Sunday, December 22, 2013

“நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !...


“நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! அழாகான நகைகள்  ஆரோக்கியம் காக்குது!"  

நகைகள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் வர்ம சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்!   எனவே நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும்.  எனவே நலவாழ்வு நம் நகைகளில்!  என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள் தாக்காமல் தடுக்கலாம் என அறிவோம்.  இடுப்புக்கு மேலே தங்க நகைகளும்,  இடுப்புக்கு கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும்.  வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச் செய்யும்.


கண்கள் காக்கும் கம்மல் :-

காது குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது. காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும் போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம்.  இதனால் மன அமைதி கிடைக்கிறது.  மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட ஏதுவாகிறது.  எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன் வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப் படித்தியுள்ளார்கள்!


வாரம் இருமுறை எண்ணெய் குளியல் :-

 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.  திருமணமான தம்பதிகள்  இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.  சளி, தலைவலி,  உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும்.  



கண்கள், மூளைக்கு பலமூட்டும் கரிசலாங்கண்ணிக் கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும்.

 மாலைக் கண் நோயில் நீலியும்,  சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை பெறலாம்.

0 comments:

Post a Comment