Sunday, December 22, 2013

“நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !...


“நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! அழாகான நகைகள்  ஆரோக்கியம் காக்குது!"  

நகைகள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் வர்ம சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்!   எனவே நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும்.  எனவே நலவாழ்வு நம் நகைகளில்!  என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள் தாக்காமல் தடுக்கலாம் என அறிவோம்.  இடுப்புக்கு மேலே தங்க நகைகளும்,  இடுப்புக்கு கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும்.  வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச் செய்யும்.


கண்கள் காக்கும் கம்மல் :-

காது குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது. காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும் போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம்.  இதனால் மன அமைதி கிடைக்கிறது.  மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட ஏதுவாகிறது.  எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன் வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப் படித்தியுள்ளார்கள்!


வாரம் இருமுறை எண்ணெய் குளியல் :-

 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.  திருமணமான தம்பதிகள்  இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.  சளி, தலைவலி,  உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும்.  



கண்கள், மூளைக்கு பலமூட்டும் கரிசலாங்கண்ணிக் கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும்.

 மாலைக் கண் நோயில் நீலியும்,  சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை பெறலாம்.

வியர்வை நாற்றம் போக...


குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

நலமான குழந்தை...


கருவில் இருக்கும் குழந்தைக்கு

தாயின் மனநிலையே .. சேயின் மனநிலை”

என்கின்றனர் சித்தர்கள்.

தாயின் சிறிய அதிர்வு கூட குழந்தையைப் பாதிக்கும்.

புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கருவிலே குழந்தையின் மனநிலை வளர்ச்சியடைகிறது என்பதை அறியலாம். அபிமன்யுவின் தாய் கிருஷ்ணனின் உபதேசத்தை நல்ல மனநிலையில் உட்கிரகித்ததால்தான் அபிமன்யு கருவிலே உபதேசம் பெற முடிந்தது.

நல்ல குழந்தைக்கு தாயின் மனநிலையே முக்கிய காரணமாகிறது.

தாய் உறங்கும் வேளையில் கூட கருவில் இருக்கும் குழந்தை வெளியுலக சஞ்சாரங்களை கிரகித்துக்கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் நல்ல வார்த்தைகளையும், மெல்லிய இசையையும் கேட்க வேண்டும் என்றும் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சமீப பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் கருவிலே குழந்தையின் உடல் மட்டுமின்றி, மனநிலையும் வளர்ச்சியடைவதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருப்பதை படித்திருப்பீர்கள்.

கருவிலிருந்து குழந்தைகளை நோயின்றி பாதுகாத்து வருவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். இதனால்தான் சித்தர்கள் கருவுற்ற தாய்க்கு பல கஷாய மருந்துகளைக் கண்டறிந்து சொன்னார்கள். இந்த கஷாயங்களை கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திற்கு எந்த கஷாயம் அருந்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினர். பழங்காலத்துப் பெண்கள் இந்த கஷாயங்களை அருந்தி பல குழந்தைகளை அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்தனர்.

தாயின் மனநிலை உடல் நிலை இரண்டுமே குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். கருவுற்ற பெண்களை இதனால்தான் தாய் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்தப் பெண் ஒரு ராணி போல் தாயாரால் பராமரிக்கப்படுகிறாள். கருவுறும் காலத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலை மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்க முடியும்.

 கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்? இந்த வளைகாப்பின்போது அந்தப் பெண்ணுக்கு அனைவரும் வளையல் அணிவித்து சந்தனம் பூசும்போதும், உற்றார் உறவினர் வாழ்த்தும்போதும் அவளது மனம் ஆனந்தமடையும். அப்போது உடலானது புத்துணர்வுபெறும். இதனால் குழந்தை கருவில் நன்றாக வளரும்.

கருவுற்ற பெண்கள் மனதில் தயக்கம், பயம், ஏக்கம் எதுவுமின்றி இருக்க வேண்டும்.

வேலை காரணமாக நகரங்களுக்கு வந்து தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள் கருவுற்ற காலத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது நல்லது. அப்போதுதான் அப்பெண்ணின் மனதில் தனக்கு போதிய பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவும், தேவையான ஓய்வும் வேண்டும்.

ஆனால் நவீன உலகில் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தங்களின் பொருளாதாரத் தேவையை எண்ணியே அலைகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது சிறிது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்...

அழகிய குறிப்புகள்...



   ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

· மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

· நீர் அருந்த வேண்டும். சீரகம் கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

· இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில் அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

· கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

· அதிகம் குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.

· முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

· வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

· முகத்தில் பருக்கள் தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.

· இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல் ஜொலிக்கும் .

· மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

· திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.

· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

· தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.