Tuesday, December 3, 2013

வெங்கட்பிரபுவுடன் இணையும் சூர்யா!



'மங்காத்தா' படம் முடிந்ததும் சூர்யாவிடம் கதை சொன்னார் வெங்கட்பிரபு.


ஆனால், அப்போது சூர்யாவால் வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க முடியவில்லை.


'மாற்றான்', 'சிங்கம் 2', படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா.


அதற்குப் பிறகே, கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் 'பிரியாணி' யை உருவாக்கினார்.


இப்போது மீண்டும் சூர்யாவை சந்தித்து ஒன்லைன் சொன்னாராம், வெங்கட்பிரபு.


அந்த ஒன்லைன் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.


''முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. ஏப்ரல்ல ஷூட்டிங் தொடங்கிடலாம்'' என்று சூர்யா உறுதியாக சொன்னதால், உற்சாகத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு.


சூர்யா புதியதாக ஆரம்பித்துள்ள டி2 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. 

0 comments:

Post a Comment