Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, January 6, 2014

தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களில் மட்டும் கலந்து கொள்ளும் சூர்யா..!



சமீபத்தில் நடைபெற்ற சிறைச்சாலை நகரின் பெயரில் உருவாகியுள்ள திரைப்பட விழாவுக்குச் சென்ற சூர்ய நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

காரணம் விழாவுக்கு வந்திருந்த சூது கவ்விய நடிகர் மீதே பெரும்பாலானவர்களின் கவனிப்பு மையம் கொண்டிருந்தது தானாம். தொடர்ந்து படங்களில் வித்தியாசம் காட்டி வரும் அந்த சூது நடிகரை விழாவுக்கு வந்திருந்தவர்கள் புகழ்ந்து தள்ள, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருத்தப் பட்டாராம் சூரிய நடிகர்.

எனவே, சூடு பட்ட அந்தச் சிங்கம் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்..



ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

பண்ணையாருக்கு பிப்ரவரி 7 ம் திகதி குறிக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு போன்ற படங்கள் கைவசம் இருக்க ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படமும் இவரது டைரியில் சேர்ந்துள்ளது.

இதன் விசேஷ செய்தி என்னவென்றால் படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.

டுவிட்டரில் விளையாடிய விஜய் - தனுஷ்



டுவிட்டரில் ஜாலியாக விளையாண்டு விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே ‘ஐ லவ் யூ ப்ரோ’ என்றும் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

அதில் தனுஷின் பின்பக்கம் நிற்கும் விஜய், ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரி இருந்தது. அதன் கீழே, உங்களைப்போல பல ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க இளையதளபதி இப்போது உங்களுக்கு லைவ் ஆக ஹாய் சொல்கிறார் என ஸ்டேட்டஸும் போட்டுள்ளார் தனுஷ்.

‘வா’ என மாறிய அருண் விஜய்யின் ‘டீல்’..!



அருண் விஜய் நடிக்கும் ‘டீல்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் நடிக்கும் படம் ’டீல்’.
சிவஞானம் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடிக்கிறார்.

சுறுசுறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் 'டீல்' என்ற படத்தின் தலைப்பினை 'வா' என்று மாற்றிவைத்துள்ளனர்.
தலைப்பு தமிழில் இல்லை என்பதால் இத்தலைப்பினை மாற்றியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

தமன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தள்ளிப்போகும் 'வீரம்'...!



வீரம்’ தெலுங்கு வெளியீடு இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வீரம் படம் ஜனவரி 10ம் திகதி வெளியாகவுள்ளது.

இதே நாளில் ‘வீரம்’ படத்தின் தெலுங்கு பதிப்பையும் முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஜனவரி 10ம் தேதி ஆந்திராவில் சங்கராந்தியை ஒட்டி மகேஷ்பாபுவின் ‘1’ படமும், ராம்சரண் தேஜாவின் ‘யவடு’ படமும் வெளியாகவிருப்பதால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘வீரம்’ தெலுங்கு டப்பிங்கை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வீரம் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு “வீருடொக்கடே” என்று பெயர் வைத்துள்ளனர்.

Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது

Wednesday, December 4, 2013

பிச்சைக்காரன் கேரக்டரில் வித்யாபாலன்!




தியா மிர்ஸா தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகும் படம் 'பாபி ஜஸூஸ்'. வித்தியாசங்களை விரும்பி ஏற்கும் வித்யாபாலன் இதில் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். 


இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் வித்யாபாலன்.


இந்தப் படத்திற்காக ஹோம் ஒர்க் செய்து நிறைய ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.


படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரனாக வித்யா மாறி இருக்கிறார். 


பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம்.


நிஜமாகவே அவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து காசு போட்டு மக்கள் கடந்துபோனார்களாம்.

நான் இன்னும் கன்னிப்பையன்(?)தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!



தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளர்.


பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் சல்மான் கான். மான்வேட்டை தொடங்கி அவர் ஆடாத வேட்டையே இல்லை எனலாம். அவர் குறித்த எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் பாலிவுட்டின் ஸ்வீட் ராஸ்கலாக சல்மான் இன்னும் கோலோச்சுகிறார்.


ஐஸ்வர்யா ராய் தொடங்கி சல்மானுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் அநேகம்பேர் உண்டு. அதிலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்த பின்னர் ஒருநாள் குடிபோதையில் ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு வெளியே நின்று சல்மான் கான் தகராறு செய்ததும், அதனைத் தொடர்ந்து தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத ஐஸ்வர்யா ராயின் தாயாரை கண்டபடி திட்டியும், ஐஸ்வர்யா ராயுடனான நெருக்கமான உறவுகள் பற்றியும் தொலைபேசியில் பேசி சண்டை போட்ட டெலிபோன் உரையாடல்கள்,  2006 ல் மும்பை பத்திரிகைகளில் எழுத்துவடிவில் பிரசுரிக்கப்பட்டு, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.


பாலிவுட் பிரபலங்களிடம் மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுவது குறித்த புகார் அதிகமாக வந்ததால், முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் தொலைபேசி உரையாடல்களை காவல்துறை ஒட்டுக்கேட்டது. அப்படி ஒட்டுக்கேட்டபோதுதான் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயுடன் பேசி சண்டைபோடும் உரையாடல்களும் பதிவாகி, அது வெளியே ஊடகங்களுக்கும் கசிந்துவிட்டது.


அந்த தொலைபேசி உரையாடல்கள் வெளியான பின்னர் சல்மான் கான் மீது பாலிவுட் வட்டாரத்தில் ஒருவித வில்லன் இமேஜே   உருவாகி விட்டது. இதனால் சிறிதுகாலம் தனது சினிமா உலக வாழ்க்கையில் சற்று சறுக்கலை சந்தித்தாலும், மீண்டும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இன்றும் பாலிவுட்டின் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் சல்மான் கான். அதே சமயம் அவருக்கும், முன்னணி நடிகைகளுக்கும் இடையேயான் கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.




இந்நிலையில் ஸ்டார் டி.வி.யில் வரும் 'காஃபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம்,கரண் ஜோகர் நடத்திய கல கல பேட்டியில் சல்மான் கான், தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும்  கூறியுள்ளர்.


அவர் இவ்வாறு கூறியதும் பேட்டி எடுத்த கரண் வியப்பு மேலிட, " அதாவது இன்னும் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதாக சொல்கிறீர்கள்... அப்படித்தானே..? " எனக் கேட்டதும், ஆமாம் என்று தலையை அசைக்கிறார் சல்மான்.


 "அப்படியானால் நீங்கள் பழகிய பெண்கள் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை?!" என்று கிரண் வெடி சிரிப்புடன் கேட்க, "அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள்...அவ்வளவுதான்!" எனக் கூறுகிறார் சல்மான்.


தொடர்ந்து பேசும் சல்மான், " இரவில் நான் தனிமையாக தூங்குவதையே விரும்புகிறேன்.ஸ்டூடியோக்களில் இரவில் தங்கினால் எனது படுக்கையில் யாரும் இல்லை என்பதை காட்டும்விதமாக சோபாவில் கால்களை விரித்தபடி தூங்குகிறேன்" என்று கூறுகிறார்.


அடுத்த கேள்விக்கு நகரும் கரண், 3 பாலிவுட்  நடிகைகளின் பெயர்களை கூறி, இவர்களில் யாரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு "ப்ரீத்தி ஜிந்தா!" என பதிலளிக்கிறார் சல்மான்.


 
தொடர்ந்து, "உங்கள் நெற்றிபொட்டில் யாராவது ஒருவர் துப்பாக்கியை வைத்து, ஒரு 'கே' (Gay) ஆணுடன் இருக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான், "இல்லை..முதலில் அப்படி ஒரு துப்பாக்கி எப்போதுமே செய்யப்படாது" என்று கூறிவிட்டு, பின்னர் அப்படி இருக்க வேண்டும் என்றால் கரணுடன் ( நிகழ்ச்சியை நடத்துபவர்) என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.



 "நீங்கள் விரும்புவது என்ன...விரும்பாதது என்ன..?" என்ற கேள்விக்கு, "பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை விரும்புகிறேன்; ஆனால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் இருப்பதை விரும்பவில்லை" என பதிலளித்துள்ளார் சல்மான். 

‘வீரம்’ படத்தோட ஒன்லைன் கதை என்னான்னு தெரியணுமா?



அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார்.


கிராமத்து கதைங்கறதால அண்ணன் தம்பி அஞ்சு பேருன்னு படத்தோட கதையும் கிராமத்துல இருக்கிற மாதிரி பாசமாவே அமைச்சிருக்காங்க.
படத்தோட கதை என்னன்னா, இப்படி அண்ணன் தம்பிகளான அஞ்சு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை, அராத்துன்னா அராத்து அப்படி ஒரு அராத்தாம். இப்படி கலாட்டாவானவங்களுக்கு மத்தியில தமன்னாவும், சந்தானமும் எப்படி வர்றாங்கன்றதுதான் படமேவாம்.


படம் ஃபுல்லாவே அஜித்துக்கு வேட்டி சட்டைதான் காஸ்ட்யூம். அவராவே விரும்பி நடிக்கிற கேரக்டர். படத்துல மருந்துக்குக் கூட பன்ச் டயலாக் கிடையாதாம்.நிச்சயமா வித்தியாசமான படமா இந்த ‘வீரம்’ படம் இருக்கும்னு சொல்றாரு டைரக்டர் சிவா…

ஏமாத்தினாங்க…அதான் படம் ஓடலை…‘நய்யாண்டி’ பற்றி நஸ்ரியா…



நய்யாண்டி’ என்றாலே தனுஷ் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ கண்டிப்பாக நஸ்ரியா ஞாபகத்திற்கு வருவார்.


அந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த புகழுக்காக அல்ல, அந்த படத்தின் இயக்குனர் மீது அளித்த புகாருக்காக, என்பதுதான் முக்கியம்.


மழை  விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். அது போல ‘நய்யாண்டி’ படப் பிரச்சனை முடிந்தும் நஸ்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


‘‘நய்யாண்டி’  படத்தில் நம்பிக்கை மோசடி செய்து விட்டார்கள். படத்தில் நடிக்க சம்மதிப்பதற்கு முன்பே ‘இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்’ என அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால், என்னை  ஏமாற்றி, ‘டூப்’ மூலம் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ‘நய்யாண்டி’யில் எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி.


இப்படியெல்லாம் சீட்டிங் பண்ணாம இருந்திருந்தாங்கன்னா, படம் நல்லா வந்திருக்குமோ என்னமோ, ” என்று பேட்டியளித்திருக்கிறார்.


எப்படியோ படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் நஸ்ரியாவுக்கு தமிழ்நாட்டுல நயா பைசா செலவில்லாம நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சி….

Tuesday, December 3, 2013

வெங்கட்பிரபுவுடன் இணையும் சூர்யா!



'மங்காத்தா' படம் முடிந்ததும் சூர்யாவிடம் கதை சொன்னார் வெங்கட்பிரபு.


ஆனால், அப்போது சூர்யாவால் வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க முடியவில்லை.


'மாற்றான்', 'சிங்கம் 2', படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா.


அதற்குப் பிறகே, கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் 'பிரியாணி' யை உருவாக்கினார்.


இப்போது மீண்டும் சூர்யாவை சந்தித்து ஒன்லைன் சொன்னாராம், வெங்கட்பிரபு.


அந்த ஒன்லைன் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.


''முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. ஏப்ரல்ல ஷூட்டிங் தொடங்கிடலாம்'' என்று சூர்யா உறுதியாக சொன்னதால், உற்சாகத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு.


சூர்யா புதியதாக ஆரம்பித்துள்ள டி2 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. 

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

 

'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம்.


கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது.


ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.


'பிரியாணி' படத்தினைப் போலவே இப்படமும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை தானாம். லிங்குசாமி படத்தினை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம் சூர்யா.