Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, December 22, 2013

அப்பா - என் ஒவ்வொரு வயதிலும்..!



ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

உறவுகள்….. உணர்வுகள்.....

“டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான்.

துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என அமர்க்களமாயிருகும். அந்தப் பருவத்தில் அதற்கு எதிர்மாறான வலிகளும், ரணங்களும் தாக்குவது இயல்புதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த சங்கம்ம்தான் “டீன் ஏஜ்” பருவம்.

இந்தப் பருவத்தினரைக் கையாள்வது என்பது சாதார விஷயமல்ல. கம்பி மேல்நடப்பது போல் அதி ஜாக்கிரையுடன் இருக்க வேண்டியது அவசியம். டீன் ஏஜ் பருத்தினரின் மனநிலையை இந்த குட்டிக்கதை தெளிவாக விளக்கம் என நம்புகிறேன்.

ஒருவன் குரங்குகளை வளர்த்து வந்தான். தினமும் அவை சாப்பிட காலையில் நான்கு மாம்பழங்களையும் மாலையில் மூன்று மாம்பழங்களையும் கொடுத்து வாந்தான்.

ஒருநாள் அந்தக் குரங்குகளைப் பார்த்து “இனிமேல் உங்களுக்கு காலையில் மூன்று மாம்பழங்களும் மாலையில் நான்கு மாம்பழங்களும் தரலாம் என்றிருக்கிறேன்” என்றான்.

இப்படிச்சொன்னதுதான் தாமதம். “முடியாது. முடியவே முடியாது. இதற்கு நாங்கள் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது” என்று எல்லாக் குரங்களுகள் கத்த ஆரம்பித்துவிட்டன.

“கொஞ்சம் பொறுமையாகக்கேளுங்கள். காலையில் நான்கு மாலையில் மூன்று என்று வைத்துக் கொண்டாலும், காலையில் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கப் போவது ஏழு மாம்பழங்கள் தானே?

இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்… என்று எஜமான் விளக்கமளித்து முடிப்பதற்குள் அவை “வேண்டாம் வேண்டாம் எங்கள் முடிவை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை. முதலில் கொடுத்த முறைப்படியே கொடுங்கள்” என்று போராடி வெறி பெற்று, அந்த எஜமானரை சம்மதிக்க வைத்த பிறகு தான் ஓய்ந்தன.

இதே மனநிலைதான் டீன் ஏஜினருக்கும். முடிவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அடுத்தவர் சொல்லும் கருத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் சாதக பாதகங்களைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று பிடிவாதமா இருப்பார்கள்.

அடுத்தவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே, இவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்று நினைத்து வேண்டுமென்றே அதற்கு நேர்மாறாக செய்வார்கள்.

இவர்களை வலதுபக்கம் போகச் சொல்ல வேண்டும் என்றால் “இடது பக்கம் போ” என்று சொன்னால் போதும். காரியம் சரியாக நடந்துவிடும்.

அடுத்தது, இந்தக் குரங்குக்கூட்டத்தைப் போலவே ஒருவன் எதிர்க்க ஆரம்பித்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டுகூட்டத்தோடு கோவிந்தா போடுவது. இந்தக் குழு மனப்பான்மையின (Mass Mentality) எதிரொலிதான் கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் ஸ்டிரைக், கலாட்டா போன்றவை.

இந்தக் கதையில் இன்னொரு உட்கருத்தும் பொதிந்துள்ளது. வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டுவிட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம் மன முதிர்சி உடையவர்களுக்கு எழும். இப்போது கஷ்டப்படுவது பின்னால் கஷ்டப்படாமலிருப்பதற்குத்தான் என்ற பக்குவம் டீன் ஏஜ் பருவத்திற்குத் தோன்றாது.

இந்தக் குரங்குகள் எப்படி காலையிலேயே அதிகமா சாப்பிட்டு விடவேண்டும் என்று நினைகின்றனவோ அதே போல்தான் இப்போதே வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும்.

“ஃபீயூச்சரைப் பத்தி யோசிச்சு பிரசன்ட் மறந்திராதே” என்று அதிமேதாவித்தனமாக தத்துவம் பேசுவார்கள். இதற்கு அத்தம் திருட்டுதம் அடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது, பெரியவர்களை எதிர்த்துப் பேசுவது தவறில்லை என்பதுதான்.

டீன் ஏஜினர் பேசும்போது கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் ஜோக்கடிப்பான் எல்லோரும் சிரிப்பார்கள். உடனே இன்னொருவனுக்குத் தன்னுடைய திறமையைக் காட்டி எல்லோரையும் தன் ஒரு கானா பாடலை எடுத்து விடுவான். உடனே எல்லோரும் கைதட்டுவார்கள்.

இது போராடித்து விட்டதா? அடுத்தகட்டம் சத்தமாய் சிரித்துப் பக்கத்தில் நடந்து போவோரை கதிகலங்கச் செய்வது, பஸ்சைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற நடவடிக்ககளின் மூலம் அடுத்தவரை திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

நாய் குரைப்பது போல் சப்தம் எழுப்பும் ஹாரன்களை நம் பக்கதில் வந்து அடித்து பயமுறுத்துவார்கள். யாராவது “ஏம்பா ஒழுங்கா பார்த்துப் போகக்கூடாதா?” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினால் “ஏய், என்னா பெருசு, ஃபிலிம் காட்டற?” என்று எகிறுவார்கள்.

இதெல்லாம் தங்கள் ஈகோவை பூஸ்ட் அப் செய்து, உலகத்திலேயே நான் பெரிய ஆள், என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்று காட்டிக் கொள்ளத்தான்.

கூட்டத்திலிருக்கும் போது வீரம் காட்டுவார்கள். தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்! பேய் முழி முழித்து “ஸாரி தலைவா” என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

இது போல் டீன் ஏஜினரின் சாகசங்களையும் குணநலன்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். மேற்சொன்னதெல்லாம் சிறுதுளிதான். இவற்றையெல்லாம் நான் குற்றச் சாட்டுகளாக சொல்லவில்லை. இந்த சேஷ்டைகள் எல்லாம் இல்லையென்றால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

‘டீன் ஏஜினரின் குணங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை உணர முடியும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த குழந்தை இரவில் அழும். நம்மைத் தூங்கவிடாமல் செய்யும் என்பதை தாய் புரிந்து கொண்டு, தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு தயாரகிவிடுகிறாள்.

அதேபோல்தான் டீன் டீஜ் பருவத்தை அடையும்போது நம் குழந்தை இப்படி இப்படி நடந்து கொள்வான், அவன் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை முதலிலேயே பெற்றோர் உணர்ந்து கொண்டு விட்டால், அந்த சமயத்தில் அவர்களை அழகாகக் கையாண்டு விடலாம்.

டீன் பருவத்தில் உங்கள் குழந்தையின் மனது கடல் போல பெருத்த ஆரவாரத்துடன் இருக்கும். அவர்கள் எப்போதும் சத்தம் போட்டுச் சிரிப்பது, ரேடியோவை, டீவியை சப்தம் அதிகமாய் வைப்பது போன்றவற்றிற்கெல்லாம இந்த மனநிலைதான் காரணம்.

தங்களின் மன இரைச்சலைத்தான் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், பக்குவமாய் சொல்லித்தான் மாற்றி முயல வேண்டும்.

அதிக சத்தத்தினால் அக்கம்பக்கதிலுள்ள எவருக்கு எவ்வளவு தொந்தரவு, உன் காதிற்கு எவ்வளவு கேடு என்ற ரீதியில் பேசினால் நிச்சயமாய் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம்.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்தப் பருவத்தினருக்கே உரிய குணம் ஈகோ, “நான்” “தன்னுடைய” என்ற நினைப்பு இவர்களுக்கு அதிகமாயிருக்கும். கத்தியை கொல்லவும் பயன்படுத்தலாம் என்பது போல் இவர்களுடைய ஈகோவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.

அவர்களை அருகில் அமர வத்துப்பேசுங்கள். “உனக்கு என்ன வேண்டும்? உன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் அவ்வளவு தானே இதற்கு ஏன் இப்படி பஸ்ஸைத் தட்டிக் கூச்சல் போடுகிறாய்? இதனால் மற்றவர்களின் எரிச்சலைத்தானே சம்பாதித்துக்கொள்கிறாய்? இந்த சக்தியைப் பயன்படுத்தி பாட்டு கற்றுக் கொள், மேடையில் கச்சேரி செய், புகழுக்குப் புகழ், பணித்திற்குப் பணம். என்ன…?” அப்படிப் பேசிப் பாருங்கள்.

நிச்சயமாய் ஏதாவது ஒரு துறையில் உங்கள் பிள்ளை சாதித்துக் காட்டுவான். ஆரம்பத்தில் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும். என்பதற்காகவே ஆரம்பித்தாலும் போகப் போக இந்த கலைகளே அவன் மனதிலிருக்கும் அகங்காரத்தைத் துடைத்துப் போடும்.

ஊரை அழிக்கும் பெரிய வெள்ளத்தை மடைதிருப்பி விட்டு பலருக்கும் பயனுள்ளதாக எவ்வளவு எளிதில் நீங்கள்மாற்றி விட்டீர்கள் பார்த்தீர்களா?

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் அடிக்கடி சொல்லும் “வார்த்தை வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன்” என்பது தான். காரணம்? இந்த வயதில் வரும் இன்ஃபார்ச்சுவேஷன்.

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!


1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே Huh?அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா Huh?

2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க Huh?
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில  எங்க மேனேஜர்ஜ  பார்த்த எனக்கு ரோபோ சங்கர்  ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)


3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்குHuh?


4-மூக்குலயும்  வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா Huh?

5-கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் Huh?


6- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை'' மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா Huh?

7-விளம்பரங்களில் ''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா Huh?

8-numberஜ ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர எழுத்தே இல்லையே Huh?

9-சின்மா DVDய  reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா Huh?

10-அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா Huh?

11-கண்ணு பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக பார்க்க முடியுமா Huh?

இதுக்கு எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும் Cry
 Grin

ரிப்ளையோ ரிப்ளை..!


"ப்ளீஸ் கால் மீ"ன்னு பொண்ணுங்களுக்கு பசங்க மெஸேஜ் அனுப்பினா, பொண்ணுங்க என்னென்ன ரிப்ளை பண்ணுவாங்க?

1) ஸாரிப்பா, நான் நல்லா தூங்கிட்டேன். (ஏந்திரி அஞ்சலி ஏந்திரி)

2) ஸாரிடா, அப்பா பக்கத்துல இருந்தாங்க அதான் கூப்பிடலை. (இல்லேன்னா மட்டும்?)

3) பேட்டரி சார்ஜ் இல்லம்மா. (அதுவும் போச்சா?)

4) நெட்வொர்க் ப்ராப்ளம், கால் போக மாட்டேங்குதுடா செல்லம். (அது நெட்வொர்க் ப்ராப்ளம் இல்லம்மா, பேலன்ஸ் ப்ராப்ளம்)

5) பேலன்ஸ் இல்ல, 50 ருபீஸ் டாப் அப் போட்டு விடேன் கண்ணா. (500-ஆ போட்டியின்னா ரொம்ப சந்தோஷம்)

6) ஸாரியா, மெஸேஜ லேட்டாதான் பாத்தேன். (நாங்க பண்ணினா மட்டும் ஃபர்ஸ்ட் ரிங்குலயே எடுக்குறீங்க?)

7) படிச்சுட்டு இருந்தேன் டியர். (அம்மா அய்யேயெஸ்ஸூ)

8 ) இன்னைக்குன்னு பாத்து ஹலோ டியூனுக்கு காசு எடுத்துட்டாண்டா புஜ்ஜிக்குட்டி. (அவுங்க டோரா, நாம புஜ்ஜி. அதாவது கொரங்கு)

9) பேலன்ஸ் மைனஸ்ல இருக்கு ஹனி. (என்னைக்கு அது ப்ளஸ்ல இருந்துச்சு?)

10) மொபைல வீட்ல வச்சுட்டு கோயிலுக்கு போயிட்டேன்பா. (பக்திமயமான ஃபேமிலி கேர்ளாம்)

11) கஸின் வந்திருந்தாம்பா, அதான் கொஞ்சம் பிஸியா இருந்தேன் (வில்லன்ன்ன்ன்ன்... அவன் வந்தா நீ ஏன் பிஸியாகுற?)

12) க்ளாஸ்ல இருந்தேன்டா (க்ளாஸ்ல நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது?)

இதத்தவிர வேற ஏதாவது ரிப்ளை வந்துதுன்னா, காலைல பீக் அவர் டிராபிக்ல நடு மெளன்ட்ரோடுல நிக்க நான் தயார். (ஆனா கால் மட்டும் வரவே வராது)

பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்கள்


பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை:-


10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)


9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....


1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?


சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?

அல்வா - To cheat
ஆத்தா - Mother
அபேஸ் - Loot adiththal
அல்பம் - A silly/cheap dude
அண்ணாத்தே - The elder brother
அண்ணி - Anna's figure
அப்பீட்டு - Unsuccessful
அசத்தல் - Kalakkal
பஜாரி - A not-so-friendly figure


பந்தா - Pillim
பேக்கு - Fool
பாடி - Muscular Machi
சித்தீ - Aunty Figure
டப்ஸா/டூப் - Lie
தேசி குஜிலி - An Indian figure in US
தில் - Courage
தூள் - Super
தம் - To smoke
டாவு - Site seeing


டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)
டமாரம் - Deaf
டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
ப்ரீயா வுடு மாமே - Forget it
காலி - Appeettu
குஜிலி - Figure
குரு/தல - Head of the gang
குஜால்ஸ் - Having fun with Gujilis
கானா - Rap song sung by Machis
கலீஜ் - Dirty


கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from
ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
ஜொள்ளு - Bird watching
ஜில்பான்ஸ் - Gujaals
ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.
ஜுஜிபி - Easy
ஜில் - An exclamation on seeing a Takkar figure
ஜல்சா - Same as Gujaals
காட்டான் - Uncivilized/ Rude Machi
கேணை - Idiot
கிக்கு / மப்பு -Intoxicated/under influence


கலக்கல்ஸ் - To cause a flutter
கேணை பக்கிரி - Friend of ushar pakri
கிண்டல் - To make Fun
காக்கா அடிக்கிறது - Putting soaps to someone
கே.எம்.எல். - Kedacha Mattum Labam
குட்டி - Figure
குடும்ப பிகர் - Homeloving Gujli
குடும்ப பாட்டு - A song with which machis identify themselves
குள்ளுஸ் - A short machi
லட்டு - Allva


லூட்டு -to steal
மாம்ஸ் - One cool dude
மாங்காய் - Fool
மச்சி - Maams
மண்டை - A sharp guy
மேரி - feminine of Peter
மாவு - refer O B.
நச்சுன்னு - Bull's eye
நம்பிட்டேன் - I don't believe you
நாட்டு கட்டை - A well-built village figure
நாட்டான் - Villager


நாமம் - To cheat
நைனா - Father (courtesy Telugu)
கடலை - Machi talking to a Gujili or vice versa
ஓபி - To waste time
ஒண்ணரை அணா - Worthless
பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli
பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in
ஹை-பி - english
பத்தினி - A figure who goes around the block
பக்கிரி - A shrewd dude
பேட்டை - Area
பிசாத்து - Cheap
பிலிம் - Show-off


பீலா - To lie
ராம்போ - A manly figure
சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time
சொங்கி - Lazy
சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick
(courtesy Movie:Thevar Magan)
டக்கர் பிகர் - Semma figure
தண்ணி - Liquor
தலைவர் - Leader
டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)
உஷார் பக்கிரி - Smart pakri
வெண்ணை - Fruit
வெயிட் பிகர் - A very attractive/rich figure
ராங்கு காட்டுறது -Acting indifferently

Friday, December 20, 2013

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் அனி திரும்ப வரமாடடேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

Tuesday, December 3, 2013

நகைச்சுவை!


 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????