Thursday, January 23, 2014

விக்ரமனின் நினைத்தது யாரோ..!



தமிழ் சினிமாவில் அழகான குடும்பக் கதைகள் எடுப்பதில் கைதேர்ந்தவரான விக்ரமனின் நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரமனின் படங்கள் பெரும்பாலும் அமைதியும், பண்பும் நிறைந்த பாத்திரங்களால் சூழப்பட்டிருக்கும். மேலும் பெரும்பாலும் அவரது
பாத்திரங்கள் அனைத்துமே நல்லவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்.

இளைய தளபதி விஜயின் மெஹா ஹிட் படமான பூவே உனக்காக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சூர்ய வம்சம், கேப்டன் விஜயகாந்தின் வானத்தைப் போல, சூர்யாவின் உன்னை நினைத்து என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களை இயக்கியவர் விகரன்.

அதிரடி ஹிட் படங்களைக் கொடுத்துவந்த விக்ரமன் சமீபக் காலங்களில் அதிகப் படங்களை இயக்கவில்லை. அவரது இயக்கத்தில் கடந்த 2009ல் மரியாதை திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறையும் விக்ரம் ஹிட்டடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment