Wednesday, December 4, 2013

ஏமாத்தினாங்க…அதான் படம் ஓடலை…‘நய்யாண்டி’ பற்றி நஸ்ரியா…



நய்யாண்டி’ என்றாலே தனுஷ் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ கண்டிப்பாக நஸ்ரியா ஞாபகத்திற்கு வருவார்.


அந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த புகழுக்காக அல்ல, அந்த படத்தின் இயக்குனர் மீது அளித்த புகாருக்காக, என்பதுதான் முக்கியம்.


மழை  விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். அது போல ‘நய்யாண்டி’ படப் பிரச்சனை முடிந்தும் நஸ்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


‘‘நய்யாண்டி’  படத்தில் நம்பிக்கை மோசடி செய்து விட்டார்கள். படத்தில் நடிக்க சம்மதிப்பதற்கு முன்பே ‘இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்’ என அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால், என்னை  ஏமாற்றி, ‘டூப்’ மூலம் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ‘நய்யாண்டி’யில் எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி.


இப்படியெல்லாம் சீட்டிங் பண்ணாம இருந்திருந்தாங்கன்னா, படம் நல்லா வந்திருக்குமோ என்னமோ, ” என்று பேட்டியளித்திருக்கிறார்.


எப்படியோ படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் நஸ்ரியாவுக்கு தமிழ்நாட்டுல நயா பைசா செலவில்லாம நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சி….

ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!



ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா இந்த ஆண்டும் 94ஆவது இடத்தில் உள்ளது.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் 177 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஊழலே இல்லாத நாடுகளில் இருந்து ஆரம்பித்து ஊழல் நிறைந்தவை என நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில்தான் இந்தியா 94ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.


 ஊழல் வரிசை நாடுகள் பட்டியலில் முதல் முறையாக 2007ஆம் ஆண்டில் இந்தியா இடம்பெற்றது. அப்போது 180 நாடுகளில் இந்தியா 72ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு முதல் ஊழலை கணக்கிடுவது தொடர்பாக புதிய தொழில் நுட்ப முறைகள் கையாளப்பட்டன. இதன்படி, கடந்த ஆண்டு இருந்த நிலையை கணக்கிட்டால், நாம 96ஆவது இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்த ஆண்டு இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டுள்ளது எனலாம்.


தற்போது உலகிலேயே அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகள் என்ற இடத்தில் சோமாலியா, வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில், மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?



அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும்.


ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி நிறுவனங்களில் பயின்றால் உயர்ந்த வேலைக்கு சென்று விடலாம்.ஆனால், இவை பெரும்பாலும் சாமானிய மாணவர்களுக்கு எட்டுவதில்லை.


தமிழக வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் மட்டும் 2.50 லட்சம் பொறியாளர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். தவிர, கடந்த காலங்களில் என்ஜினியரிங் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த மாணவர்கள் பலர் தற்போது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.


தற்போதைய பாடத்திட்டத்தின்படி சிவில் இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தன்னிச்சையாக கட்டுமானப் பணியில் கோலோச்சி விடமுடியாது. முதலில் அவர்கள் கொத்தனார் அல்லது வேறு ஒரு என்ஜினியருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு தொழில் நுட்பங்களை பயின்ற பிறகுதான், தனக்கென தனி முகவரி தேட முடிகிறது.


உயர்கல்வி என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் செயல் விளக்கம் பெறவில்லை. வரும் 2020இல் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் 4.5 கோடி அளவில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் ஏற்பட போகின்றனவாம். அதற்கு இன்னும் ஏழு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றை நிரப்ப இப்போது இருக்கும் கல்வியின் தரத்தை வைத்து சர்வதேச அளவில் எப்படிப் போட்டியிட முடியும்?


இப்பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பாடத்திட்டம் கொண்டுவர தமிழக உயர்கல்வி மன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக, பல்கலை துணைவேந்தர்கள் கூட்டம் விரைவில் கூடுகிறது.


இதற்கு, மாணவர்களை அதிகம் தக்க வைத்திருக்கும் பல்கலைக்கழககள் சம்மதிக்குமா என்பதும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் ஒத்துழைக்குமா என்பதும் சந்தேகமே.


புரியாத பாடங்களை மனப்பாடம் செய்து பழக்கப்பட்டு விட்டோம். அப்போதும், மனதில் பதியாவில்லையெனில், குறை மாணவன் மீது மட்டும் தான் சுமத்தப்படுகிறது.


உயர்கல்வியின் நிலைமைதான் இப்படி என்றால், பள்ளிக் கல்வியின் நிலைமையோ மேலும் கீழுமாக இருக்கிறது. கூலித் தொழிலாளி மகனுக்கு சமச்சீர் கல்வி, அரசு பணியாளர் மகனுக்கு மெட்ரிக் கல்வி, தொழிலதிபர் மகனுக்கு சிபிஎஸ்இ கல்வி, அதற்கும் மேல் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்கு இன்டர்நேஷனல் கல்வி என்று விலைக்கு தகுந்தாற் போல கல்வியை பிரித்து வைத்திருக்கின்றனர்.


மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த கல்வியை கற்பதோடு மத்திய அரசின் ஒரு அமைப்பான என்சிஇஆர்டி வெளியிடும் புத்தகத்தையும் படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற முடியும். பல அரசு, தனியார் தேர்வுகளுக்கு நாம் பயிலும் பாடபுத்தகங்கள் பயன்படுவதே இல்லை. போட்டித் தேர்வுகள் தான் கல்வியின் தரத்தை தீர்மானிக்கிறது.


தற்போது மாணவர்கள் பயிலும் பாடபுத்தகங்களை விட மாணவர்களுக்கு எவ்வாறு கற்று கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக ஆசிரியர்கள் சுமக்கும் பாடபுத்தகங்கள் அதிகரித்து விட்டன. மேலும் யார் உருவாக்கிய பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்குவது என்ற போட்டியும் ஒருபுறம் நிலவுகிறது.


இதுதவிர, முன் மாதிரி பள்ளிகளும் ஆண்டுதோறும் திறக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் பின்தங்கிய இடத்தில் மட்டும் அரசு சார்பில் முன் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்வி மேம்பட்ட இடங்களிலும் இப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


காணும் இடமெங்கும் கல்விக்கூடங்கள். வெவ்வேறு விதமான பாடபுத்தகங்கள். சந்தேகத்தை அலசிக் கொள்ள இணையதளங்கள்.
ஆக, வீட்டிலோ, வகுப்புக்கு சென்றோ எப்படியும் பாடங்களை பயிலலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி மாணவர்களுக்கு வேண்டியது தரமான கல்வி, பள்ளியும், பாடப்புத்தகமும் அடங்கிய அதன் கட்டுமானம் மட்டுமல்ல. சர்வதேச அளவில் போட்டியிட நம்மவர்கள் தயாராக வேண்டும். இதுகுறித்து கல்வியாளர்கள் சிந்திப்பார்களா?

பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!




பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.


பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.


மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.


மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.


தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.


கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.


கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.


கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.


தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.


உடலுக்கு குளிர்ச்சி தரும்.


மலச்சிக்கலை நீக்கும்.


புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.


இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.


முகப்பொலிவு கூடும்.


சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.


பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.


பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.


பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.


பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.


பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.


பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.