Tuesday, December 3, 2013

பொன்மொழிகள்!


* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.


—தாமஸ். 



 * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி


. —லெனின். 



 * பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்
.

—டொனால்டு. 



 * வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும்.


—பிராங்க்ளின். 



 * தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.


 — போவீ. 



 * வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.


—அரிஸ்டாட்டில். 



 * உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும்.


 —சாக்ரடீஸ். 



 * உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள்.


—செஸ்டர்பீல்டு. 



 * பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.


 —ஈசாப். 



 * கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.


—ஹென்றி.

0 comments:

Post a Comment