Sunday, December 22, 2013

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர்

இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம்.


பொறுமை இல்லை

‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள் பல கற்பனை யானதாகவும் மாறி வருவதையும் காண்கின்றோம்.

பரபரப்பு மிகுந்த இவ்வுலகில் எதையும் ஆழ உணர்வதற்கு மக்களுக்குப் போதிய நேரம் வாய்ப்பதில்லை; பொறுமையும் இருப்ப தில்லை. உண்டு செரித்த பின் மனிதனுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்து (வைட்டமின்), மாத்திரை வடிவிலேயே கிடைக்கும் என்றால் பிறகு உணவைத் தேடி அலைவானேன். அதுபோல்தான் எல்லாவற்றிலும். அதனால் ஆழ உணர்ந்து தெளிய வேண்டும் என்ற விருப்பமும் மக்களுக்கு வாய்ப்பதில்லை.


நம்பிக்கை குறைகின்றது

இத்தகைய சூழ்நிலையில் இயற்கையின் எல்லையில்லாத ஆற்றலை, அதன் அமைப்பை காரண காரியத் தொடர்பை மனிதன் அறிந்து போற்றுவதற்குரிய வாய்ப்பு இல்லை. எதையும் நேரில் கண்டோ, உற்று உணர்ந்தோ, சுவைத்து அறிந்தோ பழக்கப்பட்ட அவனுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதில் நம்பிக்கை விழுவதில்லை. எல்லாவற்றையும் இயக்குகின்ற பேராற்றல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தாலும் உணர்வதில்லை. அதனால் பாதிப்பு நிகழாதபோது நன்மைகள் நிகழாத போது, நிகழ்கின்ற பெருந்தீமைகளைத் தடை படுத்த முடியாதபோது அந்தப் பேராற்றலைப் பற்றி அவன் ஏன் கவலைப் பட வேண்டும்? அதனால் நம்புதற்குரிய கூறுகளும் குறைந்து வருகின்றன.


நிறையும் குறையும்

இதற்கும் மாறாக மனிதன் நேரில் காணு கின்ற வேறொரு மனிதனை நம்புகிறான். அவனது மனிதனது குணநலன்களை நம்புகிறான் பெரும்பான்மையான நல்ல குணங்களை உள்ள ஒரு மனிதனை உலகம் மதிக்கிறது. அவனைத் தனது வழி காட்டி யாகக் கொள்கிறது. வாழ்க்கையே ஒப்பிட்டுப் பார்க்கும் ஒன்று தான். அந்த ஒப்பீட்டில் சிலர் மனநிறைவு கொள்கிறார்கள். சிலர் மனக்குறைவு கொள்கிறார்கள். நாமும் உயர வேண்டுமெனச் சிலர் புதிய எழுச்சியோடு செயல்படத் தொடங்குகிறார்கள். முறையான வாழ்வை உடையவர்கள் மன நிறைவு கொள்வதும், முறையற்ற வாழ்வை உடையவர்கள் மனக்குறைவு கொள்வதும் இயல்பே.


புதிய வழி நல்லதாக இருந்தால்

மக்களின் அளவுகோலாக விளங்கும் எடுத்துக்காட்டான மனிதனின் அருங் குணங்களை ஆராய்ந்தால் உண்மையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இப்படிக் கால வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது இயல்புதான். ஒன்றில் இருந்த நம்பிக்கை வேறொன்றில் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் எப்படி மாறினும் அடிப்படையான அறங்கள் மாறுவதில்லை. மக்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதும், அற வழியில் வாழ வேண்டும் என்பதும் உயிர்களிடத்தில் அருள் காட்ட வேண்டும் என்பதும், என்றும் எங்கும் மாறாத ஒன்று. அதனாலேயே உலக இயக்கம் நடை பெறுகிறது.

மனிதப் பண்புகள் நிறைவந்தவர்களைச் சான்றோர் என்கின்றோம். சான்றோர் என்பதற்குரிய குணங்களை ஆராய்ந்தால் சாதாரண மனிதனும் சான்றோன் ஆவதற்குரிய வழி கிடைத்து விடுகின்றது. புதிய வழி நல்லதாக எளியதாக, காலத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதனைப் பின் பற்றுவதில் தவறு ஒன்றும் இருத்தற்கில்லை.


ஐந்து பண்புகள்

நம்முடைய முன்னோர்கள் சான்றோர்க்கு முதன்மையாக இருக்க வேண்டிய ஐந்து பண்புகளை வற்புறுத்திக் கூறியுள்ளார்கள். அவற்றுள் முதன்மையாக வேண்டப்படுவது அன்பு. தனக்கு வேண்டியவர்கள் என்றும் வேண்டாதவர்கள் என்றும் வேறுபாடு இன்றி எல்லாரிடத்திலும் அன்போடு நடந்து கொள்வது மனிதத் தன்மையின் பொது இயல்பு. இப்பொதுத் தன்மை பலரிடம் இல்லாத போது, இருக்கின்ற சிலர் நல்லவர்களாக – உயர்ந்தவர்களாகக் காணப் படுகிறார்கள். சிலரைக் கண்டால் மட்டும் இன்முகமும் வேறு சிலரைக் கண்டால் இன்னாமுகமும் காட்டுகின்றவர்கள் மனிதத் தன்மையிலிருந்து இழிந்து விடுகிறார்கள்.


எது நாணம்?

அடுத்து வேண்டப்படுவது பழி பாவங் களுக்கு அஞ்சுதலாகிய நாணம். செல்வச் செருக்காலும், செல்வாக்கு வாய்த்ததாலும் என்னால் எதுவும் முடியும் என்று நேர்மைக்கு மாறான செயல்களைச் சிலர் செய்கிறார்கள். ஆனால் அச்செயல் செய்வதற்கு அவர்கள் அஞ்ச வேண்டும். தூங்குகின்ற ஒருவனை ஒரு கோழைகூடக் கொன்று விடலாம். தன்னந்தனியாகச் செல்கின்ற ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஒருவன் கெடுத்து விடலாம். திறமையுள்ள ஒருவன் திறனற்றவர்களை எல்லாம் எதிர்த்து எதிர்த்து வெற்றி கொண்டு விடலாம். ஆனாலும் இவை களெல்லாம் நேர்மையான செயல்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும் இப்படி எண்ணிப் பார்த்துத் தவறு செய்யாமல் வாழ்கின்றவர்கள் உண்மையில் மனித சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். தங்களுடைய அற்ப வளத்தைத் தீய வழியில் பயன்படுத்துகிறவர்கள் அழிந்து போகிறார்கள். அந்த அழிவும் அவர்களாலேயே ஏற்பட்டு விடுகின்றது. ‘நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை, நாமாகவே தேடிக்கொள்வது’ என்பது நமது முன்னோர்கள் பட்டறிந்து மொழிந்ததாகும்.


ஒதுங்கி வாழ்கிறார்கள்

அன்பான உள்ளமும் நல்ல செயல்கள் செய்வதும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் போதாது. அவன் பிறருக்கு உதவுகின்றவனாகவும் விளங்க வேண்டும். நல்லவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். பிறர் நலம், பொதுநலம் பற்றி எண்ணுவதும் செய்வதும் இல்லை. நல்லவர்கள் ஒதுங்கி வாழ்வதே நாடு கெட்டழிவதற்கு ஒரு காரணமாகும். தங்களின் நற்பண்பால் பலருக்கும் வழி காட்டியாக அமைவதோடு வாழ்க்கையில் முடியாதவர்களுக்கு உதவ அவர்கள் தாமாக முன்வருதல் வேண்டும். முடிந்தவர்களுக்கு உதவ ஆயிரம் பேர் முன் வருவார்கள். ஏழைகளுக்கு? எதுவும் அறியாதவர்களுக்கு? அத்தகையவர்களைக் கைதூக்கி விடுவதே ‘ஒப்புரவு’ என்பதாகும். இந்த ஒப்புரவினைச் செய்கின்றவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்கோ விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பலரானால் நாடு நலம் பெறும் என்பது உறுதி.


வாய்ப்பளிக்க வேண்டும்

மனிதன் குறைவுடையவன். முழுமைத் தன்மை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலின் யாரேனும் சூழ்நிலையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டு ஏதேனும் ஒரு தவற்றைச் செய்துவிட்டால் அதை கொண்டே அவர்களை வாழ்நாள் முழுதும் குற்றவாளியாக்கி விடுதலும் கூடாது. அவர்களுக்கு வாய்ப்பளித்துத் திருத்துவதற்கு முயல வேண்டும். தன் பற்களை உடைத்தவனுக்குக் காந்தியடிகள் பாத அணி செய்து தந்ததை அனைவரும் அறிவர். அதற்குப் பிறகு அந்த அதிகாரி தான் செய்த தவற்றுக்கு நாணிச் சீர்திருந்தி யதையும் உலகு அறியும். இதுபோல் வாழ்வில் ‘கண்ணோட்டம்’ செலுத்தி உலகைக் களிவித்து வாழ்கின்ற பண்பு உள்ளோர் பெருக வேண்டும். அவ்வாறு இருப்போர் பலரானால், இப்பண்பு ஊர் தோறும் சிலருக்கு வாய்க்குமானால் மனித இனம் மாண்புறும் என்பதில் எவ்வித ஐயப் பாடும் இல்லை. இத்தகைய பண்புடையோர் நம் இதயங்களில் வாழாமல் இல்லை.


பொய் குறையக் கவலை குறையும்

எல்லாவற்றிற்கும் மேலாக வாய்மையைப் போற்றுதலாகும். பேசுதல் என்பது எளியவற்றுள்ளும் எளிமையான செயல். ஆனால் அதில்தான் அரிய கவனம் செலுத்துதல் வேண்டும். எல்லாவற்றிலும் உண்மையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்றைய நடை முறையில் பொய்யாமை போற்றப்படுவ தில்லை. மாறாக பொய்மை ஒரு கலை யாகவே வளர்ந்து விட்டது. பொய்யான புகழ்ச்சி, பொய்யான விருந்தோம்பல், பொய்யான பழக்க வழக்கங்கள், தனக்கு என ஒன்று. உலகின் பார்வைக்கு என வேறொன்று. இப்படிப் பொய்தவழும் உலகின் போக்குச் சொல்லும் தரமன்று. அதனால் ஏற்படுகின்ற தீமைகள் அளவிடற் கரியன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொய் இருக்கின்ற அளவிற்கு கவலைகள் இருக்கின்றன. பொய் குறையக் குறையக் கவலைகள் குறையும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதனால்தான் காந்தியடிகள் உண்மையை உணர்ந்து அதனைக் கடை பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தன் வாழ்க்கையையே வாய்மையைப் போற்றும் சோதனைக் களமாகக் கொண்டு வெற்றி கண்டார்.


மனிதனே தெய்வம்

இறைவனை எண்ணரிய குணங்களை உடையவன் என்கிறோம். தூய்மையே வடிவானவன் என்று போற்றுகின்றோம் அவனை உணர முடியாதவர்கள், உணர வாய்ப்பில்லாதவர்கள், ஏன்? உணர விரும்பாதவர்கள், மனிதர்களில் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களின் பண்பு நலன்களை எண்ணிப்பார்த்து அவர்களைப் போல் நாம் விளங்க வேண்டும் என்று விரும்புவதும், அவர்களின் பண்புகளை ஆராய்ந்து அவற்றைப் பின்பற்றுவதும் சாலச் சிறந்ததாகும்.


நீ தான் மனிதன்

அன்பையும் நாணத்தையும் ஒப்புரவையும் கண்ணோட்டத்தையும் வாய்மையையும் உடையவர்களைச் சான்றோர் என்றார் உலகப் பெருமகனார் வள்ளுவர். இத்தகு குணங்களை வளர்த்துக் கொண்டால் தெய்வத்தைத் தேடி அலைய வேண்டாம் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்றார் பாரதி. அறிஞர்களின் கருத்துக்களைப் படித்து மகிழ்வதற்கும், பிறர்க்குச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்ற வழக்கத்தை மாற்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற் காகவே அவை எழுதப்பெற்றவை என்பதை உணர்ந்தால் தனி மனித நலத்தோடு சமுதாயமும் நலம் பெறும். அந்த நலம் வாய்க்கும் நாள் நம்மை நாம் உணரும் நாளாகும்.

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்


வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்

மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

காரணங்கள்

தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.

தீர்வுகள்

1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.

ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.

தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. (Uniqueness) ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.

“பெரியோரைப் பார்த்து
வியத்தலும் இலமே
சிறியோரைப் பார்த்து இகழ்தல்
அதனினும் இலமே”
-புறநானுறு

2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது, உறவுகள் இனிமையாகும்.

ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு, முக்கியத்துவம், அங்கீகாரம் இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.

மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள் உரைசலை உருவாக்கும்.

ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள், உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்


புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’

அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

நிறைவுரை
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

  நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!


வாழ்த்துக்கள்!

என்றும் உங்க ஹாப்பி

சீரியலால் தீ :-


சீரியலால் தீ :-

சீரியல் சுயமாய் சிந்திக்கும் ஆற்றலை தடை செய்கிறதாம் .ஒரு பெண் ஒரு நாளைக்கு பார்க்கும்  மொத்த சீரியல் அளவு அதாவது நேரம் சும்மார் நான்கு மணி நேரம். இந்த சீரியல் பற்றி யோசிக்கவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும்.  அடுத்த சீரியலை
எப்படி நேரம் ஒதுக்கி பார்ப்பது என்பதிலுமே இந்த சீரியல் பார்க்கும் பெண்கள் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் இவர்கள்
குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை குறைகிறது. தமது குழந்தை மீதும் பற்று குறைகிறது. தமது வேலைகளை சரியாக திட்டமிட்டு
செயல் படுத்த தவறி விடுகின்றனர் .அனவசியமாஹா  மின் இயதிரங்களை பாவித்து வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முயல்கின்றனர். இதனால் மின் செலவு அதிகமாகிறது .
அதோடு கூட ஒரே  இடத்தில   இருப்பதால்  நோய்  உண்டஹவும்  வாய்புகள் அதிகம்.   அதனால் சினிமாவை  விட சீரியல் நமது  சிந்தனைக்கு தீ வைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சிகரட் எனும் நல்ல பழக்கம்...!!!


எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று.

"நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட் பிடிக்காமல் இருந்தால், கல்லூரி கடைசி நாள் அன்று சிகரட் பிடிப்பதாக கூறினான்.

மூன்று வருடமும் நானும் சிகரட் பிடிக்கவில்லை, அவனும் பிடிக்கவில்லை. கடைசி நாள் அன்று அவன் சொன்ன படியே சிகரட் பிடித்தான். என்னையும் பிடிக்கச் சொன்னான். எவ்வளவோ முயன்றும் என்னால் மட்டும் முடியவில்லை.

பிறகு MCOM படித்தபோது, நாங்கள் எல்லோரும் கோவா டூர் சென்றோம். இரயில் திருச்சி ஜங்ஷனை தாண்டியதுமே எல்லோர் கையிலும் சிகரட், என் கையிலும்தான். ஆனால், என்னால் மட்டும் அந்த சுவையை உணரமுடியவில்லை.

இராணிப்பேட்டையில் என் நண்பன் ஒருவன், திடீரென 555 சிகரட் பாக்கெட் வாங்கினான்.

ஏனென்று கேட்டேன். அவன் கூறினான், " மாப்ளே, பையில 555 சிகரட் பாக்கெட் இருந்தா ஒரு ஸ்டேடஸ்டா" என்றான்.

அப்படி விளையாட்டாக ஆரம்பித்த அவன் பழக்கம் இப்போது விடமுடியாத பழக்கமாக மாறிவிட்டது. இன்னொறு வயதான நண்பருக்கு சிகரட்டே சரியாக பிடிக்க தெரியாது. ஆனால், பிடிப்பார். எப்படியென்றால், அவர் புகையை உள்ளே இழுக்க மாட்டார். ஆனாலும் ஒரு ச்செயின் ஸ்மோக்கர் போல் தன்னை காண்பித்துக்கொள்வார்.

ஒரு முறை நான் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது என்னை மிகவும் வற்புறுத்தி என்னை சிகரட் பிடிக்க வைத்தார்கள். நான் மீண்டும் முயற்சித்தேன். ஒரே இருமல் தொடர்ந்து. இரண்டு சிகரட் பிடித்தேன். பிறகு என்னவோ எனக்கு அந்த நல்ல பழக்கம் வாய்க்க வில்லை.

எனது பெரியப்பா ஒருவர் சாகும் வரை சிகரட் பிடித்தார். அவர் சிறு வயதிலிருந்தே சிகரட் பிடித்ததாக என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு சிகரட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு அந்த கால உடம்பு. அதனால், பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது சிகரட்டினால் ஏற்படும் தீமைகளை பார்க்கும்போது, படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளது.

ஏன் சிகரட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்?

01. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரட் பிடிப்பதால் இறக்கிறார்கள்.

02. வாழ்நாள் முழுவதும் சிகரட் பிடிக்கும் இருவரில் ஒருவர், இந்த பழக்கத்தினாலேயே இறக்கிறார். பாதி பேர் மிக குறைந்த வயதிலேயே இறக்கிறார்கள்.

03. நிறைய பேருக்கு புற்று நோய் சிகரட் பிடிப்பதால் வருகிறது.

04. ஹார்ட் அட்டாக் வருவதற்கும், ஸ்ட்ரோக் வருவதற்கும் காரணமாகிறது.

05. உயர்ந்த இரத்த அழுத்தம் வருவதற்கும் காரணமாகிறது.

06. லங்க் கேன்சர் வருவதற்கும் நெக் கேன்சர் வருவதற்கும் காரணமாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்றவாரம் கோலாலம்பூரில் ஒரு மீட்டிங்கில் ஒரு சுவீடன் நாட்டு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. மலேசியாவில் இப்போது ஒவ்வொறு சிகரட் பாக்கெட்டிலும் ஒரு போட்டோ போட்டுள்ளார்கள். அதில் ஒருவருடைய தொண்டையில் கேனசர் உள்ளதை படமாக சிகரட் பாக்கெட்டின் அட்டையில் போட்டுள்ளார்கள்.

அவர் என்னிடம் கேட்டார்,

" உங்கள் நாட்டில் இப்படி சிகரட் பாக்கெட் அட்டையில் போட்டோ உண்டா?" என்று.

" இல்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றேன்.

" என் மனைவிக்கு தெரியாமல் சிகரட் பாக்கெட் மறைப்பது கஷ்டமாக உள்ளது" எனக்கூறினார்.

நான் கேட்டேன், " ஏன் சார், அப்படி மனைவிக்கு பயந்து, கேன்சர் வரும் என்று தெரிந்தும் சிகரட் பிடிக்க வேண்டுமா?"

அதற்கு அவர் கூறிய பதில்:

" SOMETIMES CANCER CURES SMOKING"

பணம் மட்டும் தான் வாழ்கையா ???


பொதுவாக எனக்கும் எனது நண்பர்களுக்கும் பணம் பற்றி பெரிய விவாதமே அவ்வபோது எழுவது உண்டு .

பணத்தை பற்றி எனது எண்ணம் " பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று . ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது . உதாரணத்துக்கு உண்மையான அன்பு , கனிவான உபசரிப்பு மற்றும் பல " .

ஆனால் என் நண்பர்கள் சொல்லுவது " பணம் தான் முக்கியம் . பணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் . பணம் இல்லை என்றால் நம்மை விட்டு நண்பர்கள் உறவினர்கள் கூட பிரிந்து விடுவார்கள் "

இப்படிப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் நம்முடன் இருப்பதை விட நம்மை விட்டு பிரிந்து போவது நல்லது . அவர்களுக்காக நாம் ஒன்றும் வருத்தப்பட வேண்டியது இல்லை என்பது என் எண்ணம். 


"ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான் " என்று சொல்லப்படுவது உண்டு .

அப்பா அம்மாவுக்கு !!!

குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றனர். ஒரு சூதுவாதும் தெரிவதில்லை. வளர வளர சூழலிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கின்றனர். எனவே, மழலைகளுக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். நாம் பல சமயம் நம் தவற்றை உணராமல் குழந்தையின் மேல் அவற்றைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அவற்றைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன், "சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே?" என்றும், "எதற்கு இந்த ஒப்பாரி?" என்றும், "மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்களைப் பலமுறை கேட்கும் குழந்தையின் மனதில் அவை பதிந்து விடுகின்றன.

குழந்தையின் ஒவ்வொரு புலனுக்கும் உகந்த சூழலை அமைப்பது அவசியம். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள், கடவுளின் படங்கள், தேசத் தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.

காதுகளுக்கு தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற நல்ல கருத்து செறிந்த பாடல்களை அடிக்கடிக் கேட்கும் வாய்ப்புத் தர வேண்டும்.

அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும்.

இந்தக் காட்சி நமக்குப் புதிதல்ல: பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி, "தத்தித் தத்தி" நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது, "வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்கு 'கொல் கொல்'லுன்னு இருமல் வேறு" மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப, மன்ஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள், " அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்" என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல், எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் சொல்லிக் கொடுக்க, பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட, சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.

தூய தமிழ் சொற்களும்... பேச்சு வழக்கு சொற்களும்...

அ - தமிழ் மொழியின் முதல் எழுத்து : அழகு:

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்

அஆ - வியப்பைக் குறிக்கும் விட்டிகைச் சொல்.
அஃக - சுருங்க : குறைய : நுண்மையாக.
அஃகம் - தானியம் : விலைப் பொருள் : முறைமை : ஊறுநீர் : சுருக்கம்.
அஃகரம் - வெள்ளெருக்கு : கிரியை.
அஃகல் - நுணுகுதல் : குவிதல் : குறைதல் : சுருங்குதல் : வற்றுதல் : வறுமை.

சிரித்த முகம்; சிடுமூஞ்சி – இதற்கும் ஜோதிடம்


பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.

லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.

லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். சிலருக்கு லக்னத்தில் சனி இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள குரு (வக்ரம், நீச்சமடையாத, பாவிகள் சேர்க்கை பெறாத) அந்த சனியைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எதிரில் இருப்பவர் பைத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு சிரிப்பார்கள்.

மேலும் 5, 9வது இடத்திற்கு உரிய கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சிரித்த முகத்துடன் இருப்பார். ஏனென்றால் 5ஆம் இடம் ஒருவரின் மனப்பான்மையை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு உரியவர் லக்னத்தில் இருந்தால் அவர் பலவற்றையும் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவெடுப்பவராகவும், கோபத்தை எளிதில் வெளிப்படுத்தாதவராகவும், எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்.

சிரித்த முகம், சிடுமூஞ்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், உடலமைப்பு, குணம் ஆகியவற்றைப் பற்றியும் சங்க கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இப்ப நீங்கள் சிரித்த முகமா ? சிடுமூஞ்சியா ?  

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!


1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே Huh?அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா Huh?

2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க Huh?
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில  எங்க மேனேஜர்ஜ  பார்த்த எனக்கு ரோபோ சங்கர்  ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)


3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்குHuh?


4-மூக்குலயும்  வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா Huh?

5-கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் Huh?


6- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை'' மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா Huh?

7-விளம்பரங்களில் ''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா Huh?

8-numberஜ ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர எழுத்தே இல்லையே Huh?

9-சின்மா DVDய  reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா Huh?

10-அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா Huh?

11-கண்ணு பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக பார்க்க முடியுமா Huh?

இதுக்கு எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும் Cry
 Grin

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க...


           குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோற்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கனும்.
சாப்பிடும் பொழுது:நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.சாப்பிடும் முன்பு கைகளை கழுவனும் என்று கைகளை கழுவி விடுங்க.இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க)காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்)அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க। 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.
டி.வீ பார்க்கும் பொழுது:சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.வீண்ணாக லைட் ,ஃபேன், டீ.வீ ஓடுவைதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க்க சொல்லிக் கொடுங்க.சில குழந்தைகள் கூச்ச சுகபாவமாக இருப்பாங்க அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைமிஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கனும். அப்பறம் தான் பள்ளி படிப்பு...

ரிப்ளையோ ரிப்ளை..!


"ப்ளீஸ் கால் மீ"ன்னு பொண்ணுங்களுக்கு பசங்க மெஸேஜ் அனுப்பினா, பொண்ணுங்க என்னென்ன ரிப்ளை பண்ணுவாங்க?

1) ஸாரிப்பா, நான் நல்லா தூங்கிட்டேன். (ஏந்திரி அஞ்சலி ஏந்திரி)

2) ஸாரிடா, அப்பா பக்கத்துல இருந்தாங்க அதான் கூப்பிடலை. (இல்லேன்னா மட்டும்?)

3) பேட்டரி சார்ஜ் இல்லம்மா. (அதுவும் போச்சா?)

4) நெட்வொர்க் ப்ராப்ளம், கால் போக மாட்டேங்குதுடா செல்லம். (அது நெட்வொர்க் ப்ராப்ளம் இல்லம்மா, பேலன்ஸ் ப்ராப்ளம்)

5) பேலன்ஸ் இல்ல, 50 ருபீஸ் டாப் அப் போட்டு விடேன் கண்ணா. (500-ஆ போட்டியின்னா ரொம்ப சந்தோஷம்)

6) ஸாரியா, மெஸேஜ லேட்டாதான் பாத்தேன். (நாங்க பண்ணினா மட்டும் ஃபர்ஸ்ட் ரிங்குலயே எடுக்குறீங்க?)

7) படிச்சுட்டு இருந்தேன் டியர். (அம்மா அய்யேயெஸ்ஸூ)

8 ) இன்னைக்குன்னு பாத்து ஹலோ டியூனுக்கு காசு எடுத்துட்டாண்டா புஜ்ஜிக்குட்டி. (அவுங்க டோரா, நாம புஜ்ஜி. அதாவது கொரங்கு)

9) பேலன்ஸ் மைனஸ்ல இருக்கு ஹனி. (என்னைக்கு அது ப்ளஸ்ல இருந்துச்சு?)

10) மொபைல வீட்ல வச்சுட்டு கோயிலுக்கு போயிட்டேன்பா. (பக்திமயமான ஃபேமிலி கேர்ளாம்)

11) கஸின் வந்திருந்தாம்பா, அதான் கொஞ்சம் பிஸியா இருந்தேன் (வில்லன்ன்ன்ன்ன்... அவன் வந்தா நீ ஏன் பிஸியாகுற?)

12) க்ளாஸ்ல இருந்தேன்டா (க்ளாஸ்ல நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது?)

இதத்தவிர வேற ஏதாவது ரிப்ளை வந்துதுன்னா, காலைல பீக் அவர் டிராபிக்ல நடு மெளன்ட்ரோடுல நிக்க நான் தயார். (ஆனா கால் மட்டும் வரவே வராது)

கொத்து பரோட்டா..


தேவையான பொருட்கள்:-


பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்கள்


பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை:-


10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)


9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....


1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?


சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?

அல்வா - To cheat
ஆத்தா - Mother
அபேஸ் - Loot adiththal
அல்பம் - A silly/cheap dude
அண்ணாத்தே - The elder brother
அண்ணி - Anna's figure
அப்பீட்டு - Unsuccessful
அசத்தல் - Kalakkal
பஜாரி - A not-so-friendly figure


பந்தா - Pillim
பேக்கு - Fool
பாடி - Muscular Machi
சித்தீ - Aunty Figure
டப்ஸா/டூப் - Lie
தேசி குஜிலி - An Indian figure in US
தில் - Courage
தூள் - Super
தம் - To smoke
டாவு - Site seeing


டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)
டமாரம் - Deaf
டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
ப்ரீயா வுடு மாமே - Forget it
காலி - Appeettu
குஜிலி - Figure
குரு/தல - Head of the gang
குஜால்ஸ் - Having fun with Gujilis
கானா - Rap song sung by Machis
கலீஜ் - Dirty


கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from
ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
ஜொள்ளு - Bird watching
ஜில்பான்ஸ் - Gujaals
ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.
ஜுஜிபி - Easy
ஜில் - An exclamation on seeing a Takkar figure
ஜல்சா - Same as Gujaals
காட்டான் - Uncivilized/ Rude Machi
கேணை - Idiot
கிக்கு / மப்பு -Intoxicated/under influence


கலக்கல்ஸ் - To cause a flutter
கேணை பக்கிரி - Friend of ushar pakri
கிண்டல் - To make Fun
காக்கா அடிக்கிறது - Putting soaps to someone
கே.எம்.எல். - Kedacha Mattum Labam
குட்டி - Figure
குடும்ப பிகர் - Homeloving Gujli
குடும்ப பாட்டு - A song with which machis identify themselves
குள்ளுஸ் - A short machi
லட்டு - Allva


லூட்டு -to steal
மாம்ஸ் - One cool dude
மாங்காய் - Fool
மச்சி - Maams
மண்டை - A sharp guy
மேரி - feminine of Peter
மாவு - refer O B.
நச்சுன்னு - Bull's eye
நம்பிட்டேன் - I don't believe you
நாட்டு கட்டை - A well-built village figure
நாட்டான் - Villager


நாமம் - To cheat
நைனா - Father (courtesy Telugu)
கடலை - Machi talking to a Gujili or vice versa
ஓபி - To waste time
ஒண்ணரை அணா - Worthless
பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli
பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in
ஹை-பி - english
பத்தினி - A figure who goes around the block
பக்கிரி - A shrewd dude
பேட்டை - Area
பிசாத்து - Cheap
பிலிம் - Show-off


பீலா - To lie
ராம்போ - A manly figure
சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time
சொங்கி - Lazy
சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick
(courtesy Movie:Thevar Magan)
டக்கர் பிகர் - Semma figure
தண்ணி - Liquor
தலைவர் - Leader
டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)
உஷார் பக்கிரி - Smart pakri
வெண்ணை - Fruit
வெயிட் பிகர் - A very attractive/rich figure
ராங்கு காட்டுறது -Acting indifferently

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க..

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.கனவுலகூட


8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க .... 

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. அதிகமான அளவில்

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க..

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேணுனாலும் செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருக்காங்க இல்லியா ....

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க...

அப்படீனா நீங்க உண்மையாவே காதலக்றீங்க ..........

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு



1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.

1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.

1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.

1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.

1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..

1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.

1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.

1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.

(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)

1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)

1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.

1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.

1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".

1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.

1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.

1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.

1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.

1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.

1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.

1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.

1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.

1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.

அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.

1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.

1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.

"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1970, சனவரி - இரமணி மறைவு.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

இன்டர்நெட்டைக் கண்ட்ரோல் செய்வது யார்..?


சைபர் யுத்தம் : CYBER WAR

அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இணைய வழி 'சைபர்' தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் நோக்கில் செயற்படக்கூடிய தனி அலுவலகம் ஒன்றை வெள்ளை மாளிகையில் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். உலக வல்லரசுகளின் இராணுவ கணனி நெற்வேர்க்குகளை செயலிழக்க வைக்கும் முயற்சியில் உலகில் ஆயிரக்கணக்கான ஹக்கர்(Hacker) குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஹக்கர் குழுக்களால் உடைக்க முடியாதபடி அரசாங்கத்தின் கணனிகள் மற்றும் அவற்றின் வலையமைப்புகளுடனான தொடர்புகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை இந்த அலுவலகம் ஒருங்கிணைக்கும். இந்த திட்டத்திற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு இந்த சைபர் யுத்தத்தில் தோற்ற அனுபவமும் உண்டு. 1999 மார்ச் மாதம் Yugoslavia வில் ஆகாய தாக்குதலை தொடங்கி மூன்று தினத்தில் NATAவின் கம்பியூட்டர் நெற்வேர்க்கை "Ping Attack", "e-mail Bomb" என்னும் முறைகளை பாவித்து நடத்தப்பட்ட யுத்தத்தில் சேர்வியா கம்பியூட்டர் ஹக்கர் குழு வெற்றி கொண்டது. இதற்கு காரணம் அமெரிக்கா இவ்வாறான சைபர் யுத்தத்திற்கு தன்னை அப்போது முழுமையாக தயாராக்கவில்லை.
Ping Attack - இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணனியை Chain Ping செய்வதன் மூலம் அந்த கணனியை செயலிழக்க செய்தல்.
e-mail Bomb - அதிக தகவல் கொள்ளளவுடன் ஆயிரக் கணக்கான மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் மின்னஞ்சல் விநியோகிக்கும் கணனியை செயலிழக்க செய்தல்.
அண்மையில் இலங்கையின் இராணுவ இணையத்தளம் ஹக்கர் குழு ஒன்றினால் கைப்பற்றப்பட்டது நினைவில் இருக்கலாம். இப்படியான சைபர் யுத்தம் ஒரு ஆயுத யுத்தத்தைப் போன்று பாரிய இழப்புக் கொண்டதாகவும் அமையும். இதனை அடிப்படையாக கொண்டு வெளிவந்த DIE HARD 4 திரைப்படம் சைபர் யுத்தத்திற்கு சிறந்த உதாரணம்.
பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.

இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.
1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.
2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.
3.ஸ்பைவேர் அழித்தல்.
இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.


உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.

அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.


சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .

இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்ப்யூட்டர் பத்து வகை...!


கம்ப்யூட்டர் பத்து வகை

பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கையில் உடனே நாம் அன்றாடம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகிறது. லேப் டாப் என்று சொல்கையில் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பலருக்கு அவர்களின் அதிகாரிகள் அல்லது வளரந்து வேலை பார்க்கும் அல்லது உயர் கல்வி படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இன்னும் சிலவகைக் கம்ப்யூட்டர்களும் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.


மைக்ரோ ப்ராசசர் பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் கம்ப்யூட்டர் என்று கூறலாம். ஆனால் நாம் எண்ணுவதெல்லாம் மவுஸ் அல்லது கீ போர்டு வழியாக தகவல்களை அனுப்பி ஏதேனும் ஒரு நவீன வழியில் அவற்றை ஒரு செயல்முறைக்கு உள்ளாக்கி முடிவுகளைத் திரையில் காட்டும் சாதனத்தை மட்டுமே கம்ப்யூட்டர் எனக் கொண்டுள்ளோம். இங்கு அதன் வகைகளைப் பற்றி காணலாம்.


1. பெர்சனல் கம்ப்யூட்டர்: ஒரு நேரத்தில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பொதுவான பல பயன்பாடுகளுக்கான ஒரு கம்ப்யூட்டர். மேக் ( Mac) என்பதுவும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் தான். ஆனால் நம்மில் பலர் விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை மட்டுமே பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கிறோம்.


2. டெஸ்க்டாப்: எங்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாத, ஒரு மேஜை மீது வைத்துப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரே டெஸ்க் டாப் கம்ப்யூட்டர். பொதுவாக இதனை ஒரு நிலையான இடத்தில் வைத்துப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு அதிக செயல்திறனை அளிக்கின்றன. அத்துடன் தகவல்களை ஸ்டோர் செய்திடும் வசதியையும் தருகின்றன.


3. லேப்டாப்: இதனை நோட்புக் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கின்றோம். எங்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களே லேப்டாப் கம்ப்யூட்டர்கள். டிஸ்பிளே, கீ போர்டு, பாய்ண்ட்டிங் டிவைஸ் அல்லது ட்ரேக் பால், ப்ராசசர், மெமரி, ஹார்ட் டிரைவ் என அனைத்துக் கொண்டு பேட்டரியின் திறனிலும் செயல்படக் கூடிய கம்ப்யூட்டர் இது. ஒரு பெரிய ஹார்ட் பவுண்ட் புத்தகத்தைக் காட்டிலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இப்போது இதன் அளவும் குறைந்து வருகிறது.


4.பி.டி.ஏ.(PDA): பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (Personal Digital Assistant)என்பதன் சுருக்கம். இதில் மெமரியைத் தர ஹார்ட் டிஸ்க்குக்குப் பதிலாக பிளாஷ் டிரைவ் பயன்படுகிறது. இதில் வழக்கமாக கீ போர்டு இருக்காது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் வழி தகவல் உள்ளீடு செயப்படும் செயல்பாடு தான் இதன் அடிப்படை. ஒரு பேப்பர்பேக் நாவலைக் காட்டிலும் சிறியதான அளவில் இது கிடைக்கிறது. எடையும் குறைவு; பேட்டரியில் இயங்குவது. இந்த அளவில் சற்று அதிகமான அளவில் உள்ளதை ஹேண்ட் ஹெல்ட் (Handheld Computer) கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகிறது.


5. ஒர்க் ஸ்டேஷன் (Work Station): இதுவும் ஏறத்தாழ ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் தான். ஆனால் சாதாரண பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர் இதில் இருக்கும். கூடுதல் மெமரி தரப்பட்டிருக்கும். பல பணிகளை இணைத்துச் செயல்படுத்த கூடுதல் சிறப்பு வழிகள் இதில் உண்டு. முப்பரிமாண கிராபிக்ஸ் பேக்கேஜ் மற்றும் கேம்ஸ் தயாரிக்கும் பணிகளை இதில் மேற்கொள்ளலாம்.


6.சர்வர் (Server): ஒரு நெட்வொர்க் மூலமாக பல கம்ப்யூட்டர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் தகவல்களைத் தரும் கம்ப்யூட்டர். பொதுவாக சர்வர்களாகச் செயல்படும் கம்ப்யூட்டர்கள் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர்களைக் கொண்டிருக்கும். ஏகப்பட்ட அளவில் ராம் மெமரியும், அதே அளவிற்கு ஈடு கொடுக்கும் அளவில் ஹார்ட் டிஸ்க்கும் கொண்டிருக்கும்.


7. மெயின் பிரேம் (Mainframe): கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய அறை முழுவதையும் எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். ஏன், ஒரு மாடிக் கட்டடத்தில் முழு தளத்தையும் எடுத்துக் கொண்டிருக்கும். பிற்காலத்தில் கம்ப்யூட்டர்களின் அளவு குறைந்து கொண்டே வர மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்பது என்டர்பிரைஸ் சர்வரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது கூட பெரிய நிறுவனங்களில் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்ற சொல்லை அவர்களின் கம்ப்யூட்டர் களுக்குப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஒரு நேரத்தில் பல லட்சக்கணக்கான தகவல்களை செயல் பாட்டிற்கு எடுத்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தகவல்களைத் தரும் திறன் கொண்டவை.


8. மினி கம்ப்யூட்டர் (Mini Computer): இந்த சொல் தற்போது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் மெயின் பிரேம் கம்ப்யூட்டருக்கும் இடை நிலையில் இயங்கி வந்த கம்ப்யூட்டர்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மிட் ரேஞ்ச் சர்வர் (Mid Randge Server)என்றும் அழைக்கின்றனர்.


9. சூப்பர் கம்ப்யூட்டர் (Super Computer): கோடிக்கணக்கில் பணம் செலவழித்தால் தான் இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைக்க முடியும். சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் தனிக் கம்ப்யூட்டர்களாகச் செயல்பட்டாலும் கூடுதல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் இணையாகச் செயல்படும் கூட்டுக் கம்ப்யுட்டராகத்தான் இது அமையும். கிரே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய கம்ப்யூட்டர்களைத் தயாரித்துத் தருகிறது.


10. வேரபிள் கம்ப்யூட்டர் (Wearable Computer): கம்ப்யூட்டர் உலகில் அண்மைக் காலத்தில் வந்து அனைவரின் பாராட்டுதலைப் பெற்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இது. ஒரு கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அன்றாட அத்தியாவசிய செயல்பாடுகளை (email, database, multimedia, calendar/scheduler) ஒரு கடிகாரம், மொபைல் போன், ஏன் ஆடைகளில் கூட கிடைக்கும்படி அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதே வேரபிள் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அணியக் கூடிய கம்ப்யூட்டர்.


மேலே கூறப்பட்டவை எல்லாம் பொதுவான கம்ப்யூட்டர் வகைகள். இப்போது கம்ப்யூட்டரை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத வகைகளில் எல்லாம் கொண்டுவரும் முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம் டச் ஸ்மார்ட் பிசி ( Touch Smart PC) என்ற ஒன்றை அண்மையில் இயக்கிக் காட்டியது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஐ–போன் போலவும் செயல்படுகிறது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.


ஜப்பான் நாட்டின் மட்சுசிஸ்டா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனம் டப் புக் (Toughbook) என்ற பெயரில் போர்ட்டபிள் கம்ப்யூட்டர் ஒன்றை மருத்துவ செயல்பாடுகளுக்கென வடிவமைத்து வழங்கியுள்ளது. இது குறைந்த மின் சக்தியில் இயங்கும் Atom ப்ராசசரில் இயங்குகிறது. எல்.சி.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. அடுத்து ஒவ்வொருவரும் முதலிலேயே பணம் செலுத்திவிட்டு செலுத்திய கடையிலிருந்து தங்கள் கைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்து பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள் வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


மீடியா சென்டர் பிசி (Media Center PC) என்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இது ஆடியோ மற்றும் வீடியோ ரிசீவரையும் கொண்டுள்ளது. இதில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடும் வசதி உண்டு. இதனால் இது ஒரு ஹோம் தியேட்டராகவும் செயல்படுகிறது.


NEC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அண்மையில் திரவத்தின் மூலம் சூடு தணியும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கிக் காட்டினார். Valuestar VW790 என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரின் சிபியு மற்றும் ஹார்ட் டிரைவ் திரவத்தைப் பயன்படுத்தி குளிர்ச்சி அடையும் வகையில் பிளேட்டுகளைக் கொண்டு இயங்குகின்றன. இந்த வகையில் வரக் கூடிய அடுத்த நிலை பெர்சனல் கம்ப்யூட்டர் லேப் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான இடத் தையே டேபிளில் எடுத்துக் கொள்ளும்.

மதுபானத்தை விட குளிர்பானம் ஆபத்துங்க...



“மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்!’ சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், “ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட, 85 சதவீத வாய்ப்பு உள்ளது.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற “ப்ரக்டோஸ்’ சத்துள்ள ஜூஸ்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரிடம், “இன்டர்நெட்’ மூலம் சர்வே நடத்தப்பட்டது. அவர்களில் பலரும் 12 ஆண்டுக்கு மேல், குளிர்பானம் குடித்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் பழக்க வழக்கம், உடல் நிலையை வைத்துத் தான் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!


சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் சிலவேளைகளில் யாகூவின் இன்னொரு பின்னடைவாக கூட அமையலாம் என கணணி வல்லுனர்களால் ஊகங்கள் எழுந்துள்ளன.

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...



1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்


இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை. அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால் அது வரை கூட தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள், இதை நம்மில் பலர் பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் இதை போல காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம்


எடுத்துக்காட்டிற்கு மைக்கேல் தனது ரசிகரிடம் நீ இவனை கொன்று விடு என்று கூறினால் பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்கு காட்டுத்தனமான ரசிகர்கள். ஒருவரை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களை கவருபவராக இருந்து இருக்க வேண்டும். இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லை. அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர். இவருக்கு தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனி தனியாக பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். இவரின் ஒரு அசைவிற்காக கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்

அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர், இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால் அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம் இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள் அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம் வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார், இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எளிய பயிற்சி‏....


    எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி

உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்

மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)

இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க

சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!

தன்னம்பிக்கை வளர வழி...!


தன்னம்பிக்கை வளர வழி...!

எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.

வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையை விடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!!!



          மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

இதோ ஒரு சில டிப்ஸ்.....


யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.


மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

“நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !...


“நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! அழாகான நகைகள்  ஆரோக்கியம் காக்குது!"  

நகைகள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் வர்ம சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்!   எனவே நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும்.  எனவே நலவாழ்வு நம் நகைகளில்!  என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள் தாக்காமல் தடுக்கலாம் என அறிவோம்.  இடுப்புக்கு மேலே தங்க நகைகளும்,  இடுப்புக்கு கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும்.  வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச் செய்யும்.


கண்கள் காக்கும் கம்மல் :-

காது குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது. காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும் போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம்.  இதனால் மன அமைதி கிடைக்கிறது.  மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட ஏதுவாகிறது.  எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன் வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப் படித்தியுள்ளார்கள்!


வாரம் இருமுறை எண்ணெய் குளியல் :-

 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.  திருமணமான தம்பதிகள்  இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.  சளி, தலைவலி,  உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும்.  



கண்கள், மூளைக்கு பலமூட்டும் கரிசலாங்கண்ணிக் கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும்.

 மாலைக் கண் நோயில் நீலியும்,  சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை பெறலாம்.

வியர்வை நாற்றம் போக...


குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

நலமான குழந்தை...


கருவில் இருக்கும் குழந்தைக்கு

தாயின் மனநிலையே .. சேயின் மனநிலை”

என்கின்றனர் சித்தர்கள்.

தாயின் சிறிய அதிர்வு கூட குழந்தையைப் பாதிக்கும்.

புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கருவிலே குழந்தையின் மனநிலை வளர்ச்சியடைகிறது என்பதை அறியலாம். அபிமன்யுவின் தாய் கிருஷ்ணனின் உபதேசத்தை நல்ல மனநிலையில் உட்கிரகித்ததால்தான் அபிமன்யு கருவிலே உபதேசம் பெற முடிந்தது.

நல்ல குழந்தைக்கு தாயின் மனநிலையே முக்கிய காரணமாகிறது.

தாய் உறங்கும் வேளையில் கூட கருவில் இருக்கும் குழந்தை வெளியுலக சஞ்சாரங்களை கிரகித்துக்கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் நல்ல வார்த்தைகளையும், மெல்லிய இசையையும் கேட்க வேண்டும் என்றும் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சமீப பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் கருவிலே குழந்தையின் உடல் மட்டுமின்றி, மனநிலையும் வளர்ச்சியடைவதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருப்பதை படித்திருப்பீர்கள்.

கருவிலிருந்து குழந்தைகளை நோயின்றி பாதுகாத்து வருவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். இதனால்தான் சித்தர்கள் கருவுற்ற தாய்க்கு பல கஷாய மருந்துகளைக் கண்டறிந்து சொன்னார்கள். இந்த கஷாயங்களை கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திற்கு எந்த கஷாயம் அருந்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினர். பழங்காலத்துப் பெண்கள் இந்த கஷாயங்களை அருந்தி பல குழந்தைகளை அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்தனர்.

தாயின் மனநிலை உடல் நிலை இரண்டுமே குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். கருவுற்ற பெண்களை இதனால்தான் தாய் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்தப் பெண் ஒரு ராணி போல் தாயாரால் பராமரிக்கப்படுகிறாள். கருவுறும் காலத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலை மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்க முடியும்.

 கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்? இந்த வளைகாப்பின்போது அந்தப் பெண்ணுக்கு அனைவரும் வளையல் அணிவித்து சந்தனம் பூசும்போதும், உற்றார் உறவினர் வாழ்த்தும்போதும் அவளது மனம் ஆனந்தமடையும். அப்போது உடலானது புத்துணர்வுபெறும். இதனால் குழந்தை கருவில் நன்றாக வளரும்.

கருவுற்ற பெண்கள் மனதில் தயக்கம், பயம், ஏக்கம் எதுவுமின்றி இருக்க வேண்டும்.

வேலை காரணமாக நகரங்களுக்கு வந்து தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள் கருவுற்ற காலத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது நல்லது. அப்போதுதான் அப்பெண்ணின் மனதில் தனக்கு போதிய பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவும், தேவையான ஓய்வும் வேண்டும்.

ஆனால் நவீன உலகில் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தங்களின் பொருளாதாரத் தேவையை எண்ணியே அலைகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது சிறிது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்...

அழகிய குறிப்புகள்...



   ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

· மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

· நீர் அருந்த வேண்டும். சீரகம் கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

· இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில் அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

· கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

· அதிகம் குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.

· முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

· வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

· முகத்தில் பருக்கள் தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.

· இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல் ஜொலிக்கும் .

· மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

· திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.

· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

· தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே!

*மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

*மிகவும் துயரமானது மரணமே!

*மிகவும் அழகானது அன்புணர்வே!

*மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

*மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

*மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

*மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

*மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

தேவையான மூன்றுகள்?


இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.

ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.

பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.