Wednesday, December 4, 2013

நான் இன்னும் கன்னிப்பையன்(?)தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!



தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளர்.


பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் சல்மான் கான். மான்வேட்டை தொடங்கி அவர் ஆடாத வேட்டையே இல்லை எனலாம். அவர் குறித்த எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் பாலிவுட்டின் ஸ்வீட் ராஸ்கலாக சல்மான் இன்னும் கோலோச்சுகிறார்.


ஐஸ்வர்யா ராய் தொடங்கி சல்மானுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் அநேகம்பேர் உண்டு. அதிலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்த பின்னர் ஒருநாள் குடிபோதையில் ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு வெளியே நின்று சல்மான் கான் தகராறு செய்ததும், அதனைத் தொடர்ந்து தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத ஐஸ்வர்யா ராயின் தாயாரை கண்டபடி திட்டியும், ஐஸ்வர்யா ராயுடனான நெருக்கமான உறவுகள் பற்றியும் தொலைபேசியில் பேசி சண்டை போட்ட டெலிபோன் உரையாடல்கள்,  2006 ல் மும்பை பத்திரிகைகளில் எழுத்துவடிவில் பிரசுரிக்கப்பட்டு, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.


பாலிவுட் பிரபலங்களிடம் மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுவது குறித்த புகார் அதிகமாக வந்ததால், முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் தொலைபேசி உரையாடல்களை காவல்துறை ஒட்டுக்கேட்டது. அப்படி ஒட்டுக்கேட்டபோதுதான் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயுடன் பேசி சண்டைபோடும் உரையாடல்களும் பதிவாகி, அது வெளியே ஊடகங்களுக்கும் கசிந்துவிட்டது.


அந்த தொலைபேசி உரையாடல்கள் வெளியான பின்னர் சல்மான் கான் மீது பாலிவுட் வட்டாரத்தில் ஒருவித வில்லன் இமேஜே   உருவாகி விட்டது. இதனால் சிறிதுகாலம் தனது சினிமா உலக வாழ்க்கையில் சற்று சறுக்கலை சந்தித்தாலும், மீண்டும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இன்றும் பாலிவுட்டின் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் சல்மான் கான். அதே சமயம் அவருக்கும், முன்னணி நடிகைகளுக்கும் இடையேயான் கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.




இந்நிலையில் ஸ்டார் டி.வி.யில் வரும் 'காஃபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம்,கரண் ஜோகர் நடத்திய கல கல பேட்டியில் சல்மான் கான், தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும்  கூறியுள்ளர்.


அவர் இவ்வாறு கூறியதும் பேட்டி எடுத்த கரண் வியப்பு மேலிட, " அதாவது இன்னும் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதாக சொல்கிறீர்கள்... அப்படித்தானே..? " எனக் கேட்டதும், ஆமாம் என்று தலையை அசைக்கிறார் சல்மான்.


 "அப்படியானால் நீங்கள் பழகிய பெண்கள் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை?!" என்று கிரண் வெடி சிரிப்புடன் கேட்க, "அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள்...அவ்வளவுதான்!" எனக் கூறுகிறார் சல்மான்.


தொடர்ந்து பேசும் சல்மான், " இரவில் நான் தனிமையாக தூங்குவதையே விரும்புகிறேன்.ஸ்டூடியோக்களில் இரவில் தங்கினால் எனது படுக்கையில் யாரும் இல்லை என்பதை காட்டும்விதமாக சோபாவில் கால்களை விரித்தபடி தூங்குகிறேன்" என்று கூறுகிறார்.


அடுத்த கேள்விக்கு நகரும் கரண், 3 பாலிவுட்  நடிகைகளின் பெயர்களை கூறி, இவர்களில் யாரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு "ப்ரீத்தி ஜிந்தா!" என பதிலளிக்கிறார் சல்மான்.


 
தொடர்ந்து, "உங்கள் நெற்றிபொட்டில் யாராவது ஒருவர் துப்பாக்கியை வைத்து, ஒரு 'கே' (Gay) ஆணுடன் இருக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான், "இல்லை..முதலில் அப்படி ஒரு துப்பாக்கி எப்போதுமே செய்யப்படாது" என்று கூறிவிட்டு, பின்னர் அப்படி இருக்க வேண்டும் என்றால் கரணுடன் ( நிகழ்ச்சியை நடத்துபவர்) என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.



 "நீங்கள் விரும்புவது என்ன...விரும்பாதது என்ன..?" என்ற கேள்விக்கு, "பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை விரும்புகிறேன்; ஆனால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் இருப்பதை விரும்பவில்லை" என பதிலளித்துள்ளார் சல்மான். 

0 comments:

Post a Comment