Monday, January 27, 2014

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட்..! - சோனி அறிமுகம்!




சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும்.

மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

எக்ஸ் பெரிய இசட் அல்ட்ரா டேப்லெட்டின் மற்ற குறிப்புகள் 16GB ஆண்போர்டு சேமிப்பு, 2GB ரேம், 64GB வரை microSD அட்டை ஆதரவு, NFC, microUSB 2.0, ப்ளூடூத் 4.0 மற்றும் 3,050 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை அடங்கும். சோனியின் புதிய டேப்லெட்ல் 8MP கேமரா தக்க வைத்து கொண்டுள்ளது, இந்த மாடலில் இருந்து எல்இடி ப்ளாஷ் நீக்கப்பட்டது.

பெருமளவில் உற்பத்தி செய்யும் 7 இன்ச் திரை அளவு கீழ் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டேப்லெட்டில் 7 மற்றும் 8 இன்ச் திரை அளவுகள் தேர்ந்தெடுக்கின்றனர். நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்க்கான உலகின் முதல் யுஎஸ்பி டிரைவ்களை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால்..! லாபமா..? நஷ்ட‍மா..?





அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப் போது பணம் கிடைக்கும் என்று தான் காத்திருப்போம். அதே கட னை திரும்பக்கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திரு ப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந் த இ.எம்.ஐ. யை கட்டி முடிப்பத ற்குள் உயிர் போகிறது என்று புல ம்புகிற வர்கள்தான் அதிகம்.

இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பண ம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்து விடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் என

சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப் பில் இருந்தவர்களும் கல ங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூ ட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந் தியன் ஓவர்சீஸ் வங்கியி ன் முன்னாள் பொதுமேலா ளர் (ஓய்வு) டாக்டர் எஸ். இளங்கோவனிடம் கேட்டோம்.

”வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச்செ லுத்தும்விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆ ண்டுக்குள் கடனை திரு ம்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற் படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பல ரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.

ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெ ருந்தொகை கிடைத் திருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வெளியி லிருந்து வர வேண்டிய பணம் வந் திருக்கும். இது போன்ற   சமயங்களி ல் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்க ள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறை வான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டிவிகிதம் அ திகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நி னைப்பார்கள்.

இப்படி செய்வதால் சிபில் பட்டியலி ல் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படா து. மாறாக, நீங்கள் கடனை விரை வாகச் செலுத் துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிரு ந்தாலே போதும்.

ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒருவங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினா ல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங் கள் மீதான மதி ப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய் ப்பு உள்ளது.

சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட் டும் திறனை கணக்கிடும் அள வுகோல்தான். பெரும்பாலா ன வங்கிகள் வாடிக்கையாள ர்களுக்கு கடன்தரும்முன்   இந்த அளவுகோலை அவசிய ம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கட ன் தரப்படுவதில்லை என்றா லும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது

ஒரே குடும்பத்தில்..!

ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெ யர் சிபில் பட்டியலில் இருந்தா ல் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடை ப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறா ர்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணு குவதாகவும் சிலர் சொல்கிறார் கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.

அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல் லும் சூழ்நிலையில் மனை வி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன் களை வாங்கி, அதை சரி யாகக் கட்டாமல் செட்டில் மென்ட் செய்துள்ளார் என் று வைத்துக் கொள் வோம். பின்னாளில் மகனுக்கு கல் விக் கடன் கேட்டு விண்ண ப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜ ர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.

அதேபோல, அதிக தொகை கட னாக கிடைக்கும்என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் கு றைவாக இருந்தா ல் அந்த கடன் நிகாரிக்கப்படும்.

ஒருவருக்கு கடன் வழங்கும்போ து கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறு வனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவரு டைய எதிர்கால வளர்ச்சி என்பதை எ ல்லாம் அடிப்படையாக வைத்து தான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்மு றையாக கடன் வாங்குபவருக் கும்இதைப்பின்பற்ற வேண்டும்.


 
அடமானக் கடன்..!

வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமா னமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமா ளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அட மானமாக வைத்து கடன் வாங்கும்போது மா தத் தவணை கட்டும்படி இருக்கும்.

தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறை யும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணை யில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல் லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலா ம். ஆனால், வட்டியை சரியா க கட்டுவது அவசியம். வட்டி க்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலா ம். 

எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய் யுங்கள்” என்று முடித்தார் இளங்கோவன்.

லோன் செட்டில்மென்ட்..!


கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட் டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.

”திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தி னால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரி வர கட்ட முடியவில்லை என் ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத் தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கட னாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வ ராது என்ற சூழ்நிலையி ல்தான் வங்கி செட்டில் மென்டிற்கு போகும்.

செட்டில்மென்ட் முடிவு க்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக் கிவிடும். கொடுத்த கட ன்தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும் போ துதான் செட்டில்மென் டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங் கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்ட வேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும்.

 இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவ ரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்து விடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்கு கூட  சென்ட்டில் மென்ட் செய்ய வங்கி ஒப்புக் கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கி யவரும் பெ ருமையாக வாங்கிய கடனை விட குறைவா ன தொகையே கட்டினேன் என்று பெருமை ப்பட்டுக்கொள்ளலாம்.

செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில் மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்ப டும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்தி சாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வா ங்கிய கடன் தொகையை விட குறைவான தொகையே திரு ம்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும்.

 இந்த தகவல் அப்ப டியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகி விடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவி டும். பிற்பாடு வீட்டுக்கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ண ப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வா ய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி வி கிதம் சற்று அதிகமாக இருக் கும். அதோடுகடனுக்குஒருவ ர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன் ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபா சிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, மீதமுள்ள கடனுக்கான வட் டி அதிகம் என்றாலும் பரவாயில்லை . வங்கி கேட்கும் தொகை முழுவதை யும் செலுத்த முயற்சி செய்யுங்கள். சில ஆயிரங்களை மிச்சப் படுத்துவ தாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்க ள்” என்றார். ஆக கடன் வாங்குபவர் கள் கவனமாக இருப்பது அவசியம்!

உண்மையான பார்வை..!



உண்மையான பார்வை..!
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஹீரோயின் இல்லாத படம்..!



ஹீரோயின் இல்லாமல் தயாராகிறது மொழிவது யாதெனில்...

 இதுபற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இப்படத்துக்கு இலக்கிய தமிழில் பெயர் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமும், இப்படத்துக்கு அப்படியொரு தலைப்பு தேவைப்பட்டதாலும் வைத்தோம்.

சொல்வது என்னவென்றால் என்ற பொருளில் இதன் தலைப்பு அமைந்துள்ளது. நட்பை பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது நட்பை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் படம். உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது. பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் மகன் விராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் சென்னை 28 படத்தில் சிவா கோஷ்டியிடம் பந்தயம்கட்டி கிரிக்கெட் பேட்டை ஜெயித்து எடுத்துச்செல்லும் சிறுவனாக நடித்தவர். இக்கதைக்கு ஹீரோயின் அவசியப்படவில்லை என்பதால் தேர்வு செய்யவில்லை. ராஜன், ரியாஷ், தேஜ், மீனுகார்த்திகா, லஷ்யா, பாலு ஆனந்த் உள்பட பலர் நடிக்கின்றனர், நித்யன் கார்த்திக் இசை அமைக்கிறார்.

ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஆர்.மாணிக்கவாசகம், பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி தயாரிக்கின்றனர். ஈரோடு, சென்னை, புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துள்ளது.

பெருமாளே கிரிவலம் வரும் தலம்..!



தன்னை நம்பி வருவோர்க்கு நற்கதி நல்குவான் நாராயணன். அவன் கோயில் கொண்டருளும் தலங்களுள் ஒன்று, துத்திப்பட்டு. ஒருசமயம் ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் கானகத்தில் தவம் புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அந்த அரக்கனை 'புலியாகக் கடவது' என்று சாபமிட்டார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன், முனிவர்களை முன்பைவிட இன்னும் அதிகமாக துன்புறுத்தி வந்தான். வேறு வழியின்றி முனிவர்கள் இந்திரனை சரணடைந்தனர்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திரன் தானும் புலியாக உருமாறி பிரதூர்த்தனுடன்  போரிட்டான். இறுதியில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அரக்கனை அழிக்க முற்பட்டபோது, சாகும் தருவாயில் அரக்கன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அவனை மன்னிக்க விரும்பிய இந்திரனும், தேவர்களும் அந்த அரக்கன் நற்கதி பெற வேண்டுமென்று திரு மாலை வழிபட்டனர். திருமாலும் சங்கு, சக்ரதாரியாக தேவியருடன் காட்சி கொடுத்து, அரக்கனுக்கு நற்கதி அளித்தனர்!

அரக்கனுக்கு அருள்புரிந்த அதே கோலத்தில் அங்கேயே எழுந்தருளுமாறு ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் திருமாலிடம் வேண்டிக் கொள்ள முனிவர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று திருமால் இங்கேயே கோயில் கொண்டார். பிரதூர்த்தன் நற்கதியடைந்த தலமாதலால் 'பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'துத்திப்பட்டு' ஆகிவிட்டது. இக்கோயிலை 'வரதராஜ பெருமாள் கோயில்' என்றே தற்சமயம் அழைக்கிறார்கள்! நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக அமைந்துள்ளது. கோயில் ஒரே பிராகாரம் கொண்டது. அதில் மூன்று சந்நதிகள் உள்ளன.

மகா மண்டபமும், ஒருமுக மண்டபமும் உள்ளன. கொடிமரத்தைக் கடந்து கருடாழ்வாரை தரிசித்து, மகாமண்டபத்தை கடந்து, மூல ஸ்தானத்தை அடைந்ததும், பிந்து மாதவராய் பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஒருபுறம் பெருந்தேவியும் மறுபுறம் குமுதவல்லி நாச்சியாரும் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றனர். பெருமாள் சதுர்புஜங்களில் மேலே சங்கு, சக்கரம் தரித்தும், கீழ்கரங்களில் கதை, அபய முத்திரையுடனும் காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

மூலவர் சந்நதிக்கு மேலே 'தேஜோ விமானம்' அணி செய்கின்றது. பெருந்தேவி  தாயாரும், ஆண்டாளும் தனித்தனி சந்நதிகளில் கோயில் கொண்டுள்ளனர். திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் தனியே தரிசனம் தருகிறார். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் உடையவர் திருவுருவங்களும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மண்டபச் சுவரில் இத்தல த்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தனின் திருவுருவம் உள்ளது. இந்த புண்ணிய பதியில் விஷ்ணு புராணத்தை பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு எடுத்துரைத்ததாக கூறப்படுகின்றது.

தை மாதம் காணும் பொங்கலன்று அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உத்ஸவ மூர்த்தி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த மலையில் 'ரோமச ரிஷி' இன்றும் தவம் இருப்பதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதீகம். உற்சவ காலங்களில் இவ்வூரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கும் பெருமாள் செல்வது இப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது! வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் துத்திப்பட்டு அமைந்துள்ளது.

மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்..!



அதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோ..!

அந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.

வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.

வெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள்? கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது?

பெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான  வெற்றிப் பெற்ற  மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை
இப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.

அதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இது. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.

இந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.

போலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.

பல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.

மண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்
ரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.

ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.

எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

எப்படி  சாப்பிட வேண்டும் தெரியுமா..?

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

பெப்சி, கோககோலா - அப்படி என்ன நச்சு பொருள்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!




பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே..!



நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.

ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.

இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன.

 இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

 உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.