Sunday, December 22, 2013

தசாவதாரம்


உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது....
அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வராதா?

அப்படியானால் நாம் அவற்றை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? பாசி... கொள்ளுத் தாத்தா, பூண்டோடு அழிந்துவிட்ட டினோஸர்கள்... எள்ளுத் தாத்தா, குரங்கு... பெரியப்பா, சிம்பன்ஸி வகைகள்... மனிதனின் சித்தப்பா என்றெல்லாம் டார்வின் அடுக்கியபோது பலருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், உண்மை அதுதான் என்று காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற��


டார்வினின் தியரி இப்படிப் போகிறது... ‘பூமியின் சூழ்நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவிடுகிறது. பூமியில் இருந்த உயிரினங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவந்தன. ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறை உயிரினம் தன அப்பா, அம்மாவின் குணங்கள் கொண்ட நூறு சதவிகித ஜெராக்ஸ் காப்பியாக இல்லாமல், அதன் தாய் & தந்தை சந்தித்த புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக குணத்திலும் உடல் அமைப்பிலும் மிகமிக நுட்பமான சில மாற்றங் களோடுதான் பிறக்கிறது. கால ஓட்டத்தில் புதிதுபுதிதாக எழும் இயற்கையின் சவால்களைத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் மடிந்து போகின்றன. அந்த புதிய சவால்களைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் புதிய உயிரினங்கள் உருவாகின்றன. லட்சக்கணக்கான வருஷங்கள்... ஆயிரக்கணக்கான தலைமுறைகள்... ஒவ்வொரு உயிரினமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தன. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு உயிரினத்துக்கு பிறந்த வாரிசு, அதேமாதிரி இல்லாமல் புதிய இனமாக தலை எடுத்தது.

பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான் என்பது டார்வின் கட்சி! காலப்போக்கில், அறிவியல்ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம் உடலில் இருக்கும் அதே போன்ற மரபணுக்கள்தான் பாக்டீரியா, பாசிகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன. ‘அப்படின்னா எல்லாரும் பங்காளிங்கதான். முதன்முதலாக ஆழ்கடலில் எட்டிப்பார்த்த நீலப்பச்சைப் பாசிதான் நமக்கு மூதாதையர். அது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கியது. இப்படித்தான் படிப்படியாக உயிர்கள் தோன்றுவது நிகழ்ந்தது’ என்றார் டார்வின்.

 அந்த ஒற்றை நீலப்பச்சைப் பாசியிலிருந்துதான் சகல உயிரினங்களும் தோன்றியதாக வைத்துக் கொள்வோம். அந்த முதல் பாசி எங்கிருந்து வந்தது ?. உயிர்கள் எதுவுமே இல்லாத சூழலில் அதன் வருகை எப்படி நிகழ்ந்தது ? அது எப்படி பெருகியது ? அதிலிருந்து விலங்கினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?’ என அடுக்கடுக்கான கேள்விகள். எழுந்தது .பல நிபுணர்கள் ஒவ்வொரு தியரியாக சொன்னார்கள் ஆனால், கடைசியில் ஓபாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்னதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘வானத்திலிருந்து வந்த மின்னல், கடலுக்கடியில் சில ரசாயன மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக உயிர்களின் அடிப்படைப் பொருட்களான மூலக்கூறுகள் கிளம்பின. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது’’ என்றார் அவர்.

பிற்பாடு சிகாகோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி மில்லர், 1953ஆம் ஆண்டு இந்த தத்துவம் உண்மை என்று நிரூபித்தும் காட்டினார். மூடிய ஒரு குடுவயில் ஆதிக்காலத்தில் கடல் இருந்த சூழ்நிலையை உருவாக்கி, மின்சாரத்தின் மூலம் செயற்கை மின்னல அந்த குடுவைக்குள் ஏற்படுத்தினார். அதன் விளைவாக செயற்கைக் கடலின் அடியில் உயிர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. கவனிக்கவும்! சூழ்நிலைதான் ஏற்பட்டது! புதிய உயிரே தோன்றிவிடவில்லை. அது மனிதனால் ஆகக்கூடிய காரியமும் இல்லை!.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய மொத்த வரலாற்றையும் சுருக்கி ஒரு வருஷம் என்கிற கற்பனை காலண்டருக்குள் அடைத்தால், பாசி தோன்றியது ஜனவரி முதல் தேதி... மனிதன் தோன்றியது டிசம்பர் முப்பத்தோறாம் தேதி! அதாவது அவன்தான் கடைசிக் குழந்தை | இப்போதுள்ள உயிர்களிலேயே பரிபூரணமான குழந்தை!

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் சிரிப்பீர்கள். எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

முதலில் ஒரு செல்லிலிருந்து கடலில் தோன்றிய முதல் உயிரினம் மீன் என்றால் இது மச்சாவதாரம். பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, தவளை போன்றவை தோன்றியது - இது கூர்மாவதாரம். அதன் பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரனமாக (பன்றி) வராகவதாரம். பின் நான்காவதாக மனிதனுமின்றி, மிருகமுமின்றி நரசிங்காவதாரம். ஐந்தாவதாக ஒரு குள்ளமனிதனாக வாமனாவதாரம். ( இதற்கு பிறகு வருவோம்). ஆறாவதாக, மனிதன் கொஞ்சம் விலங்குகளின் தன்மையுடன் கூடிய பரசுராமாவதாரம். ஏழாவதாக முழுமனிதனாக இராமாவதாரம். எட்டாவதாக குறும்பு செய்யும் மனிதனாக கிருஷ்ணாவதாரம். ஒன்பதாவது விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமவதாரம்.

டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். மீனில் ஆரம்பித்து 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். நான்கு அவதாரங்களை அடுத்து விடுபட்ட இந்த குள்ளமான வாமன அவதாரம்தான் - ''மிஸ்ஸிங் லிங்க்'' என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.

சமீபத்தில் அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானிகள் குள்ள மனிதனின் எலும்புக்கூடுகளை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மனிதனின் உயரம் மூன்று வயது குழந்தையின் உயரம். இவர்கள் மண்டை ஓடுகள் ஒரு சாத்துக்குடி அளவே இருப்பதாக படங்கள் காட்டுகிறது. இந்த மனிதன் 18,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் கல்லினாலான ஆயுதங்கள், மற்றும் மிருகங்களின் எலும்புகூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதனுக்கு Hobbit என்று பெயர் வைத்துள்ளார்கள். (Lord of the Rings என்ற படத்தில் வரும் குள்ள மனிதனின் பெயர் )

0 comments:

Post a Comment