Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, January 26, 2014

உலக நாயகன் கமல்ஹாசன் பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்..!



உலக நாயகன் பதம்ஸ்ரீ கமல்ஹாசன் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்களைப் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவினை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டிற்கான பத்மபூசன் மற்றும் பத்ம விபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை பத்ம விருதுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக மதிக்கப்படும் பதம் விபூசன் விருதினை உலக நாயகன் கமல்ஹாசன் பெறவுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1990 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. பதம்ஸ்ரீ விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தையும், பத்ம விபூசன் விருதுகள் இரண்டாவது இடத்தையும், பாரத ரத்னா முதல் இடத்தையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!



இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

மீண்டும் இணைகிறதா வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி..!



கடந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
மீண்டும் ஒரு படம் தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷின் முன்னாள் உதவி இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப்படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் அறிமுகமான நாயகியான ஸ்ரீதிவ்யா தற்பொழுது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகப் பரிணமித்துவருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
ஒரு படம் தயாரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது. விரைவில் இப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா..!



எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

 ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்...! சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி..!



சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

 தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.

 பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.

Saturday, January 25, 2014

செல்போன் வெடித்து சிறுவன் படுகாயம்..!



சார்ஜ் போட்டுக்கிட்டே கேம்ஸ் விளையாடியபோது செல்போன் வெடிப்பு:- சிறுவன் படுகாயம

மத்திய பிரதேசத்தில் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே கேம்ஸ் விளையாடியபோது அது வெடித்ததில் 10 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள உதய் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிஹந்த்(10). அவர் நேற்று இரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு அதில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் திடீர் என்று வெடித்ததில் அவரது முகம் மற்றும் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில்,

அரிஹந்த் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். ஆனால் அவரது கையில் உள்ள விரல் ஒன்றில் ரத்த ஓட்டம் நின்றுவிட்டது. மீண்டும் ரத்த ஓட்டம் ஏற்படாவிட்டால் அவரது விரலை வெட்டி எடுக்க வேண்டி இருக்கும் என்றார்.

எஸ்.ஜே.சூர்யாவின் அஜித் ராசி..!



அஜித்தின் பிறந்த நாள் அன்று ‘இசை’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் படம் 'இசை'.
கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே இசை அமைக்கிறார். படத்தினை வருகிற மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

மே 1-க்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ஒரு ராசி உண்டு. எஸ்.ஜே. சூர்யா, அஜித்தை வைத்து முதன் முதலாக இயக்கிய ‘வாலி’ படம் 1999ம் ஆண்டு மே 1ம் தேதி ரிலீசாகி தான் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த சென்டிமென்ட்டில் தான் ‘இசை’யை மே 1ம் தேதிரிலீஸ் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி - இன்று தொடங்கியது..!

‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி - நியூயார்க் நகரில் தொடங்கியது..!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் கூறுகையில்,ஓம், யோகா என்பது மனம் நிர்வாணத்தை நோக்கி பயணம் செய்யும் ஒரு ஆன்மீக பயணமாகும்.

 இன்றைய நவீன உலகில் இருபாலரும், ஈர்ப்பின் சக்தி வழியாக யோகாவில் பயணம் செய்து ஆன்மீக பரவசத்தை அடைய முடியும்.இதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் வகையில் புதிய பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடையாது. பயிற்சியின் போது தங்களது தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”என்று அவர்கள் தெரிவித்தனர்

யோகா என்கிற உடல் மற்றும் மனப்பயிற்சி கலைக்கு தாயகம் இந்தியா. தற்போது யோகா, புத்த மதத்தின் வழியாக பல்வேறு நாடுகளுக்கும், பல்வேறு வடிவங்களிலும் பரவியுள்ளது. மேலும் யோகாவை கற்பிக்கும் மரபுவழி பள்ளிகளும் ஏராளமாக ஆசிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.

மேற்கத்திய நாட்டு மக்களும் யோகாவை பயில ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதைய வேகமான நவீன உலகத்தில் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கே கொடுக்கக் கூடிய கலையாக மேற்கு உலகில் யோகா கொடிக்கட்டி பறக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டாலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்டு என்ற பெயரில் யோகா மையம் நடத்தி வரும் ஜோசி ஸ்வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து, நியுயார்க் நகரில் முதல் முறையாக ஆண் பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர். இதற்கு நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்க்து. .

பிலிம்பேர் விருதுகள் - சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்..!




பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபேல் சிறந்த படமாக பாக் மில்கா பாக் படம் தேர்வு பெற்றுள்ளது. சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஞ்சனா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.



 
பிலிம்பேர் விருதுகள் வருமாறு:

  • சிறந்த நடிகர்- பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
  • சிறந்த நடிகை- தீபிகா படுகோனே (ராம் லீலா)
  • சிறந்த இயக்குனர்- ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)
  • சிறந்த படம் – பாக் மில்கா பாக்
  • சிறந்த அறிமுக இயக்குனர் – ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்)
  • சிறந்த அறிமுக நாயகன் – தனுஷ் (ராஞ்சனா)
  • சிறந்த அறிமுக நாயகி – வாணி கபூர் (ஷுத்த தேசி ரொமான்ஸ்)
  • சிறந்த கதை-சுபாஷ் கபூர் (ஜோலி எல்எல்பி)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – தனுஜா
  • சிறந்த இசை – ஜீத் கங்குலி, மிதூன் மற்றும் அங்கிட் திவாரி (ஆஷிக்கி-2)
  • சிறந்த பாடல் – பிரசூன் ஜோஷி (ஜிந்தா)
  • சிறந்த பின்னணி பாடகர் – ஆரிஜித் சிங் (தும் ஹி ஹோ, ஆஷிக்கி)
  • சிறந்த பின்னணி பாடகி – மோனாலி தாக்கூர் (சவார் லூன், லூத்தேரா)

Friday, January 24, 2014

முத்தத்தால் விதார்த்தை கிரங்கடித்த மனிஷா..!



ஒரு பாடல் முழுக்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்துள்ளாராம் மனிஷா யாதவ்.

விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’.

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இயக்குனர் கூறுகையில், பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் விதார்த் ஓட்டுனராகவும், சூரி நடத்துனராகவும் வருகிறார்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா-சந்தானம் ஜோடி போல், இந்த படத்திலும் விதார்த்-சூரி ஜோடி படம் முழுக்க வருகிறார்கள்.

முழுக்க முழுக்க கொமடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் முழுக்க நாயகி, நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளோம் என்றும் இந்த பாடலில் நடிக்க மனிஷா யாதவ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

நடிகையின் கவர்ச்சிக்கா..! ரூ.80 லட்சம் செலவு..! எஸ்.ஜே.சூர்யா



எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதியில் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் சூர்யா.

ஒரு சர்ச் மற்றும் 40 வீடுகள் அடங்கிய ஒரு குட்டி கிராமத்தையே செட் போட்டு உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். மிகக்கவர்ச்சியான ரொமாண்டிக் காட்சியில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாம்.

நடிகை சாவித்திரி ஒரு புதுமுகம் போல இல்லாமல் படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் வெளிவந்தவுடன், சாவித்திரி, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என கூறியுள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆவதால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

நடிக்க வந்துவிட்டார் இசைப்புயல்..!



நடிப்பதற்கு அவதாரம் எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அலியா பட், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் படகா கட்டி என்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் இம்தியாஸ் அலி, அதில் ரகுமானை பாடலுக்கு ஏற்ப நடிக்க வைத்து உள்ளாராம். இதை ரகுமானே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கோலி சோடா திரை விமர்சனம்..!




தனக்கென எந்த அடையாளமும் இல்லாது… ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா…

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்….

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு… தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்…

இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்… (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)… மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்…

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்… என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்…. நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்…

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர… அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது….

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்…

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்… ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்…

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்…

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா… தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்… அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்….

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்… முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்… பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது…

இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்… நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ் பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்… கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்… பாராட்டலாம்…

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது…. ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்…

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்து விளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்…

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்… பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது…

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து… அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று… கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்….!

பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய அதிர்ச்சி தகவல் ..!



”நாட்டிலேயே பல் மருத்துவமனையில் அதிகமாக புறநோயாளிகள் வருவது தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். தினமும் 800 முதல் 1500 புறநோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 2007-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.85 லட்சமாக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 3.53 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கென்று புதிய கட்டடங்கள் திறந்த பின்பு புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல் வலி, ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் பலமிழந்து ஆடுதல், கடினமான பொருட்களை மென்று சாப்பிட முடியாமை, பல்லடிச் சீழ் போன்றவை பல் வலி, சொத்தைப் பல் வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். வாயில் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் வேறு பல நோய்களின் காரணமாகவும் பல் வலி உருவாகலாம்.

மேலும் ஆரம்பகால சொத்தை பற்களை கவனிக்காமல் விட்டால் அது அந்த பற்களின் நரம்பு வரை சென்று நமக்கு வலி கொடுக்கிறது. அதனால் ஆரம்ப கால சொத்தையை அலட்சியப்படுத்தாமல், உடனே அதை டாக்டரிடம் சென்று அடைத்துக் கொள்ளலாம். அப்படி ஆரம்பத்திலேயே அடைத்து சரி செய்து கொண்டால் அந்த சொத்தை மேற்கொண்டு பரவுவதை தவிர்க்கலாம்.

* சரி இப்போது நரம்பு வரை பரவி வலி கொடுக்கிறது என்ன செய்யலாம்?

ஆரம்பகாலத்தில் வலி என்றாலே பற்களை பிடுங்கி விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லை. சொத்தை நரம்பு வரை பரவினால்தான் வலி ஏற்படும் அப்படி பரவிய சொத்தையும் வேர் சிகிச்சை செய்து அந்த பல்லை காப்பாற்றிக் கொள்ளலாம் தயவு செய்து பற்களை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துவிடாதீர்கள் அப்படியும் எடுக்க நேர்ந்தால் எடுத்த பற்களை 15 நாட்களிளோ அல்லது ஒரு மாதத்திலோ புதிய பல் கட்டி விட வேண்டும். இல்லையென்றால், மேல் பல் எடுத்து கட்டாவிட்டால் கீழ் பல் மேலே ஏறி அது இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து அதுவும் உபாதைகளை ஏற்படுத்தும். அதே போல் கீழ் பல் எடுத்து கட்டாமல் விட்டால் மேல் பல் கீழே இற்ங்கி விடும்.

*சொத்தை இல்லாமலும் வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன?


சிலருக்கு சொத்தை இருக்காது. ஆனால் இந்த பல் மட்டும் வலி கொடுக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் வலி உண்டாக்கும். இப்படி இருக்கும் பற்களை அடைத்தோ அல்லது வேர் சிகிச்சை செய்து சரி செய்யலாம். பிரஷ் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். நீண்ட நேரம் துலக்க வேண்டாம். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் தேய்த்தால் போதும், இதைக் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* ஈர்களில் தொந்தரவு இருந்தாலும் வலி வருமா?

நம் ஈர்களில் கேல்குலஸ் என்னும் சுண்ணாம்புப் போல் துகள்கள் சேர்ந்து விடும். இது மிகவும் கடினமாக இருக்கும் இதை பிரஷ் வைத்து தேய்த்தாலும் சுத்தப்படுத்த முடியாது இது அனைவருக்கும் ஏற்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒறுமுறை பல் டாக்டரிடம் சென்று சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்படி சுத்தப்படுத்தாமல் விட்டால் அவை ஈர்களை அரித்து எலும்புவரைச் சென்று பற்களில் வலி ஏற்படுத்தி, பின்னர் பற்கள் ஆடி தானாகவே விழுந்து விடும் அல்லது எடுக்கும்படி ஆகிவிடும். நீண்ட நாள் புண் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

* 19 வயதிலிருந்து 25 வயதிற்குள் மூன்றாவது கடாபல் முளைக்கும். அது வலி தருமா?
19 வயதில் மூன்றாவது கடாபல் முளைக்கும் போது அந்த பல் வருவதற்கான போதுமான இடம் இல்லாததாலும் மிகவும் கஷ்டப்பட்டு முளைப்பதாலும் அந்த இடமே வீங்கி வலி ஏற்படும். அதை டாக்டரிடம் காண்பித்து அந்த பல் சரியான திசையில் இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சரியாக இருக்கிறது பல் வந்து விடும் என்றால் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும். அப்படி சரியாக முளைக்கவில்லை எக்ஸ்ரேவில் பல் சாய்ந்தோ, படுத்தோ இருந்தால் அதை ஒரு சின்ன அறுவை சிகிச்சை மூலமாகத்தான் அந்த பல்லை எடுக்க வேண்டும்.

* ஈரில் கட்டிகள் ஏற்படுவதால் வலி வருமா?

ஈரில் கட்டிகள் ஏற்பட்டு வீங்கி வலி தரும். இது பல்வேறு காரணங்களால் கட்டி வருகிறது முக்கியமான காரணம் முற்பற்கள் எந்த காரணத்தாலோ சிறுவயதில் அடிப்பட்டிருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் பல் வேர்களை சுற்றி இருக்கும் நார் போன்ற தசைகள் கிழிந்து அதன் மூலம் வீக்கம் வலி ஈர்களில் கட்டி வேர் நுனியில் கட்டி ஏற்படும் இதையும் வேர் சிகிச்சை மூலமாக சரி செய்யலாம்.

கைப்பக்குவ மருந்தாக வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். ஓரிரு கற்பூரவல்லி இலைகளையும், துளசியையும் நன்றாக மென்று வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ளலாம். சித்த மருத்துவ மருந்தாக இரண்டு துளி கிராம்பு தைலத்தை பஞ்சில் தோய்த்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். 3 முதல் 5 துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு தம்ளர் வெந்நீரில் 10 துளி சுக்கு தைலத்தை கலந்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும். தினமும் கல்நார் பற்பொடி கொண்டு பல் துலக்கலாம்.

பற்கள் அதிகமாக அரிக்கப்பட்டு இருந்தால் பல் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். பல் வலி ஏற்பட்டால் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினமும் 2 வேளை பல் துலக்கி ஈறுகளை விரல் கொண்டு தேய்த்து விடுவதும், ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதும் மருத்துவ அறிவுரை ஆகும். பல் துலக்குவதற்கு ஆலமரம், அரசு, வேம்பு மரங்களின் குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.

உதயநிதியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..!



இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்து நடிக்கும்  படம் “நண்பேன் டா”. இப்படத்தை இயக்குபவர் ஏ.ஜெகதீஷ் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான சிஷ்யனும் கூட, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஜெகதீஷ் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகி உடனே ஓகே சொல்லியுள்ளார் உதய். இது கதிர் வேலன் காதல் படத்திலேயே உதய்- நயன்தார ஜோடி பொருத்தும் மிக அழகாக வந்து உள்ளதால் இப் படத்திலும் இதே ஜோடி தொடர்கிறது.

வழக்கம் போல் சந்தானமும் காமெடியில் கலக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் இது ஒரு முற்றிலும் ஜனரஞ்சகமான  பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார் .

லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி..!




தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சந்தையியல் மேலாளர்

கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க                  வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தமன்னா அடுத்த ரவுண்டுக்கு ரெடி..!



இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றி மட்டுமே ஒருவரின் நிலையை நிலைநிறுத்தாவும் அல்லது தூக்கி விசவும் செய்கிறது. இந்த நிலை கதாநாயகிக்கு தவிர மற்ற எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்

கதாநாயகிகளுக்கு வெற்றி காற்று இங்கு வீசவில்லை என்றதும் மற்ற மொழி படங்களில் காத்து வாங்க செல்வது வழக்கம் . அது போல் தமன்னாவின் கடைசி சில படங்கள் இங்கு பெட்டியை காலி செய்ய மற்ற மொழி படங்களில் காற்று வாங்க சென்று விட்டார் .

அவரின் போறதா காலம் அங்கும் சில சறுக்கல்கள் சந்தித்தார். என்ன செய்வது என்று திணறிய தமன்னாவுக்கு சிவாவின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததால் தமன்னா இதில் பொருத்தமாக இருப்பர் என்று எண்ணி தலையிடம் சிபாரிசு செய்தார்கள். அவரும் ஓகே சொல்ல ஏக குஷியனர் தமன்னா.

வீரம் படத்தின் வெற்றி அவரோடைய அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளது என்று சொல்ல வேண்டும். அதுவும் வீரம் படத்தில் கதாநாயகி சுற்றிய கதை அமைக்க பட்டதால் அவரோடைய நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்த உள்ளது.

சிவா அடுத்து இயக்கவிருக்கும் கார்த்தி படத்திலும் தமன்னா தான் ஜோடியாம். சிறுத்தைக்கு பிறகு கார்த்தியின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் தடம் போரள ஆரம்பித்தது. இதனால் வெறுப்பு அடைந்த நம்ம ஹீரோ இதே கூட்டணி மறுபடியும்  சேர வேண்டும் என்று சிவாவிடம் சொல்லியுள்ளார்.

ஆகவே தமன்னாவிக்கு  அதிஷ்ட காற்று புயலாய்  விச ஆரம்பித்த உள்ளது..

Thursday, January 23, 2014

விஜய்யின் 58வது லிஸ்டில் இயக்குனர் சிம்புதேவன்..!



ஜில்லாவின் வசூல் வெற்றி விஜய்யின் அடுத்து படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது நடிக்கவிருக்கும் முருகதாஸ் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்க அவரது 58வது படத்துக்கான இயக்குனர் யாரு என்று கேள்வி கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக் .

விஜய்யின் 58 படத்தை P.T செல்வகுமார் தயாரிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்துக்கான இயக்குனர் தேர்வும் ஒரு புறம் நடைபெற்று கொண்டே தான் இருந்தது.

நாள்தோறும் இவர் இயக்க போகிறார் அவர் போகிறார் என பலரோடைய பெயர்கள் அடிபட்டன. கடைசியில் ஷங்கர் ரின் சிஷ்யன் சிம்பு தேவன் இயக்க போகிறார் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

சமிபத்தில் இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து போக உடனே தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கியுள்ளார் சிம்பு தேவன்.

இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிறது எனவும் இது ஒரு பக்கா பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்

உலகத்தின் அதி வேக இன்டர்னெட் டெஸ்ட் சக்ஸஸ்…!



நம்ம இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகினத்தோம் போட்டு கிட்டு இருக்கோம்,இது பற்ரி போன வருஷம் நான் சொன்னேன் 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு, அடுத்து கொஞ்ச நாள்ல சோனி ஜப்பான்ல 2ஜிபி ஸ்பீடு கொடுத்தையும் சொன்னேன், இப்ப லண்டன்ல நம்ம பழைய கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேத்து உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டாங்க.

அதாங்க கிலோபைட் போய் மெகாபிட்போய் ஜிகாபைட்டும் போய் கடைசியில டெராபைட்ல வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 – ஒரு லட்சத்து 83 ஆயிரத்து ஐநூறு= ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் – சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிஞ்சிடுற ஸ்பீடு.

இதை நேத்து பிரிட்டிஷ் டெலிகாம் லண்டன் மெயின் டவர்ல இருந்து – ஐபி ஸ்விட்ச் என்னும் இடத்தின் இடைவெளியான 410 கிலோமீட்டர் தூரத்துக்கு டெஸ்ட் பண்ணியிருக்காங்க – ஹைடெஃபினீஷன் படத்தை ஸ்ட்ரீம் பண்ணி டெஸ்ட் பண்ணிருக்காங்க் டெஸ்ட் சக்ஸஸ் – ஆல்காடெல் – லூசன்ட் இதற்க்கான உபகரணங்களை செஞ்சிருக்கு – வெகு சீக்கிரம் ஒரு 50 வருஷத்துக்குள்ள நம்ம இந்தியாவுக்கு ஸ்பீடா வந்திரும்னு நம்புவோம்னு ஒரு பெருமூச்சோட பை பை.

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி..!




அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை

இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

இதையடுத்து பேசிய சுவர்ணல்ட்சுமி”ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள்” என்கிறார்.இப்படி உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி சுவர்ண லட்சுமியை நீங்களும் வாழ்த்துங்களேன்!!