Saturday, January 25, 2014

செல்போன் வெடித்து சிறுவன் படுகாயம்..!



சார்ஜ் போட்டுக்கிட்டே கேம்ஸ் விளையாடியபோது செல்போன் வெடிப்பு:- சிறுவன் படுகாயம

மத்திய பிரதேசத்தில் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே கேம்ஸ் விளையாடியபோது அது வெடித்ததில் 10 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள உதய் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிஹந்த்(10). அவர் நேற்று இரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு அதில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் திடீர் என்று வெடித்ததில் அவரது முகம் மற்றும் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில்,

அரிஹந்த் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். ஆனால் அவரது கையில் உள்ள விரல் ஒன்றில் ரத்த ஓட்டம் நின்றுவிட்டது. மீண்டும் ரத்த ஓட்டம் ஏற்படாவிட்டால் அவரது விரலை வெட்டி எடுக்க வேண்டி இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment