Sunday, December 22, 2013

சிக்கனமாய் இருப்பவரா நீங்கள்?


இந்த பொருளாதார நெருக்கடியில் மில்லியன்களில் புழங்கும் பன்னாட்டு நிறுவனங்களே தள்ளாடுகின்றன...மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள் பாடு திண்டாட்டம்தான்...பணக்காரனாய் இருந்தாலும் சரி, அன்றாடங்காய்ச்சியாய் இருந்தாலும் சரி, அனாவசிய செலவுகளை,ஆடம்பர செலவுகளை குறைத்தால் நிம்மதியாய் வாழலாம்.

முதலாவதாக அடிக்கடி கடைகளுக்குச் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மளிகை சாமான், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் இப்படி என்னவாக இருந்தாலும் மாதம் ஒரு முறை திட்டமிட்டு ஒரே நாளில் உங்கள் ஷாப்பிங்கை முடியுங்கள்.. அதற்காக முழு கடையையும் உங்கள் வீட்டுக்கே தூக்கிச் செல்லும் அளவிற்கு பொருட்களை வாங்கி குவித்து விடாதீர்கள்...என்னென்ன சாமான்கள் வேண்டும் என்பதை நிதானமாக யோசித்து வீட்டிலேயே ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டு செல்லுங்கள்...இம்பல்ஸிவ் பையர்-ஆகாமல், உங்களுக்கு தேவையான பொருட்களை "மட்டும்" வாங்குங்கள்.

இதனால் அலைச்சல் மிச்சம்..எரிபொருள் மிச்சம்..முக்கியமாக "பணம்" மிச்சம்!!!

நீங்கள் எப்படி சிக்கனத்தைப் பேணுகிறீர்கள்?

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் !!!!! 

0 comments:

Post a Comment