவித்து சந்தனம் பூசும்போதும், உற்றார் உறவினர் வாழ்த்தும்போதும் அவளது மனம் ஆனந்தமடையும். அப்போது உடலானது புத்துணர்வுபெறும். இதனால் குழந்தை கருவில் நன்றாக வளரும்.

கருவுற்ற பெண்கள் மனதில் தயக்கம், பயம், ஏக்கம் எதுவுமின்றி இருக்க வேண்டும்.

வேலை காரணமாக நகரங்களுக்கு வந்து தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள் கருவுற்ற காலத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது நல்லது. அப்போதுதான் அப்பெண்ணின் மனதில் தனக்கு போதிய பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவும், தேவையான ஓய்வும் வேண்டும்.

ஆனால் நவீன உலகில் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தங்களின் பொருளாதாரத் தேவையை எண்ணியே அலைகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது சிறிது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்...

Wednesday, December 4, 2013

பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!




பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.


பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.


மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.


மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.


தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.


கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.


கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.


கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.


தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.


உடலுக்கு குளிர்ச்சி தரும்.


மலச்சிக்கலை நீக்கும்.


புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.


இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.


முகப்பொலிவு கூடும்.


சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.


பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.


பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.


பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.


பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.


பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.


பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

Tuesday, December 3, 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!


காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு  ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!


இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


3. புகை பிடித்தல்...!


மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!


நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று...!


மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.


6.தூக்கமின்மை...!


நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பத ு மூளைக்குநீண்டகா லப் பாதிப்பை ஏற்படுத்தும்.


7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...!


தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...!


உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...!


மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும ் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.


10. பேசாமல் இருப்பது...!


அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமாக வாழ...!

 * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;
பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

சிறிது நேரம் வாய்க்குள்
 தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.


 * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்
 ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.
அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்
போன்றவைகளை கண்டறியலாம்.

 * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான
 அளவு சேருங்கள்.

 * முடிந்த அளவு வாகன
 பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்;
அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

 * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது.
அப்படி செய்தால்
 இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

 * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும்
 தேய்த்து கழுவுங்கள்.

 * படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில்
 தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர்
 குடியுங்கள்.

 * முளைவிட்ட கடலை,
சிறுபயறு போன்றவைகளை காலை உணவில்
 சேர்க்க வேண்டும்.

 * கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

 * உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

 * அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக்
 கொள்ளுங்கள்.

 * இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

 * இரவில் அதிக நேரம்
 விழித்திருப்பதும், பகலில் தூக்கம்
 போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

 * கொழுப்பு நிறைந்த
 எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும்,
ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

 * தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு
 முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

 * தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.

நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .
.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

 அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

 கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

 நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்


 இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


 வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

5. நார்ச் சத்து தினமும் தேவை

 உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. குறைந்த அளவு அசைவ உணவு


'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

7. மீன் உணவு

 எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

8. முழு தானியங்கள்

 தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது

9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

 உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

10. தொடர் உடற்பயிற்சி

 தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்


 அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

12. மாத்திரை

 ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.