Friday, January 24, 2014

முத்தத்தால் விதார்த்தை கிரங்கடித்த மனிஷா..!



ஒரு பாடல் முழுக்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்துள்ளாராம் மனிஷா யாதவ்.

விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’.

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இயக்குனர் கூறுகையில், பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் விதார்த் ஓட்டுனராகவும், சூரி நடத்துனராகவும் வருகிறார்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா-சந்தானம் ஜோடி போல், இந்த படத்திலும் விதார்த்-சூரி ஜோடி படம் முழுக்க வருகிறார்கள்.

முழுக்க முழுக்க கொமடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் முழுக்க நாயகி, நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளோம் என்றும் இந்த பாடலில் நடிக்க மனிஷா யாதவ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

நடிகையின் கவர்ச்சிக்கா..! ரூ.80 லட்சம் செலவு..! எஸ்.ஜே.சூர்யா



எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதியில் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் சூர்யா.

ஒரு சர்ச் மற்றும் 40 வீடுகள் அடங்கிய ஒரு குட்டி கிராமத்தையே செட் போட்டு உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். மிகக்கவர்ச்சியான ரொமாண்டிக் காட்சியில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாம்.

நடிகை சாவித்திரி ஒரு புதுமுகம் போல இல்லாமல் படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் வெளிவந்தவுடன், சாவித்திரி, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என கூறியுள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆவதால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

நடிக்க வந்துவிட்டார் இசைப்புயல்..!



நடிப்பதற்கு அவதாரம் எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அலியா பட், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் படகா கட்டி என்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் இம்தியாஸ் அலி, அதில் ரகுமானை பாடலுக்கு ஏற்ப நடிக்க வைத்து உள்ளாராம். இதை ரகுமானே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கோலி சோடா திரை விமர்சனம்..!




தனக்கென எந்த அடையாளமும் இல்லாது… ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா…

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்….

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு… தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்…

இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்… (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)… மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்…

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்… என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்…. நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்…

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர… அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது….

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்…

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்… ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்…

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்…

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா… தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்… அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்….

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்… முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்… பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது…

இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்… நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ் பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்… கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்… பாராட்டலாம்…

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது…. ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்…

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்து விளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்…

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்… பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது…

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து… அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று… கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்….!