Sunday, December 22, 2013

யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே - சிந்தனைத்துளி


சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமல் போனதையும் தான்காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.

- விவேகானந்தர்.

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.

-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.

- வால்ட் விட்மல்

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

- விவேகானந்தர்.


மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி

- சீன அறிஞர் கன்பூசியஸ்


“வேதனையைத் தாங்கி
பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”

- தாகூர்

0 comments:

Post a Comment