Wednesday, December 4, 2013

ஐக்கிய நடுகள் சபை (ஐ.நா)





ஐ.நா. அமைப்புக்கள் (UN Associated Agencies)


 1.சர்வதேச அணுசக்திக் கழகம்.

Intenational Autamic Engery Agency (IAEA)


 2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.

United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO)


 3.சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

International Labour Organsation (ILO)


 4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.

Food and Agriculture Organisation (FAO)


 5.உலகச் சுகாதார நிறுவனம்.

World Health Organisation (WHO)


 6.சர்வதேச நிதி நிறுவனம்.

International Monetary Fund (IMF)


 7.சர்வதேச சீரமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்.

International Bank for Reconstruction and Development (IBRD)


 8.உலக அளவிலான தபால் கழகம்.

Universal Post Union (UPU)


 9.சர்வதேச தந்தி தொடர்புக் கழகம்.

International Telecommunication Union (ITU)


 10.உலக வானிலை ஆய்வு.

World Meteorological Organisation (WMO)


 11.சர்வதேச கடல் நிறுவனம்.

International Maritime Oraganisation (IMO)


 12.உலக அறிவான்மை நிதிக் கழகம்.

World Intellctual Property Organisation (WIPO)


 13.சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு.

International Fund for Agriculture Development (IFAD)


 14.உலக வணிக அமைப்பு

World Trade Organisation (WTO)


 15.ஐ.நா. சர்வதேச குழந்தைகள் கல்வி நிதி அமைப்பு.
United Nations International Children,s Emergency Fund (UNICEF)
முன்பு இப்படி அழைக்கப் பட்ட இந்த அமைப்பு United Nations Childrens Fund என அழைக்கப்படுகிறது.


16.ஐ.நா. மக்கள் தொகைச் செயல்பாட்டு நிதி அமைப்பு.

United Nations Fund for Population Activities (UNFPA)


 17.ஐ.நா. மறுவாழ்வளிப்புப் பனிக்கழகம்.

United National Relief and Works Agency (UNRWA)


 18.ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம்.

United Nations High Commission for Refugees (UNHCR)


 19.ஐ.நா. தொழில் வளர்ச்சி நிறுவனம்

United Nations Industrial Development Organisation (UNIDO)


 20. ஐ.நா. வளர்ச்சி திட்டம்

United Nations Development Programme (UNDP)


 21.விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி நிறுவனம்.

Intrnational Fund for Agriculture development (IFAD)


 22. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம்.

International Air Transport Association (IATA)


 23.சர்வதேச வளர்ச்சிக் கழகம்


24.சர்வதேச நிதிக் கழகம்


 இரண்டாம் உலகப் போரின்போது அச்சு நாடுகளை எதிர்த்துப் போரிட்ட ரூஸ்வெல்ட்,வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகிய நேசநாட்டுத் தலைவர்களின் கூட்டு முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை (சுருக்கமாக ஐ.நா. சபை) உருவானது.


1944ல் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில்,டம்பர்டன் ஓக்ஸ் என்ற இடத்தில் நடந்த நேசநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஐ.நா. சபைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.1945ல் அமெரிக்காசான்ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டின் சாசனத்தில் நேச நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர்.1945 அக்டோபர் 24ல் ஐ.நா.சபை உதயமாகிச் செயல்படத் தொடங்கியது.


உலக சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நாடுகளிடையே நல்லுறவு, பன்னாட்டு சமூகம், அரசியல், பொருளாதாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை நாடுகளுக்கிடையே ஏற்படுத்துவதே இச்சபையின் நோக்கமாகும்.


ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ் ஆகியா ஆறு மொழிகள், ஐநாவின் அலுவலக மொழிகளாக உள்ளன. அமைதியை விரும்பும் எந்த நாடும் இதில் உறுப்பினராக சேர முடியும்.


இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இச்சபை தனக்கென தபால் தலைகள் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஐ. நா.வில் 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபை ஆரம்பிக்கப்பட்ட 1945ம் ஆண்டிலேயே இந்தியா உறுப்பினராக சேர்ந்துவிட்டது. (உறுப்பினர் அல்லாத சில நாடுகள் கிரிபாடி, சஹ்ராவி அரபுக் குடியரசு, சுவிட்சர்லாந்து, டோங்கோ, துவலு, நெளரு, பெலராஸ், பாலஸ்தீனம்,
வத்திக்கான் நகரம் எனக்கு தெரிந்தவரைக்கும். ? )


ஐ.நா.சபை ஆறு உள் அமைப்புக்களைக் கொண்டு செயல்படுகிறது.
அவை:


1.பொதுச்சபை (General Assembaly)

 2.பாதுகாப்புக் குழு (Security Council)

 3.சமூகப் பொருளாதாரக் குழு (Social And Economic Council)

 4.பொறுப்பாண்மைக் குழு (Trusteeship Council)

 5.பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice)

 6.செயலகம் (secretariat)

பிச்சைக்காரன் கேரக்டரில் வித்யாபாலன்!




தியா மிர்ஸா தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகும் படம் 'பாபி ஜஸூஸ்'. வித்தியாசங்களை விரும்பி ஏற்கும் வித்யாபாலன் இதில் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். 


இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் வித்யாபாலன்.


இந்தப் படத்திற்காக ஹோம் ஒர்க் செய்து நிறைய ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.


படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரனாக வித்யா மாறி இருக்கிறார். 


பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம்.


நிஜமாகவே அவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து காசு போட்டு மக்கள் கடந்துபோனார்களாம்.

தூதுவளை தோசை - சமையல்!



 தேவையானவை: 


புழுங்கலரிசி - 1 கப்,


தூதுவளை இலை - 15,


மிளகு - 10,


சீரகம் - அரை டீஸ்பூன்,


பச்சை மிளகாய் - 2,


உப்பு - தேவைக்கேற்ப,


எண்ணெய் + நெய் - தேவையான அளவு.


செய்முறை: 


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.


பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.


மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க...

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...


மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.


சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ள சில யோசனைகள்...


இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.


நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.


பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!



தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.


விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.


ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களிலேயே, புட்டிப் பாலை, அதன் பச்சிளம் வாய்களுக்குள் திணித்து விடுகின்றனர். இதுபோன்ற புட்டிப் பால் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நோய்களின் அமுத சுரபியாக திகழும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


தாய்ப்பாலுக்கு உள்ள மகத்துவத்தை பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில், கல்லா கட்ட துவங்கியுள்ளன பல நிறுவனங்கள். பணத்தாசை பிடித்த சில பெண்கள், "பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக, தாய்ப்பாலை விற்பனை செய்வதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை விட அதிர வைக்கும் நிகழ்வுகள், சீனாவில் அரங்கேறுகின்றன.


"நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள், தாய்ப்பால் அருந்தினால், அந்த பாதிப்புகளிலிருந்து குணமடையலாம்...' என்ற பிரசாரம், சமீபகாலமாக சீனாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது.


இதைப் பயன்படுத்தி, சென்ஜென் மற்றும் குவாங்டன் ஆகிய நகரங்களில் செயல்படும் சில நிறுவனங்கள், தாய்ப்பாலை விற்பனை பொருளாக்கி, செமத்தியாக காசு பார்க்க துவங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்படும் இந்நிறுவனங்கள், இளம் தாய்மார்களுக்கு பண ஆசை காட்டி, அவர்களை, தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தாய்ப்பாலை பெறுகின்றன.


சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைத்தோ, தாய்ப்பாலை பெறும் நிறுவனங்கள், அதற்காக, அவர்களுக்கு, கணிசமாக பணம் கொடுக்கின்றன. சில பெண்கள், மாத கணக்கில், அந்த நிறுவனங்களுக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.


இதற்காக, ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்களுக்கு கொடுக்கப்படுவதாக, பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பெண்களிடமிருந்து பெறும், தாய்ப்பாலை, பதப்படுத்தியோ அல்லது, "பிரஷ்'ஷாகவோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன இந்நிறுவனங்கள்.


செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சில ஓட்டல்களில், தாய்ப்பாலில் தயாராகும் இனிப்பு வகை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. சீனாவில் அரங்கேறும், இந்த அநியாயத்துக்கு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


"தாய்ப்பால் என்பது, ஒரு வரம் போன்றது. ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சொத்து. தாய்மையின் அடையாளம். அதை, விற்பனை பொருளாக்கி, பெண்களை, கால்நடைகளாக மாற்றுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது...' என, அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, சீன அரசு, தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

நான் இன்னும் கன்னிப்பையன்(?)தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!



தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளர்.


பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் சல்மான் கான். மான்வேட்டை தொடங்கி அவர் ஆடாத வேட்டையே இல்லை எனலாம். அவர் குறித்த எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் பாலிவுட்டின் ஸ்வீட் ராஸ்கலாக சல்மான் இன்னும் கோலோச்சுகிறார்.


ஐஸ்வர்யா ராய் தொடங்கி சல்மானுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் அநேகம்பேர் உண்டு. அதிலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்த பின்னர் ஒருநாள் குடிபோதையில் ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு வெளியே நின்று சல்மான் கான் தகராறு செய்ததும், அதனைத் தொடர்ந்து தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத ஐஸ்வர்யா ராயின் தாயாரை கண்டபடி திட்டியும், ஐஸ்வர்யா ராயுடனான நெருக்கமான உறவுகள் பற்றியும் தொலைபேசியில் பேசி சண்டை போட்ட டெலிபோன் உரையாடல்கள்,  2006 ல் மும்பை பத்திரிகைகளில் எழுத்துவடிவில் பிரசுரிக்கப்பட்டு, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.


பாலிவுட் பிரபலங்களிடம் மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுவது குறித்த புகார் அதிகமாக வந்ததால், முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் தொலைபேசி உரையாடல்களை காவல்துறை ஒட்டுக்கேட்டது. அப்படி ஒட்டுக்கேட்டபோதுதான் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயுடன் பேசி சண்டைபோடும் உரையாடல்களும் பதிவாகி, அது வெளியே ஊடகங்களுக்கும் கசிந்துவிட்டது.


அந்த தொலைபேசி உரையாடல்கள் வெளியான பின்னர் சல்மான் கான் மீது பாலிவுட் வட்டாரத்தில் ஒருவித வில்லன் இமேஜே   உருவாகி விட்டது. இதனால் சிறிதுகாலம் தனது சினிமா உலக வாழ்க்கையில் சற்று சறுக்கலை சந்தித்தாலும், மீண்டும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இன்றும் பாலிவுட்டின் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் சல்மான் கான். அதே சமயம் அவருக்கும், முன்னணி நடிகைகளுக்கும் இடையேயான் கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.




இந்நிலையில் ஸ்டார் டி.வி.யில் வரும் 'காஃபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம்,கரண் ஜோகர் நடத்திய கல கல பேட்டியில் சல்மான் கான், தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும்  கூறியுள்ளர்.


அவர் இவ்வாறு கூறியதும் பேட்டி எடுத்த கரண் வியப்பு மேலிட, " அதாவது இன்னும் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதாக சொல்கிறீர்கள்... அப்படித்தானே..? " எனக் கேட்டதும், ஆமாம் என்று தலையை அசைக்கிறார் சல்மான்.


 "அப்படியானால் நீங்கள் பழகிய பெண்கள் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை?!" என்று கிரண் வெடி சிரிப்புடன் கேட்க, "அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள்...அவ்வளவுதான்!" எனக் கூறுகிறார் சல்மான்.


தொடர்ந்து பேசும் சல்மான், " இரவில் நான் தனிமையாக தூங்குவதையே விரும்புகிறேன்.ஸ்டூடியோக்களில் இரவில் தங்கினால் எனது படுக்கையில் யாரும் இல்லை என்பதை காட்டும்விதமாக சோபாவில் கால்களை விரித்தபடி தூங்குகிறேன்" என்று கூறுகிறார்.


அடுத்த கேள்விக்கு நகரும் கரண், 3 பாலிவுட்  நடிகைகளின் பெயர்களை கூறி, இவர்களில் யாரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு "ப்ரீத்தி ஜிந்தா!" என பதிலளிக்கிறார் சல்மான்.


 
தொடர்ந்து, "உங்கள் நெற்றிபொட்டில் யாராவது ஒருவர் துப்பாக்கியை வைத்து, ஒரு 'கே' (Gay) ஆணுடன் இருக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான், "இல்லை..முதலில் அப்படி ஒரு துப்பாக்கி எப்போதுமே செய்யப்படாது" என்று கூறிவிட்டு, பின்னர் அப்படி இருக்க வேண்டும் என்றால் கரணுடன் ( நிகழ்ச்சியை நடத்துபவர்) என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.



 "நீங்கள் விரும்புவது என்ன...விரும்பாதது என்ன..?" என்ற கேள்விக்கு, "பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை விரும்புகிறேன்; ஆனால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் இருப்பதை விரும்பவில்லை" என பதிலளித்துள்ளார் சல்மான். 

‘வீரம்’ படத்தோட ஒன்லைன் கதை என்னான்னு தெரியணுமா?



அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார்.


கிராமத்து கதைங்கறதால அண்ணன் தம்பி அஞ்சு பேருன்னு படத்தோட கதையும் கிராமத்துல இருக்கிற மாதிரி பாசமாவே அமைச்சிருக்காங்க.
படத்தோட கதை என்னன்னா, இப்படி அண்ணன் தம்பிகளான அஞ்சு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை, அராத்துன்னா அராத்து அப்படி ஒரு அராத்தாம். இப்படி கலாட்டாவானவங்களுக்கு மத்தியில தமன்னாவும், சந்தானமும் எப்படி வர்றாங்கன்றதுதான் படமேவாம்.


படம் ஃபுல்லாவே அஜித்துக்கு வேட்டி சட்டைதான் காஸ்ட்யூம். அவராவே விரும்பி நடிக்கிற கேரக்டர். படத்துல மருந்துக்குக் கூட பன்ச் டயலாக் கிடையாதாம்.நிச்சயமா வித்தியாசமான படமா இந்த ‘வீரம்’ படம் இருக்கும்னு சொல்றாரு டைரக்டர் சிவா…

ஏமாத்தினாங்க…அதான் படம் ஓடலை…‘நய்யாண்டி’ பற்றி நஸ்ரியா…



நய்யாண்டி’ என்றாலே தனுஷ் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ கண்டிப்பாக நஸ்ரியா ஞாபகத்திற்கு வருவார்.


அந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த புகழுக்காக அல்ல, அந்த படத்தின் இயக்குனர் மீது அளித்த புகாருக்காக, என்பதுதான் முக்கியம்.


மழை  விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். அது போல ‘நய்யாண்டி’ படப் பிரச்சனை முடிந்தும் நஸ்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


‘‘நய்யாண்டி’  படத்தில் நம்பிக்கை மோசடி செய்து விட்டார்கள். படத்தில் நடிக்க சம்மதிப்பதற்கு முன்பே ‘இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்’ என அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால், என்னை  ஏமாற்றி, ‘டூப்’ மூலம் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ‘நய்யாண்டி’யில் எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி.


இப்படியெல்லாம் சீட்டிங் பண்ணாம இருந்திருந்தாங்கன்னா, படம் நல்லா வந்திருக்குமோ என்னமோ, ” என்று பேட்டியளித்திருக்கிறார்.


எப்படியோ படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் நஸ்ரியாவுக்கு தமிழ்நாட்டுல நயா பைசா செலவில்லாம நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சி….

ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!



ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா இந்த ஆண்டும் 94ஆவது இடத்தில் உள்ளது.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் 177 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஊழலே இல்லாத நாடுகளில் இருந்து ஆரம்பித்து ஊழல் நிறைந்தவை என நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில்தான் இந்தியா 94ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.


 ஊழல் வரிசை நாடுகள் பட்டியலில் முதல் முறையாக 2007ஆம் ஆண்டில் இந்தியா இடம்பெற்றது. அப்போது 180 நாடுகளில் இந்தியா 72ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு முதல் ஊழலை கணக்கிடுவது தொடர்பாக புதிய தொழில் நுட்ப முறைகள் கையாளப்பட்டன. இதன்படி, கடந்த ஆண்டு இருந்த நிலையை கணக்கிட்டால், நாம 96ஆவது இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்த ஆண்டு இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டுள்ளது எனலாம்.


தற்போது உலகிலேயே அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகள் என்ற இடத்தில் சோமாலியா, வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில், மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?



அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும்.


ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி நிறுவனங்களில் பயின்றால் உயர்ந்த வேலைக்கு சென்று விடலாம்.ஆனால், இவை பெரும்பாலும் சாமானிய மாணவர்களுக்கு எட்டுவதில்லை.


தமிழக வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் மட்டும் 2.50 லட்சம் பொறியாளர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். தவிர, கடந்த காலங்களில் என்ஜினியரிங் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த மாணவர்கள் பலர் தற்போது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.


தற்போதைய பாடத்திட்டத்தின்படி சிவில் இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தன்னிச்சையாக கட்டுமானப் பணியில் கோலோச்சி விடமுடியாது. முதலில் அவர்கள் கொத்தனார் அல்லது வேறு ஒரு என்ஜினியருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு தொழில் நுட்பங்களை பயின்ற பிறகுதான், தனக்கென தனி முகவரி தேட முடிகிறது.


உயர்கல்வி என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் செயல் விளக்கம் பெறவில்லை. வரும் 2020இல் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் 4.5 கோடி அளவில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் ஏற்பட போகின்றனவாம். அதற்கு இன்னும் ஏழு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றை நிரப்ப இப்போது இருக்கும் கல்வியின் தரத்தை வைத்து சர்வதேச அளவில் எப்படிப் போட்டியிட முடியும்?


இப்பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பாடத்திட்டம் கொண்டுவர தமிழக உயர்கல்வி மன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக, பல்கலை துணைவேந்தர்கள் கூட்டம் விரைவில் கூடுகிறது.


இதற்கு, மாணவர்களை அதிகம் தக்க வைத்திருக்கும் பல்கலைக்கழககள் சம்மதிக்குமா என்பதும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் ஒத்துழைக்குமா என்பதும் சந்தேகமே.


புரியாத பாடங்களை மனப்பாடம் செய்து பழக்கப்பட்டு விட்டோம். அப்போதும், மனதில் பதியாவில்லையெனில், குறை மாணவன் மீது மட்டும் தான் சுமத்தப்படுகிறது.


உயர்கல்வியின் நிலைமைதான் இப்படி என்றால், பள்ளிக் கல்வியின் நிலைமையோ மேலும் கீழுமாக இருக்கிறது. கூலித் தொழிலாளி மகனுக்கு சமச்சீர் கல்வி, அரசு பணியாளர் மகனுக்கு மெட்ரிக் கல்வி, தொழிலதிபர் மகனுக்கு சிபிஎஸ்இ கல்வி, அதற்கும் மேல் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்கு இன்டர்நேஷனல் கல்வி என்று விலைக்கு தகுந்தாற் போல கல்வியை பிரித்து வைத்திருக்கின்றனர்.


மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த கல்வியை கற்பதோடு மத்திய அரசின் ஒரு அமைப்பான என்சிஇஆர்டி வெளியிடும் புத்தகத்தையும் படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற முடியும். பல அரசு, தனியார் தேர்வுகளுக்கு நாம் பயிலும் பாடபுத்தகங்கள் பயன்படுவதே இல்லை. போட்டித் தேர்வுகள் தான் கல்வியின் தரத்தை தீர்மானிக்கிறது.


தற்போது மாணவர்கள் பயிலும் பாடபுத்தகங்களை விட மாணவர்களுக்கு எவ்வாறு கற்று கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக ஆசிரியர்கள் சுமக்கும் பாடபுத்தகங்கள் அதிகரித்து விட்டன. மேலும் யார் உருவாக்கிய பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்குவது என்ற போட்டியும் ஒருபுறம் நிலவுகிறது.


இதுதவிர, முன் மாதிரி பள்ளிகளும் ஆண்டுதோறும் திறக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் பின்தங்கிய இடத்தில் மட்டும் அரசு சார்பில் முன் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்வி மேம்பட்ட இடங்களிலும் இப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


காணும் இடமெங்கும் கல்விக்கூடங்கள். வெவ்வேறு விதமான பாடபுத்தகங்கள். சந்தேகத்தை அலசிக் கொள்ள இணையதளங்கள்.
ஆக, வீட்டிலோ, வகுப்புக்கு சென்றோ எப்படியும் பாடங்களை பயிலலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி மாணவர்களுக்கு வேண்டியது தரமான கல்வி, பள்ளியும், பாடப்புத்தகமும் அடங்கிய அதன் கட்டுமானம் மட்டுமல்ல. சர்வதேச அளவில் போட்டியிட நம்மவர்கள் தயாராக வேண்டும். இதுகுறித்து கல்வியாளர்கள் சிந்திப்பார்களா?

பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!




பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.


பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.


மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.


மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.


தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.


கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.


கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.


கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.


தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.


உடலுக்கு குளிர்ச்சி தரும்.


மலச்சிக்கலை நீக்கும்.


புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.


இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.


முகப்பொலிவு கூடும்.


சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.


பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.


பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.


பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.


பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.


பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.


பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.