Friday, January 24, 2014

நடிகையின் கவர்ச்சிக்கா..! ரூ.80 லட்சம் செலவு..! எஸ்.ஜே.சூர்யா



எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதியில் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் சூர்யா.

ஒரு சர்ச் மற்றும் 40 வீடுகள் அடங்கிய ஒரு குட்டி கிராமத்தையே செட் போட்டு உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். மிகக்கவர்ச்சியான ரொமாண்டிக் காட்சியில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாம்.

நடிகை சாவித்திரி ஒரு புதுமுகம் போல இல்லாமல் படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் வெளிவந்தவுடன், சாவித்திரி, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என கூறியுள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆவதால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment