Sunday, December 22, 2013

மதுபானத்தை விட குளிர்பானம் ஆபத்துங்க...



“மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்!’ சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், “ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட, 85 சதவீத வாய்ப்பு உள்ளது.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற “ப்ரக்டோஸ்’ சத்துள்ள ஜூஸ்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரிடம், “இன்டர்நெட்’ மூலம் சர்வே நடத்தப்பட்டது. அவர்களில் பலரும் 12 ஆண்டுக்கு மேல், குளிர்பானம் குடித்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் பழக்க வழக்கம், உடல் நிலையை வைத்துத் தான் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment